Followers

Tuesday, May 8, 2012

கோச்சார பலன் சுக்கிரன் நிறைவு பகுதி



வணக்கம் நண்பர்களே நேற்று சுக்கிரனின் கோச்சார பலனின் ஆறு வீட்டிற்க்கு மட்டும் பார்த்தோம். இப்பதிவில் மீதம் உள்ள வீடுகளின் சுக்கிரன் வரும்போது என்ன பலன் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் ஏழாம் வீட்டில் வரும்போது சுக்கிரன் களத்திரகாரகன் என அழைக்கப்படுகிறார் ஆனால் அவர் களத்திர வீட்டிற்க்கு வரும்போது களத்திரதோஷத்தை ஏற்படுத்துவார் கணவன்,மனைவி இருவரும் சண்டை இட்டுக்கொள்வார்கள். வீணாக கோபம் ஏற்பட்டு உங்களிடம் உள்ள நண்பர்கள் உற்றார் உறவினர்களிடம் சண்டை சச்சரவு ஏற்படும். கூட்டுதொழிலில் அதிக நன்மை ஏற்படும்.

சுக்கிரன் எட்டாம் வீட்டிற்க்கு வரும்போது நீங்கள் இந்த காரியம் நான் செய்தால் வாழ்க்கையில் மிகுந்த செல்வசெழிப்புடன் இருப்பேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு சென்றால் அந்த காரியம் ஊத்திக்கொள்ளும். மனதிற்க்கு பிடிக்காத வேண்ட வெறுப்புடன் ஒரு காரியத்தில் இறங்கினால் அந்த காரியம் வெற்றி அடையும். பணவரவு நன்றாக இருக்கும்.

சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிற்க்கு வரும்போது மனதில் மகிழ்ச்சி ஏற்படும். செல்வநிலை உயரும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றிக்கொள்ளலாம். மனைவி குழந்தைகளால் மனநிம்மதி கிடைக்கும். செய்கின்ற தொழிலில் வெற்றிக்கொள்ளலாம். முன்னோர்களின் ஆசிகிடைக்கும்.

சுக்கிரனின் பத்தாம் வீட்டிற்க்கு வரும்போது இந்த வேலை தான் செய்வேன் டா என்று பிடிவாத குணம் பிடித்து ஒரு வேலையை செய்து அந்த வேலை வெற்றி காரியமாக அமையும். விரோதிகள் செய்யும் காரியம் உங்களுக்கு நல்ல வாய்ப்பு தரும். 

சுக்கிரன் பதினொன்றாமிடத்திற்க்கு வரும்போது நல்ல வருமானம் வரும். மூத்த சகோதர சகோதரிகளின் மூலம் வருமானம் வரும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.  புதுத்தொழில் தொடங்கி அதன் மூலம் நல்ல வருமானத்தை பார்க்கலாம். மூத்த சகோதரிகளின் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்திற்கு வரும்போது பெண்களால் பிரச்சினை வரும். எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் அவர்கள் மூலம் பணம் போய்விடும்.  வீணான கெட்ட பெயர் கிடைக்கும். திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமண பேச்சு வீட்டில் ஆரம்பம் ஆகும். ஒரு சிலருக்கு திருமணம் நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  



No comments: