Followers

Saturday, April 21, 2012

செவ்வாய் கோச்சார பலன்



வணக்கம் நண்பர்களே இன்று செவ்வாயின் கோச்சார பலனை பார்க்கலாம். செவ்வாய் உச்சமாகிற மகரராசி நாயகன் சனியின் கிழமையான சனிக்கிழமை செவ்வாயின் கோச்சார பலனை பார்க்கபோகிறோம். என்ன ஒரு ஏகாபொருத்தம் பாருங்கள். செவ்வாய் சனி இரண்டும் பகை. சனியின் ராசியில் தான் செவ்வாய் உச்சமாகிறார். செவ்வாய் சனியை அந்த அளவுக்கு பகையாக பார்க்காது ஆனால் சனி செவ்வாய்யை படு எதிரியாக பார்க்கும்.  இந்த தகவல் போதும் வாருங்கள் செவ்வாயின் கோச்சார பலன்களை பார்க்கலாம்.

சந்திரன் நின்ற ராசிக்கு செவ்வாய் வரும் போது அந்த இடம் நல்ல இடமாக இருந்தால் தான் செவ்வாய் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். கணவன் மனைவி உறவில் சண்டை சச்சரவு வரும். விட்டுக்கொடுத்து போகவில்லை என்றால் இருவரும் பிரிய நேரிடும். ஏதாவது சண்டை சச்சரவு ஏற்படும்

செவ்வாய் இரண்டாமிடத்திற்கு வரும்போது தனவிரையம் ஏற்படும். ரத்த காயங்கள் ஏற்படுதல் குடும்பத்தில் தகராறு ஏற்படும். வீட்டில் சண்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. செலவுகள் வண்பு வழக்குகள் மூலம் ஏற்படும்.

செவ்வாய் மூன்றாம் வீட்டிற்க்கு வரும்போது நல்ல தைரியம் ஏற்படும். தைரியத்தால் அடுத்தவர்களிடம் சண்டைக்கு செல்வார்கள். அலுவலகத்தில் எலி மாதிரி இருந்தவர்கள் புலி மாதிரி ஆகிவிடுவார்கள். எதிர்பாராத வகையில் உதவி இருக்கும்.விரோதிகள் சண்டைக்கு வரமாட்டார்கள்.

செவ்வாய் நான்காம் வீட்டிற்க்கு வரும்போது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும். வெளியூர் பயணங்கள் செல்லாமல் இருப்பது நல்லது. விரோதிகள் கை ஓங்கும்.  கணவன் மனைவி பிரச்சினை ஏற்படும். உடல்நிலையில் கவனத்துடன் இருப்பது நல்லது.

செவ்வாய் ஐந்தாம் வீட்டிற்க்கு வரும்போது வீட்டில் களவு போகும். உடல் ஆரோக்கியம் கெடும். குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். உறவினர்களிடத்தில் சண்டை போடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் இது மட்டும் நன்றாக இருந்தால் போதுமே அனைத்தையும் வெல்லாம்.

செவ்வாய் ஆறாம் இடத்திற்க்கு வரும் போது விரோதிகள் ஒழிவார்கள். பணவரவு இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் உதவி இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வசதிகள் வீட்டிற்க்கு வரும். விரோதிகள் திடிர் என்று நண்பர்களாக மாறிவிடுவார்கள்.


தொடர்ச்சி அடுத்த பதிவில்


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


1 comment:

seethalrajan said...

வணக்கம். செவ்வாய் பகவான் சனி வீட்டில் உச்சம் பெறுகிறர். அதெபோல் சனி பகவான் செவ்வாய் நட்சத்திரமான சித்திரையில்தான்(2,3 பதம்) அதிஉச்சம் பெறுகிறார். ஆக, ஒருவரை ஒருவர் பார்தாலொ இருவரும் சேர்ந்து இருந்தாலொ தான் உத்யொகம், உடல் பாதிகம். நட்சத்திர சரம் பற்றி கூறுங்கள் ஆசிரியரெ. நன்றி.