Followers

Wednesday, May 2, 2012

திருமண கனவு



வணக்கம் நண்பர்களே திருமண சம்பந்தமாக ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன் உடனே ஒரு நல்ல எண்ணம் தோன்றியது அதுவே இப்பதிவு வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள ஒரு விஷயம் என்ன என்றால் அது திருமணமாகதான் இருக்கும்.

 ஒவ்வொரு மனிதனும் மிகுந்த கனவு காண்பது இந்த விஷயத்தில் தான் அதுதான் என்னவோ இந்த விஷயத்தில் பாதி மனிதருக்கு கடவுள் ஆப்பு அடித்துவிடுகிறார் ஏன் என்றால் இவன் கனவு காண்பதற்க்கும் வாழ்க்கை துணையாக வருபவர்களுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது.

ஒரு ஆண் கனவு காண்பது சிறந்த பெண்ணாக வரவேண்டும் இப்பொழுது இருக்கும் மிகப்பெரிய நடிகை மாதிரி அழகில் இருக்க வேண்டும். சிறந்த புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறான் ஆனால் அவ்வாறு தேடி தேடி அலைந்து கடைசியில் வயதும் ஏறிவிடுகிறது. 

ஏதாவது ஒரு பெண்னை காலத்தின் கட்டாயத்தில் திருமணம் செய்ய வேண்டி உள்ளது. ஆனால் இவன் கனவை மட்டும் நிறுத்தவில்லை வந்த மனைவிக்கும் இவனுக்கும் ஒத்துபோவதில்லை. பிரச்சினை தான். நான் ஒரு முறை சோதிட விஷயமாக சென்னையில் உள்ள மாதவரம் சென்றேன் அங்கு வழியில் ஒருவர் பேச்சு துணையாக அறிமுகம் ஆனார்.

உங்களுடைய வயது என்ன என்று கேட்டார் நான் எனக்கு 32 வயது ஆகிறது என்றேன். திருமணம் முடிந்து விட்டதா என்று கேட்டார் நான் இன்னும் நடைபெறவில்லை என்றேன். அப்பொழுது அவர் 32 வருடம் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை அவர் அந்தளவுக்கு திருமண வாழ்க்கையில் நொந்து உள்ளார் என்று தெரிகிறது. இப்படி பல அனுபவங்கள் என்னிடம் இருக்கிறது.

நமது வாழ்க்கையில் நமக்கு தேவையான ஒரு சில விஷயங்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை கடவுள் நமக்கு அளித்துள்ளார். அதில் ஒன்று தான் திருமணம். ஒரளவு தேர்ந்தெடுக்கலாம் அதற்கு என்று எனக்கு இந்த மாப்பிள்ளை தான் வேண்டும். இந்த பெண் தான் வேண்டும் என்று நினைப்பது தவறு. ஒரு சில கண்டீஷனுடன் திருமண வாழ்க்கை துணையை தேர்ந்தெடுங்கள். 

நான் சோதிடத்தை தொழிலாகவே செய்து வந்ததால் பல அனுபவங்களை நேரில் பார்த்து இருக்கிறேன். அந்த அனுபவங்கள் தான் உங்களுக்கு தந்து கொண்டு இருக்கிறேன். பல ஊர்களுக்கு செல்வது அங்கு போய் சோதிடம் பார்ப்பது கிடைக்கும் பணத்தை எனக்கு செலவுக்கு எடுத்துக்கொள்வது  மீதியை அங்கு இருக்கும் ஏழை மக்களிடம் பணத்தை கொடுத்துவிடுவது இதுதான் எனது வேலையாக பல காலங்கள் இருந்து வந்தது. நான் போகாதா ஊர்கள் மிகுந்த குறைவு தான் அந்த அளவுக்கு ஊர் சுற்றி உள்ளேன்.அத்தனை அற்புதமான அனுபவங்கள்.

திண்டிவனம் அருகில் ஒரு சிறு கிராமத்திற்க்க சென்று வந்தேன. அந்த ஊரின் பெயர் சரியாக தெரியவில்லை திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ளது. அங்கு ஒரு பையனின் ஜாதகத்தை பார்த்தேன். அந்த பையனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் ஒன்றும் அமையவில்லை. நம்ம மக்களுக்கு தான் பரிகாரம் என்றால் சர்க்கரை மாதிரி இனிக்கிற விஷயமாச்சே தேவையான பரிகாரம் செய்தும் ஒன்றும் நடைபெறவில்லை.

நான் ஜாதகத்தை பார்த்தவுடன் உங்கள் பையனுக்கு பெண் அமையும் இடம் அந்த பெண் திருமண நிச்சயதார்த்தம் நடந்து அது ரத்து ஆகி இருக்கும் அந்த பெண் தான் உங்கள் பையனுக்கு அமையும் என்று கூறிவிட்டு ஏதும் பரிகாரம் செய்ய தேவையில்லை தானாகவே நடைபெறும் என்று கூறி வந்துவிட்டேன்.

 பிறகு ஒரு 10 நாட்களில் எனக்கு போன் செய்து திருமண பெண் அமைந்துவிட்டாள் நீங்கள் கூறியது போல அந்த மாதிரி பெண் தான் அமைந்தாள் என்று கூறினார்கள். அவர்களின் பெற்றோருக்கு மிகுந்த சந்தோஷம். இந்த மாதிரி பல பேர்களின் சந்தோஷம் தான் நான் சம்பாதித்த சொத்து வேறு சொத்து என்று எனக்கு ஒன்றும கிடையாது.

பையனின் ஜாதகத்தில் களத்திர இடத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தார்கள். அதனால் அவ்வாறு நடந்தது. இது புனர்பூ தோஷம் ஆகும். திருமணம் நிச்சயதார்த்தவுடன் நின்றுவிடும் அதனால் திருமண நிச்சயதார்த்தம் நடந்து அது திருமணத்திற்க்கு முன்பே ரத்தாகி   பெண்னை திருமண செய்தால் நன்றாக திருமண வாழ்க்கை அமையும். அவ்வாறே அது நடந்தது.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.