Followers

Sunday, July 24, 2011

செவ்வாய்



செவ்வாய் 1 ல் இருந்தால் தலையில் அடிபடும். செவ்வாய் ஒன்றாம் வீட்டில் இருந்து 7 ம் பார்வையாக 7 ம் வீட்டை பார்ப்பதால் திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்படும். செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் மூர்க்கதனமாக கோபம் வரும். தாயாருக்கு தீங்கு விளைவிக்கும். கோபம் அதிகரிக்கும். இளம்தோற்றமாக காணப்படும். உடம்பில் உஷ்ணம் காரணமாக கட்டி ஏற்படும். நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள். தலையில் அடிப்படும். ஏதாவது விதத்தில் தலையில் அடிப்படும். செவ்வாய் தசையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாக்கு சொந்த வீடாக அல்லது உச்ச வீடாக இருந்தால் நல்லது நடக்கும்.

செவ்வாய் 2 ம் வீட்டில் இருந்தால் வாக்கில் கடுமை இருக்கும். பேச்சில் சண்டை வரும். செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ உச்சவீடாக இல்லாவிட்டால் அவர் சொல்லே அவருக்கு விரோதமாக ஆகும். கையில் காசு தங்காது. செவ்வாய் இரண்டில் இருப்பதால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள். கண்ணில் தொந்தரவு இருக்கும். செவ்வாய் பலம் பெற்று இருந்தால் நல்லது நடக்கும். செவ்வாய் இரண்டில் இருப்பதால் தோஷம் ஏற்படும்.

செவ்வாய் 3 ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். காதில் தொந்தரவு இருக்கும். செல்வம் நிறைய கிடைக்கும். நல்ல அறிவாற்றல் கிடைக்கும். உடம்பு நல்ல உறுதியாக இருக்கும். இளைய சகோதரருக்கு கெடுதல் செய்யும். சிலபேருக்கு இளைய சகோதர,சகோதரிகள் இருக்க மாட்டார்கள். 3 ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய்நலம் கெடும்.

செவ்வாய் 4 ம் வீட்டில் இருந்தால் தாய்வீட்டின் சொத்து கிடைக்கும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவு இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். 4 ஆம் வீட்டு செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு குறையும். மார்பில் வலி ஏற்படும்.

செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். புத்தி மங்கும். குழந்தைகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வயிற்றுவலி ஏற்படும். எதிரிகளால் தொல்லை வரும். பணவரவு இருக்காது. 5 ஆம் வீடு செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ அல்லது உச்சவீடாகவோ இருந்தால் தடைகள் அனைத்தும் அகலும். 5 ஆம் வீடு நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று காட்டும் இடம் ஆகையால் செவ்வாய் 5-ல் இருந்தால் சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.

செவ்வாய் 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றிகொள்ளும் தைரியும் இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். செவ்வாய் காமம் அதிகமாக இருக்கும். தாய்மாமனுக்கு தொல்லை தருவார். நல்ல செரிக்கும். இரத்தம் மாசுபடும் அதனால் உடலில் கட்டி ஏற்படும். நல்ல கற்றவர்களிடம் தொடர்பு ஏற்படும். புகழ் ஏற்படும். 6 ஆம் வீட்டு செவ்வாயினால் பெரும் பொருட்செலவு ஏற்படும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு





Saturday, July 9, 2011

சந்திரன் தொடர்ச்சி 2



இன்று ஒரு ஜாதகத்தை பார்க்கலாம். இந்த ஜாதகத்திலும் சந்திரன் எட்டாம் பாவத்தில் தான் நிற்கிறது. இவர் வேலை செய்வது அரசாங்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இந்த ஜாதகருடைய அம்மாவிற்க்கு 2 வருடம் முன்பு ஒரு ஆப்பிரேசன் நடைபெற்றது. இப்பொழுது நன்றாக உள்ளார் இவருக்கு 6 ஆம் வீட்டு அதிபதி சந்திரன் 8ல் அமர்ந்து உள்ளது. அடிக்கடி ஜலதோஷம் ஏற்படுகிறது. அம்மாவிற்க்கு இவர் மேல் நல்ல பாசமாக உள்ளார்.


9-ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம் நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும்.

10-ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை தருவார்.

வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்னுவார். தாய்வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டுபண்னுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

11-ல் உள்ள சந்திரன் மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும்.

12-ல் உள்ள சந்திரன் பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை மங்க செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு




Friday, July 8, 2011

ஆன்மீகம் என்னும் சக்தி


மனிதனுக்கும் மட்டும் தான் ஆன்மீகம் என்னும் சக்தியை உணர அதிக வாய்ப்பளித்து இருக்கிறான். மற்ற உயிரனங்கள் தான் வாழ்ந்தால் போதும் என்று உணவை மட்டும் தேடிக்கொண்டு இருக்கின்றன. 

மனிதனுக்கு உணவை மட்டும் தேடியதோடு தன் இறக்கபிறந்தவர்கள் அல்ல வேறு ஏதோ ஒன்று இருக்கின்றது என்ற ஒரு அறிவை வைத்திருக்கிறான் அதனால் தான் மற்ற உயிரனங்களில் இவன் வேறுப்பட்டு இருக்கிறான்.

தன் உணவை தேடுவதோடு இறைவனையும் தேடுகிறான். ஒரு சிலர் இறைவனை தேடுவதை விட்டுவிட்டு விலங்குகள் போலவே வாழ்ந்துக்கொண்டும் இருக்கிறார்கள். மாடுகள் போல் தலையை கீழே குனிந்து கொண்டு இருக்கிறார்கள் மேலே நிமிர்ந்து வானத்தை கூட பார்ப்பதில்லை.

ஏன் நாம் பிறந்தோம் எதற்க்காக இங்கு வந்தோம் என்று ஒரு நிமிடம் சிந்தித்தால் நமக்கு ஆன்மீகசக்தி வந்துவிடும்.நாம் வாழும் வாழ்க்கை வாழ்க்கை தானா என்று சிந்தித்து பார்க்கவேண்டும். எது மரணத்தை தருகிறதோ அது வாழ்க்கை அல்ல. மரணத்தை தராத ஒன்று இருக்கின்றதா என்று பார்த்தால் அது தான் ஆன்மீகசக்தியின் பிறப்பிடமாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சந்திரன் தொடர்ச்சி 1



சந்திரன் ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன என்று பார்த்து வருகிறோம் அதன் தொடர்ச்சி

சந்திரன் 7 ல் இருந்தால் ஆணாக இருந்தால் பெண்களிடம் பற்று இருக்கும். பெண்ணாக இருந்தால் ஆண்களிடம் பற்று இருக்கும். ஆண்/பெண் இருவரும் மூலம் பணவு இருக்கும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை இருக்கும். ஆண் /பெண் அழகாக இருப்பார்கள். சந்திரன் பலம் இழந்தால் ஆண் / பெண் உடல் பலன் குறையும். நோய் வரும்.

சந்திரன் 8- ல் இருந்தால் அறிவாற்றல் நல்ல இருக்கும். ஆனால் ஆயுளை குறைக்கும். சுக்கிலபட்சமாக இருந்தால் ஆயுள் நன்றாக இருக்கும். மனம் நிம்மதி இழந்து காணப்படும். சந்திரன் நன்றாக இருந்தால் நல்ல செல்வந்தராக இருப்பார்கள். பெரிய குடும்பத்தை உண்டுபண்னுவார்.

இப்பொழுது சந்திரன் 8- ல் இருக்கும் ஜாதகத்தை பார்க்கலாம்


இந்த ஜாதகர் சுக்கிலபட்சத்தில் பிறந்துள்ளார். இப்பொழுது 30 வயது ஆகிறது இவரின் படிப்பு பள்ளிக்கல்வியை மட்டும் தான் படித்துள்ளார். இவரின் அம்மாவிற்க்கு இவர் பிறந்ததில் இருந்து உடல் நிலை மோசமாகத்தான் உள்ளது.ஏதாவது நோய் வந்து கொண்டு இருக்கிறது.

இவருக்கு அண்ணன் ஒருவர் இருப்பதால் இவரின் அம்மா உயிருடன் இருக்கிறார். ஏனென்றால் தாய்க்கு முதல் மகனின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அண்ணனின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருப்பதால் அம்மா உயிருடன் இருக்கிறார்.

இவரின் ஜாதகத்தில் சந்திரன் 8-ல் அமர்ந்ததால் அஷ்டமச்சந்திரனாகிறது. சந்திரன் அமர்ந்த வீடு சனியின் வீடாக இருப்பதால் இவருக்கு சந்திரன் அதிக கெடுதல் செய்கிறார். இவருக்கு மனப்போராட்டம் அதிகமாக இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.