Followers

Friday, September 30, 2011

அனுபவம்



வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு இதை பதிவு ஏற்றுகிறேன். நீங்கள் எல்லாரும் தினமும் வந்து சென்று இருப்பீர்கள் அதற்க்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது பணி காரணமாகத்தான் எழுதமுடியவில்லை.

நான் சோதிடம் சம்பந்தமாக எழுத ஆரம்பித்ததே பல சோதிட பதிவுகளை படித்ததால் நாமும் இந்த சோதிடம் சம்பந்தமாக தெரிந்ததே எழுதவேண்டும் என்று தோன்றியதால் இந்த பதிவை ஆரம்பித்தேன். ஏன் என்றால் இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குட்டி சோதிடர்களாகவே ஒரு நபர் இருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒவ்வொரு நாள்களிலும் இன்று என்ன நாள் என்ன நட்சத்திரம் என்ன திதி இந்த ராசிக்கு என்ன பலன் என்று ஒவ்வொருவருக்கும் தெரிய ஆரம்பித்தவிட்டது. இது மிகவும் சந்தோஷபடவேண்டிய விசயம். என்னுடைய ஆசையும் அதுவே.

உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு என்ன ராசி என்ன நட்சத்திரம் என்ன தசை நடக்கிறது என்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று உங்களால் முன்கூட்டியே தெரியபடத்தலாம். தேவையற்ற நஷ்டத்தையோ விரயத்தையோ தவிர்க்க முடியும்.

பல மக்கள் வியாபாரத்தில் தோல்வியை சந்திப்பது கெட்ட நேரத்தில் தொழில்களை ஆரம்பிப்பது தான். கெட்ட நேரத்திலோ அல்லது கெட்ட தசையில் ஆரம்பிப்பததால் தான் அதனால் நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் அல்லது நல்ல விசயங்கள் எவை இருந்தாலும் நேரம் பார்த்து செய்யுங்கள். நேரம் என்று சொல்லுவது சோதிடத்தைதான். சில பேர் வாழ்க்கை முழுவதும் செய்யும் தொழில் அனைத்தும் தோல்வி அடைவது. கெட்ட நேரத்தில் ஆரம்பிப்பதுதான்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: