Followers

Thursday, March 17, 2011

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை !!!




1. வாழ்க்கை ஒரு சவால்

அதனை சந்தியுங்கள்.


2. வாழ்க்கை ஒரு பரிசு

அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.


3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்

அதனை மேற்கொள்ளுங்கள்.


4. வாழ்க்கை ஒரு சோகம்

அதனை கடந்து வாருங்கள்.


5. வாழ்க்கை ஒரு துயரம்

அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.


6. வாழ்க்கை ஒரு கடமை

அதனை நிறைவேற்றுகள்.


7. வாழ்க்கை ஒரு விளையாட்டு

அதனை விளையாடுங்கள்.


8. வாழ்க்கை ஒரு வினோதம்

அதனை கண்டறியுங்கள்.


9. வாழ்க்கை ஒரு பாடல்

அதனை பாடுங்கள்.


10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்

அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


11. வாழ்க்கை ஒரு பயணம்

அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.


12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி

அதனை நிறைவேற்றுங்கள்.


13. வாழ்க்கை ஒரு காதல்

அதனை அனுபவியுங்கள்.


14. வாழ்க்கை ஒரு அழகு

அதனை ஆராதியுங்கள்.


15. வாழ்க்கை ஒரு உணர்வு

அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.


16. வாழ்க்கை ஒரு போராட்டம்

அதனை எதிர்கொள்ளுங்கள்.


17. வாழ்க்கை ஒரு குழப்பம்

அதனை விடைகாணுங்கள்.


18. வாழ்க்கை ஒரு இலக்கு

அதனை எட்டிப் பிடியுங்கள்.


பகவத்கீதை முதலில் சூரியபகவானுக்கே உபதேசிக்கப்பட்டது என்று படித்த ஞாபகம் அதனால் இதை எழுதினேன். இப்பொழுது சூரியன் இரண்டாம் வீட்டில் இருக்கும்போது என்ன பலன் என்று பார்க்கலாம்.


சூரியன் சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பணம் குவியும். செல்வாக்கு பெருகும் பலம் குறைந்து சூரியன் அமர்ந்தால் பணத்தை இழக்க நேரிடும் படிப்பு குறைவு ஏற்படும், முரட்டு தனமான பேச்சு ஏற்படும்.இரண்டாம் வீட்டில் இருக்கும் சூரியனால் குடும்ப நலத்தை பெறுவது குறைவாகும்.


மூன்றாம் வீட்டில் இருக்கும் சூரியனால் நல்ல வீரனாக இருப்பார்கள். நல்ல செல்வவளம் இருக்கும். தாய் நலம் பாதிக்கப்படும். தாய்க்கும் மகனுக்கும் உறவுநிலை திருப்திகரமாக இருக்காது.


பார்க்கலாம் ...

அன்புடன்

ராஜேஷ்சுப்பு




No comments: