Followers

Saturday, January 21, 2012

விளக்கம்



குருவைப்பற்றி பாடத்தை பதிவு இட்டபிறகு ஏகப்பட்ட கேள்விகள் வந்தன. அனைவரும் அவர்கள் ஜாதகங்களை எனக்கு அனுப்பி கேள்விகள் கேட்டுள்ளார்கள் அனைவருக்கும் நான் பதில் தருகிறேன். நேரம் கருதி சில நாட்கள் சென்று உங்களுக்கு பதில் தருகிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.

குருவைப்பற்றி கேள்விகள் வந்தன. குரு ஆலங்குடியில் இருக்கிறா அல்லது திருச்செந்தூர் இருக்கிறா இப்படி கேள்விகள் வந்தன. நான் என்னிடம் வரும் வாடிக்கையாளருக்கு கொடுக்கும் பரிகாரம் என்னுடைய அனுபவத்தில் நல்ல பலனை தந்தால் மட்டும் தான் கொடுப்பேன்.

அந்த வகையில் ஆலங்குடி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. குருவுக்காக நான் கொடுத்த பரிகாரம் ஆலங்குடி சென்று வந்தவர்கள் நல்ல பலனை அனுபத்தில் உணர்ந்திருக்கிறார்கள்.அதனால் தான் பதிவில் கொடுத்திருந்தேன்.

கோவிலுக்கு செல்லும்போது இவர் இங்கு இருப்பார அல்லது வேற ஊரில் உள்ள கோவிலில் இருக்கிறா என்று சந்தேகத்துடன் சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு ஒன்றும் நடக்காது.

இப்பொழுது கோவிலுக்கு சென்றால் அங்கு சில மக்கள் நடந்துக்கொள்ளும் விதத்தை பார்த்தாலே நீங்கள் சாமி கும்பிடுவதையே நிறுத்திவிடுவீர்கள் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் இருந்தால் தான் உங்களால் சாமியை தரிசிக்கமுடியும்.

உங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் குரு கோவில் நல்ல பலன் தரும் என்று அனுபவம் வாய்ந்தவர்கள் சொன்னால் அந்த கோவிலையை வணங்குங்கள். எந்த தவறும் இல்லை வெளிநாட்டில் உள்ளவர்கள் ஆலங்குடி வருவது என்பது மிகவும் கஷ்டம்தான் அங்கு உள்ள கோவிலையை வணங்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


1 comment:

Lazy boy said...

Yes sir you r right.