Followers

Tuesday, May 4, 2010

ராசிகளின் பொது பலன் - 3


துலாம்

துலாம் பிறந்தவர்கள் செல்வந்தவர்களாகவும் மக்கள் செல்வம் உடையவராகவும் இருப்பார்கள். உயர்ந்த நாகரிகத்தை விரும்புவராகவும் ஆடம்பரமாகவும் இருப்பார்கள். அதைப்போல் நல்ல ரசனைமிக்கவராகவும் இருப்பார்கள். நண்பர்களிடத்தில் மிகுந்த மரியாதை உடையவராகவும் இருப்பார்கள். இவர்களுக்கு இவர்களின் வளர்ச்சியை கண்டு எதிரிகள் உருவார்கள். இவர்கள் குடும்பத்தை விட்டு அடுத்த குடும்பத்தில் தலையிட மாட்டாரகள்.வண்டி வாகனம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகத்தில் பிறந்தவர்கள் படி படியாக முன்னுக்கு வருபவர்கள்.எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.தைரியமாக எந்த செயலையும் செய்வார்கள். பெரிய வேலைகளை தந்திரத்துடன் செய்வார்கள். அடுத்தவர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படும்.காய்ச்சல் அடிக்கடி வரலாம்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் சிவந்த உடம்புடனும்,அழகிய கண்களுடன் இருப்பார்கள்.தனுசு ராசியின் அதிபதி குரு என்பதால் இவர்கள் திருடபவர்களையும், ஏமாற்றுபவர்களையும் எளிதில் அடையாளம் கண்டுபிடிப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் நடுத்தர வயதில் கஷ்டபடுவார்கள். இவர்களுக்கு சிறுவியாதிகள் வரலாம்.புத்திர பாக்கியம் குறைவு இருக்காது. நறுமண பொருட்கள் மீது நாட்டம் அதிகமாக இருக்கும்.


4 comments:

ப.கந்தசாமி said...

ஆஜர் போட்டுக்கிறேன்.

rajeshsubbu said...

// Dr.P.Kandaswamy said...
ஆஜர் போட்டுக்கிறேன்.//
எனக்கு முதன்முதலாக comments எழுதியதற்க்கு மனமார்ந்த நன்றிகள் அய்யா.

shanmugam said...

nice and interesting work keep it up shanmugam.

shanmugam said...

nice work and very interesting
shanmugam