Followers

Thursday, June 21, 2012

வில்லாதி வில்லன் 10



வணக்கம் நண்பர்களே ! ஆறாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து அல்லது சம்பந்த பட்டு தசா நடந்தால் நீண்ட தூரப் பயணத்தால் லாபம் தரும். ஆன்மீக சம்பந்தமாக அதிக தொடர்பு இருக்கும். அவர்கள் இருக்கும் துறையில் ஆராய்ச்சி செய்து பட்டங்களை வெல்பவர். 

கெடுதல் பலன் என்று பார்த்தால் தந்தையாரின் சொத்துக்கள் அழியும். பிறர் ஏமாற்றிவிடுவார்கள். உங்களுக்கு நம்பிக்கை துரோகம் ஏற்படும். பெரியவர்கள் உங்களை விரோதத்துடன் பார்ப்பார்கள். 

ஆறாம் அதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்து அல்லது சம்பந்த பட்டு தசா நடந்தால் நல்ல வேலையில் இருப்பார். பதவி உயர்வு நடக்கும். சாதாரண வேலையில் இருந்தால் பதவி உயரவு அடிக்கடி நடந்து மேனேஜர் வேலைக்கே போய்விடலாம். அந்தளவுக்கு பதவி உயர்வு இருக்கும். தன்னுடைய உழைப்பை வைததே முன்னேற்றம் காணலாம். 

கெடுதல் பலன் என்று பார்த்தால் இவர்கள் சம்பாதிக்கும் வழியானது திருட்டுதனமாகவும் பிறரை ஏமாற்றி சம்பாதிப்பார்கள். இந்த தொழில் தான் இப்பொழுது நல்ல தொழிலாக மாறிவிட்டது. மற்றவர் பார்வையில் அயோக்கியன் என்று பெயர் எடுப்பார்கள். மனதில் பயம் இருந்துகொண்டே இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து அல்லது சம்பந்த பட்டு தசா நடந்தால் வேலையாட்கள் உதவி கிடைக்கும். பங்கு சந்தையில் லாபம் பெறலாம். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி தரும். வழக்குகளில் வெற்றி பெறலாம்.

கெடுதல் பலன் என்று பார்த்தால் மூத்த சகோதர சகோதரிகள் நோய்யுடன் இருப்பார்கள். கடன் வாங்கி கஷ்டத்தை அனுபவிப்பார்கள். பெரிய லாபம் வரும் என்று மனகோட்டை கட்டி இருப்பார்கள் ஆனால் லாபம் வராது.

ஆறாம் வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து அல்லது சம்பந்த பட்டு தசா நடந்தால் வேலையாட்களால் பிரச்சினை உருவாகும்.  பெரிய கம்பெனி நடத்தி வந்தால் தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு கம்பெனி நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். எதிர்பார்த்தே இருக்கமாட்டீர்கள் திடீர் செலவு வந்துவிடும். மருத்துவ செலவும் ஏற்பட்டு விடும். தூக்கம் வராது. 

எந்த வீடும் கெடுதல் பலனை முழுமையாக கொடுக்காது அதே போல் நல்ல பலனையும் முழுமையாக கொடுத்துவிடாது மாற்றி மாற்றி தான் நடைபெறும். இதுவரை பொறுமையாக படித்தற்க்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஆறாம் வீட்டு அதிபதியின் தசா தொடரும் ...

நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

usha said...

ennakku puriyavillai. araam athipathy yendral jadhagathil laknathil irundu arravadhu veetin athipathiya.

please explain. sorry for the disturbance. non oru mandu