Followers

Saturday, January 7, 2012

சனி பெயர்ச்சி



வணக்கம் அனைத்து தளத்திலும் சனிபெயர்ச்சி பலன்கள் வந்தன நாமும் பலன்கள் எழுதகூடாது என்று முடிவெடுத்து பரிகாரம் கூறலாம் என்று நினைத்தேன்.

சனிபெயர்ச்சி பார்த்து அனைத்து பேரும் ஏதாவது ஒரு விதத்தில் பயந்தார்கள். இந்த ராசிக்கு நல்லது அல்ல கெட்டது நடக்கும் என்று ஒவ்வொரு நாளிதழிலும் தளத்திலும் பயமுறுத்திருப்பார்கள் அதனைப் பற்றி எல்லாம் கவலை படாதீர்கள் இறைவனிடம் சரண் அடைந்து மக்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கு உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நல்லது செய்தால் சனி பகவான் கெடுதல் செய்யமாட்டார். நல்லதே தான் செய்வார்.

எவரிடம் சரண் அடையலாம் ?

இந்த உலகில் எட்டு திசையில் இருந்து நன்மை தீமை என்று அனைத்திற்க்கும் காரணமாக இருப்பவர்கள் அஷ்டதிக்பாலகர்கள். இவர்கள் இந்த பூலோகத்தில் வந்து வணங்கிய ஸ்தலம் திருவண்ணாமலை அருணாசல ஈஸ்வர். அஷ்டதிக்பாலகர்களே இவரை வணங்கினால் இவர் யார் என்று உங்களுக்கு கூற தேவையில்லை.

அதனால் உங்களுக்கு எந்த சனி பிடித்திருந்தாலும் அல்லது விட்டுருந்தாலும் திருவண்ணாமலை வந்து இவரிடம் சரண் அடையுங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும் இது அனுபவ உண்மை. எவ்வளவு பிரச்சனைகள் உடன் வந்து என்னை சந்திப்பவர்களுக்கு நான் கூறும் பரிகாரம் திருவண்ணாமலை கிரிவலம்.

சனிபெயர்ச்சி முடிந்து முதல் பௌர்ணமி வரும் 8-1-2012 அன்று வருகிறது கிரிவலம் நேரம் 8-1-2012 பகல் 1:19 ஆரம்பித்து 9-1-2012 பகல் 1:41 க்கு முடிகிறது. கிரிவலம் ஞாயிறு அன்று நடைபெறுகிறது. இந்த 2012 ஆங்கில வருடம் முதல் கிரிவலமும் இதுதான் அதனால் அனைத்து பேரும் கலந்துகொள்வோம். அண்ணாமலை அருளை பெறுவோம்.

இன்னும் சிறப்பு என்னவென்றால் ஞாயிறு அன்று ஆருத்ரா தரிசனம் இருக்கிறது. ருத்திரனின் உண்மையான இயல்பு தீ அல்லது நெருப்பு. அக்னி ஸ்தலம் ஆன அண்ணாமலையில் இருக்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால் திருவண்ணாமலை வாருங்கள் புண்ணியத்தை கர்ம கணக்கில் கூட்டுங்கள்.

ஓம் நமசிவாய ஓம்


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

No comments: