Followers

Thursday, April 26, 2012

கோச்சார பலன் புதன் நிறைவு பகுதி



புதன் ஏழாமிடத்திற்க்கு வரும் போது நல்ல துணிவு உண்டாகும். துணிவு இருப்பதால் முன்கோபத்துடன் நண்பர்களிடம் நடந்துகொள்வீர்கள். நண்பர்களை பகைத்துக்கொள்வீர்கள். மனதில் தீய எண்ணங்கள் ஏற்படும். பெண்களிடத்தில் பழக்க ஏற்பட்டு அதனால் அவமானம் ஏற்படலாம். மனைவிக்கு தெரியாமல் இது நடக்கும். செய்தொழிலில் அதிகமான நன்மையை எதிர்பார்க்க முடியாது.

புதன் எட்டாம் இடத்திற்க்கு வரும்போது அதிக பயணங்கள் ஏற்படும் அதன் மூலம் வருமானம் வரும்.  தொழிலில் தடைபட்ட காரியம் இந்த நேரத்தில் நன்றாக நடக்கும். நண்பர்கள் உதவி கரம் நீண்டுவார்கள். எப்பொழுதுதோ நண்பர்களிடம் கேட்ட பணம் இந்த நேரத்தில் கைக்கு கிடைக்கும்.

புதன் ஒன்பதாம் வீட்டிற்க்கு வரும் போது கவலை, அலைச்சல் ஏற்படும். செய்தொழிலில் பிரச்சினை ஏற்படும் அதன் மூலம் ஒரு பைசா கூட லாபம் ஏற்படாது. தந்தை வழி உறவினர்களால் பிரச்சினை ஏற்படும். பொருள் இழப்பு ஏற்படும். குழந்தைகள் சொல் பேச்சை கேட்க மாட்டார்கள். கணவன் மனைவி உறவு மட்டும் நன்றாக இருக்கும். அதை வைத்து பிழைத்துக்கொள்ள வேண்டியது தான்.

புதன் பத்தாம் வீட்டிற்க்கு வரும் போது புதிய நகைகள் வரும். செய்தொழிலில் நிம்மதி கிடைக்கும். பொருள்வரவு கிடைக்கும். காதலில் வெற்றி அடையலாம். நீங்கள் ஒரு தலை காதல் செய்து கொண்டு இருந்தீர்கள் என்றால் இந்த நேரத்தில் காதலை சொல்லலாம் காதலில் வெற்றி அடையலாம். பந்தயத்தில் வெற்றி பெறலாம். வெளிபயணங்கள் நன்மை செய்யாது.

புதன் பதினொன்றாம் வீட்டிற்க்கு வரும் போது செய்கின்ற தொழிலில் நன்மை கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் வாய்க்கும். வேலை செய்கின்ற இடத்தில் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் மூலம் வருமானம் வரும். மூத்த சகோதர்கள் உதவி செய்வார்கள். கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும்.

புதன் பன்னிரெண்டாம் வீட்டிற்க்கு வரும்போது கெட்ட பெயர் ஏற்படும். தோல் வியாதிகள் ஏற்படும் அதற்க்காக மருத்துவனை செலவு செய்ய நேரிடும். கடன் தொல்லை இருக்கும்.  குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை மோசமாகும். கணவன் மனைவி உறவு நல்ல படியாக இருக்கும்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

Ananthamurugan said...

கோட்சார புதன் எந்த வீட்டில் அதிக கெடுதல்,அதிக நன்மை செய்வார்.