Followers

Friday, June 15, 2012

வில்லாதி வில்லன் 2



வணக்கம் நண்பர்களே நாம் ஆறாம் வீட்டு தசாவை பற்றி பார்த்து வருகிறோம் இடையில் நட்சத்திர தெய்வங்கள் பற்றி ஒரு பதிவு போட்டவுடன் பல பேர் எனக்கு போனிலும் பின்னோட்டத்திலும் ஏன் நன்றாக போய் கொண்டு இருக்கும் போது ஏன் இடையில் வேறு தகவல்களை தந்தது குழப்பம் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்கள். 

நான் நினைக்கவில்லை இந்தளவுக்கு உன்னிப்பாக கவனித்து வருகிறீர்கள் என்று தெரியவில்லை உங்கள் ஆவலை கண்டிப்பாக பூர்த்தி செய்கிறேன். ஏன் என்றால் ஒரு வீட்டு தசாவுக்கு நம்மால் ஆயிரம் பதிவு போடமுடியும். 

நம் பதிவை படிப்பவர்கள் அனைவருக்கும் எனது போன் நம்பரை தெரிந்து வைத்திருக்கிறார்கள் அவர்கள் நீங்கள் எனக்கு போனில் தகவல் அனுப்பும் போது உங்கள் பெயரையும் சேர்த்து அனுப்புங்கள் என்னால் போனில் நன்றி தகவல் அனுப்பமுடியவில்லை அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம ஆறாம் வீட்டுக்குள் செல்லலாம ஆறாம் வீட்டு தசா ஆரம்பித்து ஆறாம் வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தால் கமிஷன் தொழிலில் நல்ல வருமானம் வரும். சிறுதுரப் பயணத்தால் லாபம் வரும். தொலை தொடர்பில் கடித போக்குவரத்து மூலம் நன்மை பயக்கும்.

இப்பொழுது ஏது கடித போக்குவரத்து அனைத்தும் Email ,SMS தானே அதன் மூலம் வருமானம் வரும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். காலத்திற்க்கு தகுந்தார் போல நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில் எல்லாம் குதிரை வண்டி வைத்து இருப்பார்கள் இப்பொழுது ஏது குதிரை வண்டி நாம் பலன் சொல்லும் போது கடந்த காலத்தில் சொல்லிருந்தால் என்ன சொல்லிருப்போம் நான்கு குதிரை கொண்ட வண்டி வைத்திருப்பாய் என்று சொல்லிருப்போம் அதை இந்த காலத்தில் நாம் பலன் சொன்னால் நான்கு குதிரை திறன் கொண்ட வண்டி வைத்திருப்பாய் என்று சொல்ல வேண்டும். 

இதை மட்டும் தான் சோதிடத்தில் நாம் செய்ய வேண்டிய காரியமாக இருக்கும் மற்றது எல்லாம் சோதிடத்திலேயே இருக்கிறது அதை நாம் அப்படியே சொல்லிவிட வேண்டியது தான். ஆனால் நாம் எல்லாம் எவ்வளவு தலைகனத்துடன் சோதிடத்தையே நாம் கண்டுபிடித்தது போல நடந்து கொள்ளுகிறோம். 

நான் முதலில் சோதிடத்தை பற்றி படிக்கும் போது என்னமோ சோதிடத்தையை நான் தான் கண்டுபிடித்தது போல ஒரு திமிர் இருந்தது அது நாள் ஆக ஆக எவ்வளவு பெரிய தவறு என்று நான் உணர்ந்தேன். உங்களுக்கும் இதைபோல் நடக்கும் அல்லது நடந்திருக்கும்.

இப்பொழுது மறுபடியும் ஆறாம் அதிபதி விஷயத்திற்க்கே வருகிறேன். இந்த ஆறாம் அதிபதி மூன்றாம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் காதில் பிரச்சினை உருவாகிவிடும். அது எந்த காதில் பிரச்சினை ஏற்படும் என்று எனக்கு தெரிவியுங்கள் பார்க்கலாம். 

நான் கடித போக்குவரத்தை பற்றி சொன்னேன் அல்லவா இந்த காலத்தில் இளைஞர்கள் செல்போனில் தகவல் மூலம் தான் காதலை வளர்க்கிறார்கள். இளைஞர்கள் மட்டும் அல்ல திருமணம் முடிந்து கள்ள காதலும் செய்பவர்களும் செல்போன் மூலம் தான் தன் துணையுடன் தொடர்பு கொள்ளுகிறார்கள். 

இந்த விஷயத்தில் இப்படி சென்றுக்கொண்டு இருக்கும் போது ஆறாம் அதிபதி என்ன செய்வார் என்றால் வரும் தகவலை வில்லங்மாக கொண்டு வருவார் அதன் மூலம் இருவருக்கும் பிரச்சினையை உண்டு செய்துவிடுவார் அல்லது தகவலை பிறர் கண் படும்படி செய்து விடுவார் அது இரண்டு கிரகத்தின் தொடர்பை பொருத்து அமையும். 

நாம் எல்லாம் ஜாதகத்தில் பொதுவாக பலன் சொல்லும் போது குருவின் நிலையும் சனியின் நிலையும் வைத்து பலன்களை அப்படியே மேல் ஒட்டமாக சொல்லிவிட்டு போய்விடுவோம். மற்ற கிரகங்களை மேம்போக்காக விட்டுவிடுவோம்.

ஆறாம் வீட்டில் ஒரு கிரகம் அதாவது எந்த கிரகமும் ஆறாவது வீட்டு அதிபதியாக வருகின்றதோ அவர்கள் செய்யும் லீலை தாங்கமுடியாது. அதை எல்லாம் நாம் கவனத்தில் கொண்டு தான் சோதிட பலனை சொல்ல வேண்டும். 

சோதிட சொல்லும் போது நாம் ஒரு விஷயத்தையும் விட்டு வைக்காமல் ஆராய்ந்து பலனை சொல்ல வேண்டும். பொதுவாக மறைவிடத்தின் தசா நடந்தால் எப்படி தாக்குகிறது என்று சொல்லுவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும் ஏன் என்றால் மறைவிடத்தில் இருந்து தாக்கும் விஷயம் அனைத்தும் நாம் முன்ஜென்மத்தில் செய்த கர்மாவால் தான் வருகிறது என்று சாஸ்திரம் சொல்லுகிறது அதனை கண்டுபிடிக்க நாம் முன்ஜென்மத்தை ஆராய வேண்டும் அப்படி ஆராய்வது ரொம்ப கஷ்டமான விஷயமாகத்தான் இருக்கும். சோதிடர்கள் அனைவரும் தவறு செய்யும் இடம் என்றால் அது மறைவிடத்தில் நடக்கும் பலனை சரியாக கணிக்க தவறுவதால் தான் நிகழ்கிறது.

சோதிடத்தில் நாம் பலன் சொல்லும் போது நல்ல விஷயங்களை சொல்லாமல் விட்டுவிட்டாலும் தீமை தரும் விஷயங்களை சொல்லாமல் விட்டுவிடாதீர்கள் தீமை நடந்துவிட்டால் அதை தாங்குவது ரொம்ப கஷ்டமாக இருக்கும் ஏன் என்றால் உயிரை பறிக்கும் நிலை கூட ஏற்பட்டு விடும். 

ஒரு கஷ்டம் என்ன என்றால் சோதிட பலன் சொன்னதற்க்கு பணம் தரமாட்டார்கள். அதனால் தான் பல சோதிடர்கள் உங்களுக்கு மிக பெரிய யோகம் வரபோகிறது நீங்கள் ஆடி காரில் தான் செல்ல போகிறீர்கள் என்று சொல்லி மக்களிடம் காசு பார்த்துவிடுவார்கள்.

மக்களும் அப்பொழுது தான் பணம் தருவார்கள். எவன்தான் கெட்ட விஷயம் சொன்னால் பணம் தருவான் அதனால் தான் அது நடக்க போகிறது இது நடக்க போகிறது என்று அள்ளிவிடுகிறது.  

ஆறாம் வீட்டு தசாவை பற்றி நல்ல சிந்திப்போம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: