Followers
Tuesday, January 16, 2024
முன்னோர் படையல்
Monday, January 15, 2024
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Friday, April 14, 2023
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வணக்கம்!
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதக கதம்பம் பதினான்காம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது. தொடர்ச்சியாக ஆதரவு தரும் நல்ல நட்புகளுக்கு நன்றி.
நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Friday, January 20, 2023
தை அமாவாசை
வணக்கம்!
நாளை தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்படும். தங்களின் குடும்பத்தில் உள்ள முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்ய பட இருப்பதால் அவர்களின் பெயர் மற்றும் குலதெய்வ பெயர் அனுப்பி வைக்கலாம். தனித்தனியாக செய்யபடும். பிரசித்தி பெற்ற கோயிலும் வழிபாடு அவர்களுக்காக செய்ய படுகிறது. கட்டணமாக ஒரு குடும்பத்திற்கு 1000 ரூபாய் செலுத்த வேண்டும். குறைந்த கட்டணம் மற்றும் நிறைவான பூஜை செய்யப்படும். உடனை அனுப்பி வைக்கவும்.
நன்றி
ராஜேஷ்சுப்பு
Sunday, December 11, 2022
கட்டண சேவை
வணக்கம்!
ஒவ்வொரு வருடமும் நாம் கட்டண பதிவு நடத்திக்கொண்டு வருகிறோம். கட்டண பதிவில் வருகின்ற கட்டணத்தில் நாம் ஏதாவது ஒரு நல்ல காரியங்களுக்கு செலவு செய்வது உண்டு. அம்மன் கோவில் கட்டிக்கொண்டு வருவதால் அதற்கு கட்டண சேவையில் வருகின்ற பணத்தை செலவு செய்ய இருக்கிறோம்.
ஜாதக கதம்பம் உங்களுக்கு பிடித்து இருந்தால் அதன் முழுமையான நல்ல கருத்துக்கள கட்டண சேவையில் இணைந்து பயன்பெற்று கொள்ளுங்கள்.
நன்றி
ராஜேஷ்சுப்பு
Wednesday, August 3, 2022
அம்மன் பூஜை
வணக்கம்!
ஆடி மாதத்தில் வரும் அம்மன் பூஜையில் அனைவரும் பங்கு கொண்டு அம்மன் அருள் பெறுங்கள். அம்மன் பூஜைக்கு தங்களால் முடிந்த காணிக்கையை அனுப்பி வையுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Sunday, July 24, 2022
ஆன்மீகம் ஏன்?
வணக்கம்!
ஆன்மீகம் எதற்கு என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவரிடம் உரிய விளக்கத்தை அளித்தேன். உரையாடலின் ஒரு பகுதியை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நாம் எது எல்லாம் நம்மை காப்பாற்றும் என்று ஓடிக்கொண்டிருக்கும் அனைத்தும் நம்மை காப்பாற்றாது. நிறைய சம்பாதித்து விட்டோம். நம்மை சுற்றி நிறைய பேர் உள்ளனர். நமக்கு மரியாதை இருக்கிறது. அரசியல் செல்வாக்கு இருக்கிறது. இப்படி நிறைய இருப்பது அனைத்தையும் மரணம் உங்களை விட்டு பிரித்து விடும். இது எதுவும் உங்களோடு வராது.
நாம் உடலில் துணி இல்லாமல் பிறந்தோம். எதுவும் கொண்டு வரவில்லை. போகும் போது எதுவும் கொண்டு செல்ல போவதில்லை. இந்த உலகில் சேர்க்கும் பொருட்கள் எதுவும் உங்கள் கூட வரப்போவதில்லை.
நீங்கள் செய்யும் தியானம் அருள் இதனை மட்டுமே உங்களோடு வரப்போகிறது என்று புத்தர் சொல்லி உள்ளார். அழிவு இல்லாத ஒன்றை பெறுவதற்கு ஆன்மீகம் தேவை என்பதால் ஆன்மீகத்தை நாட வேண்டும்.
இந்த உலகில் உள்ள அனைத்து பொருட்களும் இறைவன் நமக்கு தந்தது அதனை பயன்படுத்தி கொள்ளலாம். அது உங்களோடு வராது.
பொருட்களை எல்லாம் பயன்படுத்தி கொண்டாலும் அதன் மீது ஈர்ப்பு வேண்டாம். உங்களோடு வரும் அருளுக்கு ஆன்மீகம் தேவை.
நன்றி
ராஜேஷ்சுப்பு