Followers

Saturday, April 28, 2012

குரு பகவான் கோச்சார பலன்



வணக்கம் நண்பர்களே ! இப்பதிவில் நாம் பார்க்கபோவது குரு பகவானின் கோச்சார பலனை பற்றி தான் இதுதான் குருபெயர்ச்சி பலன் என்று எழுதிவருகிறார்கள் நாம் வழக்கமான கோச்சார பலன்களை தருகிறேன். நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு ராசிக்கும் குரு பெயர்ச்சி பலன் எழுதுகிறேன். நீங்கள் இந்த பலனை பார்த்தாலே போதும் அனைத்தும் இதில் சொல்லப்பட்டது போல் நடக்கும். வாருங்கள் பார்க்கலாம்.

சந்திரன் நின்ற ராசிக்கு குரு வரும் போது வாழ்க்கையில் ஒரு வெறுப்பு வந்துவிடும். வீணான கவலை மனதில் வாட்டி எடுக்கும். பல வழிகளில் பணம் விரையம் ஏற்படும். மனைவி வழியில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். செய்கின்ற தொழிலில் மாற்றம் ஏற்படும். மனைவி குழந்தைகள் ஆதரவு இருக்கும். அளவுக்கு அதிகமாக வேலை செய்ய நேரிடும். கட்டிட பணி நடைபெறும்.

குரு இரண்டாம் வீட்டிற்க்கு வரும்போது குடும்பத்தில் மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நிலையில் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். செய்கின்ற தொழிலில் நல்ல வருவாய் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். எதிரிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மனகஷ்டம் ஏற்படலாம்

குரு பகவான் மூன்றாம் இடத்திற்க்கு வரும் போது நண்பர்களிடத்தில் விரோதம் ஏற்படும். பொருள் வரவில் கடுமையான தடை ஏற்படும். வீணான அவச்சொல் ஏற்படும். வீண் அலைச்சல் ஏற்படும். காதல் இருந்தால் முறிந்து விடும். கடுமையான பணத்தட்டுபாடு ஏற்படும். திருமண ஏற்பாடு நடைபெறும்.தாயாருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். சுமாரான பணவரவு விவசாயத்தின் மூலம் ஏற்படும்.

குரு பகவான் நான்காம் வீட்டிற்க்கு வரும்போது சாப்பாட்டிற்க்கு கஷ்டம் ஏற்படும். மனது ஒரு முடிவு எடுக்காது. செய்துக்கொண்டிருக்கும் தொழிலில் ஆதாயம் எதிர்பார்க்க முடியாது. கல்வி சம்பந்தமாக நல்ல விஷயங்கள் வரும். படிப்புக்கு உதவி கொடுப்பார்கள். வீடு வாகனம் சொத்துகள் செய்ய இதுதான் சரியான நேரம்.

குரு பகவான் ஐந்தாம் வீட்டிற்க்கு வரும் போது திருமண ஏற்பாடு நடைபெறும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் உருவாதற்க்கு வழி பிறக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் வருமானம் வரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். விவசாயத்தில் லாபம் ஏற்படும். வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.

குரு பகவான் ஆறாமிடத்திற்க்கு வரும்போது நோய் தொல்லை ஏற்படும். நண்பர்களிடத்தில் வீணான தகராறு ஏற்படும். செய்கின்ற தொழிலில் நஷ்டம் ஏற்படும். மனைவி மக்கள் ஆதரவு இல்லையென்றால் குடும்பமே வேண்டாம் என்ற மனநிலை ஏற்படும். விரோதிகள் கை ஓங்கும். புதிய தொழில்கள் தொடங்குதல் கூடாது. தொழில் அமையும் வரை இருக்கும் தொழிலை அனுசரிச்சு செல்வது நல்லது. வேலையில் வீண் சண்டை சச்சரவில் ஈடுபடகூடாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: