Followers

Tuesday, August 24, 2010

இரண்டாம் வீடு



இரண்டாம் வீடு என்பது குடும்ப ஸ்தானம்.தன ஸ்தானம். வாக்கு ஸ்தானம் எனப்படும். இரண்டாம் வீட்டை வைத்து என்ன பலன் கூறலாம் என்று பார்க்கலாம். முதலில் இரண்டாம் வீட்டு அதிபதி யார் அவர் எங்கு இருக்கிறார். இரண்டாம் வீட்டை எந்த கிரகங்களின் பார்வை இருக்கிறது என்று பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் பலன் சரியாக வரும். இரண்டாம் வீடு என்பது ஒருவரின் பணநிலமை. வங்கியில் இருக்கும் பணம் மற்றும் தங்க நகைகள் குறிக்கும். குடும்பம் எப்படி இருக்கும் குடும்பத்தில் அமைதி இருக்குமா அல்லது குடும்பத்தில் கலவரம் இருக்குமா ஒருவர் எப்படி பேசுவார் திக்கிதிக்கி பேசுவார அல்லது வேடிக்கையாக பேசுவார அல்லது பேசவே மாட்டாரா என்று கூறலாம். ஒருவருடைய கண்பார்வை எப்படி இருக்கும் என்பதும் பற்றியும் கூறலாம்.

ஒருவருக்கு குழந்தை பாக்கியத்தையும் இந்த வீட்டை வைத்து சொல்லலாம் ஒருவருக்கு குழந்தை பாக்கியத்ததை கொடுக்கும் வீடு 5 ஆம் வீ்டு ஆனால் குழந்தை பாக்கியம் என்றால் ஒரு நபர் குடும்பத்தில் கூடுகிறார் என்று அர்த்தம் குடும்பத்தின் நபர்களை குறிப்பது இரண்டாம் வீடு இரண்டாம் வீடு நன்றாக இருந்தால்தான் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் இரண்டாம் வீடு கெட்டால் குழந்தை பாக்கியம் இருக்காது. இப்பொழுது புரிகிறதா இரண்டாம் வீட்டின் பயன் என்ன வென்று.

அதைப்போல் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை என்றால் ஏன் என்று இரண்டாம் வீட்டை வைத்து பார்க்க வேண்டும். இரண்டாம் வீட்டின் அடுத்த பண்பு இளைய சகோதரத்தின் விரையம். எப்படி இது சாத்தியம் இளைய சகோதரத்தைப் பற்றி கூறுவது மூன்றாம் வீடு மூன்றாம் வீட்டிற்க்கு 12 ஆம் வீடு இரண்டாம் வீடு அல்லவா அதனால் அது மூன்றாம் வீட்டிற்க்கு விரையம் ஆகிறது. இளைய சகோதரத்தின் விரையம் மரணம் ஆகியவற்றை காட்டும். அவர் எப்படி இறப்பார் எப்படி பணத்தை செலவு செய்வார் ஆகியவற்றை காட்டும் வீடு இரண்டாம் வீடு

இரண்டாம் வீட்டை வாக்கு ஸ்தானம் என்று கூறினேன் அல்லவா அதைப்பற்றி பார்ப்போம் இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் கடினமாக பேசுவார் கேது இருந்தாலும் பேச்சு கடினம் இருக்கும். புதன் இருந்தால் நன்றாக பேசுவார். நல்ல கிரங்கள் இருந்தால் பேச்சு நன்றாக இருக்கும்.

இரண்டாம் வீட்டை தன ஸ்தானம் என்றும் கூறுவது எப்படி என்று பார்ப்போம் நமக்கு வரும் வருமானம் அதாவது பொருளாதார வளர்சி எப்படி என்று காட்டுவது இரண்டாம் வீடு. இரண்டாம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் தீயகிரகங்கள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும். பொருளாதார வளர்ச்சியை பார்க்கும் போது 10 ஆம் மற்றும் 11 வீட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் 6 ஆம் வீட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் 6 ஆம் வீடு ஜாதகர் செய்வது சுயதொழிலா அல்லது அடிமைதொழிலா என்று தெரியவரும். இவற்றையேல்லாம் கணக்கில் கொண்டுதான் தன ஸ்தானத்தை முடிவு செய்யவேண்டும்.

இப்பொழுது 2 ம் வீட்டு அதிபதி எந்தெந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

முதல் வீட்டில் இருந்தால் நன்றான குடும்ப வாழ்க்கை அமையும் சுயமாக சம்பாதித்து முன்னுக்கு வருவார்.

இரண்டாம் வீட்டில் இருந்தால் குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மொத்தத்தில் கொடுத்துவைத்தவர்.

மூன்றாம் வீட்டில் இருந்தால் சகோதர் மூலம் வருமானம் கிடைக்கும.

4 ஆம் வீட்டில் இருந்தால் வீடு வாகனம் மூலம் வருமானம் உண்டு.

இரண்டாம் வீட்டு அதிபர் 5 ல் இருந்தால் அவருக்கு திடிர் என்று பணவரவு இருக்கும் லாட்டரி அல்லது ரேஸ் மூலம் பணவரவு இருக்கும்.

இரண்டாம் வீட்டு அதிபர் 6 ல் இருந்தால் வேலையின் மூலம் பணவரவு இருக்கும்.

இரண்டாம் வீட்டு அதிபதி 7 ல் இருந்தால் அவரின் மனைவி அல்லது கணவன் மூலம் வருமானம் இருக்கும் சிலருக்கு அந்நிய நாட்டின் மூலமாக வருமானம் இருக்கும்.

இரண்டாம் வீட்டு அதிபர் 8 ல் இருந்தால் அவ்வளவு நல்லதல்ல ஏன் என்றால் 8 ஆம் வீடு மறைவு ஸ்தானம் ஆகும்.

இரண்டாம் வீட்டு அதிபர் 9 ல் இருந்தால் தந்தை வழியாக பணம் வரும் அல்லது அந்நிய நாட்டின் மூலமாக பணவரவு இருக்கும்.

இரண்டாம் வீட்டு அதிபர் 10 ல் இருந்தால் தொழில் செய்து சம்பாதிப்பார்.

இரண்டாம் வீட்டு அதிபர் 11 ல் இருந்தால் நல்ல பணவரவு இருக்கும். அண்ணன் மூலமாகவும் பணவரவு உதவி இருக்கும்

இரண்டாம் வீட்டு அதிபர் 12 ல் இருந்தால் பணம் விரையமாகும்.

இரண்டாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் கண் பார்வையில் கோளாறு இருக்கும். அதைப்போல் 7 ம் வீட்டு மூலம் நன்றான மனைவி அமைந்தாலும் இரண்டாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் இருவரையும் தனித்தனியாக பிரித்து வைத்துவிடும். ஒருவருக்கு இரண்டாம் வீட்டு அதிபதியின் தசா புத்தியில் மரணம் ஏற்படும். மரணத்தைப் பற்றி எழுதும் போது முழுவதும் எழுதுகிறேன்.

இரண்டாம் வீட்டை வைத்து அண்ணனின் வீட்டைப்பற்றி கூறலாம். எப்படி என்றால் 11 ம் வீடு அண்ணனின் வீடு 11 ம் வீட்டில் இருந்து 4 ம் வீடு ஜாதகரின் இரண்டாம் வீடு அல்லவா அதனால் அண்ணனின் வீடு எப்படி இருக்கும் என்று கூறலாம். அதைப்போல் தாயின் வருமானத்தைப்பற்றியும் கூறலாம் எப்படி என்றால் 4 ம் வீடு தாய் ஸ்தானம் 4 ம் வீட்டிற்க்கு 11ம் வீடு ஜhதகரின் இரண்டாம் வீடு அல்லவா அதனால் தாயாரின் லாபம் எப்படி என்றும் கூறலாம். இதுவரை 2 ம் வீட்டின் காரதுவத்தைப்பற்றி பார்த்தோம் இனி அடுத்த வீடு இதுவரை பொறுமையாக படித்தற்க்கு மிக்க நன்றி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  


Thursday, August 5, 2010

வீடுகளின் தன்மைகள்





முதல் வீடு

இதுவரை நாம் பொதுவானபலன்களை மட்டும் பார்த்தோம். இப்பொழுது ஜாதகத்தில் ஒவ்வொரு வீட்டையும் பார்க்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் என்ன என்ன குணங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.

முதலில் முதல் வீட்டுக்கு என்ன குணங்கள் என்று பார்ப்போம். முதல் வீட்டை எப்படி கண்டுபிடிப்பது. ஜாதகத்தில் ல என்று போட்டிருக்கும் அது தான் முதல் வீடு. அது தான் ஒருவரின் தலைபகுதி. அவர் முகம் எப்படி இருக்கும். குணம் எப்படி இருக்கும். உயரம் எவ்வளவு. அவர் வாழ்க்கையில் எந்தளவு முன்னேறுவார் என்று காட்டும். இதை மட்டும் வைத்து பலன் சொல்லகூடாது.

லக்கினத்தின் மீது எந்த கிரகத்தின் பார்வை விழுகிறது. லக்கினம் சென்று அமர்ந்த இடம் எல்லாத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பலன் சரியாக வரும்.

சிலபேருக்கு லக்கினம் கெட்டு இருந்தாலும் மற்ற வீட்டின் கிரகங்கள் மூலம் நல்ல வாழ்க்கை அமையும். அதனால் அனைத்து வீட்டின் தன்மைகளும் கணக்கில் கொண்டு பலன் சொல்ல வேண்டும். லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால் நல்லது. கெட்ட கிரகங்கள் இருந்தால் பல துன்பங்களை அனுபவிக்கவேண்டும்.

இப்பொழுது லக்கினாதிபதி சென்று அமரும் பலன்களைப்பற்றி பார்க்கலாம். லக்கினாதிபதி முதல் வீட்டில் இருந்தால் ஆட்சியில் இருக்கிறார் என்று அர்த்தம். அதனால் நல்ல ஆயுள் இருக்கும் கஷ்டம் இல்லாத வாழ்க்கை அமையும். நல்ல மரியாதையுடன் வாழ்க்கை நடத்தபவராகவும் இருப்பார்.

லக்கினாதிபதி 2 ஆம் வீட்டில் இருந்தால் சுயசம்பளத்தில் குடும்பத்தை நடத்துபவராகவும் நல்ல குடும்ப வாழ்க்கையும் அமையும். 2 ஆம் வீடு குடும்பம் ஸ்தானம் ஆகையால் குடும்பம் மூலம் வருமானத்தை பெறலாம்.

லக்கினாதிபதி 3 ஆம் வீட்டில் இருந்தால் மூன்றாம் வீடு தைரியம் ஸ்தானம் அதனால் மிகுந்த தைரியசாலியாக இருப்பார்கள். தம்பி மூலம் வருமானம் இருக்கும். அடிக்கடி சிறு பயணங்கள் ஏற்படும்.

லக்கினாதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நன்றாக இருப்பார் தாய் மூலம் வருமானம் இருக்கும். கல்வி நன்றாக வரும். கல்வி என்றால் பள்ளி படிப்பு நன்றாக இருக்கும். உயர்கல்விக்கு வேறு வீட்டை பார்க்க வேண்டும். நல்ல வீடு அமையும். தாய்வழியில் நன்றாக உதவி இருக்கும்.

லக்கினாதிபதி 5 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல குழந்தை பாக்கியம் அமையும். குழந்தை மூலம் நல்ல பெயர் கிடைக்கும். தெய்வ ஆற்றல் கிடைக்கும். மத வழிபாடு சத்சங்கம் செய்தல் ஆகியவை கிடைக்க பெறும். குலதெய்வம் அருள் கிடைக்கும்.

லக்கினாதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் உடல் நோய் உடையதாக இருக்கும் அல்லது அடிக்கடி மருத்துவச் செலவு வைக்கும். 6 ஆம் வீடு சத்துரு ஸ்தானம் அதனால் விரோதிகள் மூலம் தொந்தரவு இருந்துக்கொண்டே இருக்கும். பொதுவாக 6 ஆம் வீட்டில் லக்கினாதிபதி இருப்பது நல்லதல்ல.

லக்கினாதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் மனைவியும் மூலம் சொத்துக்கள் கிடைக்கப்பெறும். மனைவியின் சம்பாதியத்தில் வாழ்பவராகும் இருப்பர். அடிக்கடி வெளியில் சுற்றபவராகவும் இருப்பார்கள்.

லக்கினாதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் நீண்ட ஆயுள் இருப்பார் ஆனால் மிகுந்த வறுமையுடன் குடும்பத்தை நடத்துபவராகவும் இருப்பார்கள். கடன் தொல்லை இருந்துகொண்டு இருக்கும். ஒரு சிலர்கள் உடல் நோய் இருக்கும்.

லக்கினாதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் தகப்பனாரின் ஆதரவை பெற்றவராவார். தந்தையார் நன்றாக இருப்பார் அதைபோல் முன்னோர்களின் ஆசி பெற்றவராவார். சிலர் வெளிநாடுகளில் சென்று வருவார்கள். தெய்வ அருள் கிடைக்கும்.

லக்கினாதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். தொழில்துறையில் வளர்ச்சி இருக்கும். அரசாங்க உதவி கிடைக்க பெறுவார்கள். உறவினர்கள் மூலம் மதிக்கப்படுவார்கள்.

லக்கினாதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் வாழ்க்கை முழுவதும் நல்ல நிலையில் இருப்பார்கள் . நல்ல தொழில் அமையும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட ஆயுள் இருக்கும்.

லக்கினாதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் அவ்வளவு நல்லதல்ல எவ்வளவு வருமானம் கிடைத்தாலும் செலவு செய்துவிடுவார்கள். எந்த வேலையும் ஒழுங்காக செய்ய மாட்டார்கள். வேலையில் இருந்தால் ஒரு இடத்தில் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள். அடிக்கடி இடம் மாற்றல் ஆகும். சோம்பேறி என்று பெயர் எடுப்பார்கள்.


பார்க்கலாம் ...

Tuesday, August 3, 2010

திதி



முன்பு எல்லாம் நாள்களை திதி என்று தான் அழைப்பார்கள். திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தொலைவு தான். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். தினமும் சூரியனைவிட்டு சந்திரன் 12டிகிரி விலகிசென்றுகொண்டிருக்கும். பௌர்ணமி அன்று சந்திரன் சூரியனலில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருக்கும். அமாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள் பௌர்ணமியில் இருந்து அம்மாவாசை முடிய 15 நாட்கள் ஆக மொத்தம் 30 நாட்கள்.

அமாவாசைக்கு அடுத்த நாள் பெயர் பிரதமை அதற்கு அடுத்த நாள் துதியை மூன்றாம் நாள் திருதியை 4 ஆம் நாள் சதுர்த்தி 5 ஆம் நாள் பஞ்சமி 6 ஆம் நாள் சஷ்டி 7 ஆம் நாள் சப்தமி 8 ஆம் நாள் அஷ்டமி 9 ஆம் நாள் நவமி 10 ஆம் நாள் தசமி 11 ஆம் நாள் ஏகாதசி 12 ஆம் நாள் துவாதசி 13 ஆம் நாள் திரியோதசி 14 ஆம் நாள் சதுர்தசி 15 ஆம் நாள் பௌர்ணமி இவ்வாறு பெயர் வைத்து அழைப்பார்கள்.

சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது சிறிதாக வளர்வதால் எல்லா திதிகளும் வளர்பிறை திதிகள் எனப்படும். இந்த வளர்பிறை திதிகளை சுக்கில பட்ஷ திதிகள் என அழைக்கிறார்கள். இவை அனைத்தும் நல்ல திதிகள் ஆகும். பௌர்ணமியில் இருந்து வரும் திதிகளை கிருஷ்ணபட்ச திதிகள் அதாவது தேய்பிறை திதிகள் எனப்படும்.

சுபகாரியங்கள் செய்ய ஆகாத திதிகள் பிரதமை, சஷ்டி, ஏகாதசி, துவிதியை, சப்தமி, துவாதசி ஆகிய திதிகளில் சுபகாரியங்கள் செய்ய ஆகாது. அஷ்டமி திதியும் கெட்ட திதி என்று கூறுகிறார்கள். அந்த திதியிலும் நல்ல் காரியங்கள் செய்யலாம். ஆனால் வியாழகிழமை வரும் அஷ்டமியில் மட்டும் செய்யக்கூடாது.