Followers

Saturday, June 16, 2012

வில்லாதி வில்லன் 5



வணக்கம் நண்பர்களே! இப்பதிவில் ஆறாம் வீட்டு அதிபதி தசாவைப்பற்றி பார்க்கலாம். ஆறாம் வீட்டு தசா நடந்து ஆறாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் இருந்தால் கல்வியால் லாபம் இருக்கும், வீடு மனை வாங்கி விற்கலாம், ஆசிரியர் தொழிலில் ஈடுபடலாம், வட்டி தொழில் நன்றாக வரும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.  

கெடுதல் தரும் விஷயம் என்ன என்றால் மேலே சொன்ன அனைத்திலும் பிரச்சினை ஏற்பட்டு விடும். என்ன கெட்ட விஷயங்களை பற்றி நிறைய எழுதுகிறார் நல்ல விஷயங்களை எழுதுதல் குறைவாக எழுதுகிறார் என்று நினைக்கலாம். ஆறாம் வீடு என்பது கெடுதல் அதிகம் நடக்கும் வீடாக இருப்பதால் அதனின் கெட்ட தன்மையை எடுத்து எழுதினால் உங்களுக்கு உதவும் என்று தான் எழுதுகிறேன். 

நான்காம் வீடு என்பது தாயாரை பற்றி காட்டும் இடம் என்பதால் தாயாரின் உடல் நிலை பிரச்சினையை ஏற்படுத்திவிடும். உங்களையும் உங்கள் தாயாரையும் பிரித்துவிடும். 

நீங்கள் பள்ளிப்படிப்பை படிப்பது கடினமாகிவிடும். இளமையில் இந்த தசா வந்தால் படிப்பு பிரச்சினை ஏற்படுத்திவிடும். பள்ளியில் படிக்கும் போது பள்ளியை கட் அடித்துவிட்டு ஊர் சுற்ற ஆரம்பித்துவிடுவீர்கள்.  அப்புறம் என்ன பள்ளி படிப்பு வீண்தான்.

நான்காம் வீடு் உங்கள் வீட்டை குறிப்பதால் நீங்கள் சொந்தவீடு வைத்திருந்தால் உங்கள் வீடு எனக்கு சொந்தம் என்று உங்கள் மேல் கேஸ் போட்டுவிடுவார்கள் உங்கள் எதிரிகள். வீட்டு மேல் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அதனால் வீடு மூழ்கி போய்விடும். 

நான்காம் வீ்டு வாகனங்களை குறிக்கும் இடம் என்பதால் உங்கள் வாகனங்கள்  விபத்தில் அடிபடும். வாகனங்களால் பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும். இந்த விஷயத்தில் நான் ஒரு ஜாதகரின் அனுபவத்தை தருகிறேன் எப்படி தசா வேலை செய்தது என்று பார்க்கலாம். 

அவர் மிதுன ராசிகாரர் அவர் ஒரு Tempo Traveller வண்டி வாங்கி சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வண்டியை ஒரு டிரைவரை வேலைக்கு அமர்த்தி வாடகைக்கு விட்டார். 

இவருக்கு ஆறாம் வீட்டு அதிபதி தசா நான்காம் வீட்டில் அமர்ந்து ஆரம்பம் ஆனது இந்த டிரைவர் என்ன செய்தார் என்றால் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகில் ஒரு இடத்தில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்யும் நோக்கத்தோடு போட்டு வந்துவிட்டார். 

இருவருக்கும் கள்ளதொடர்பு இருந்து இருக்கிறது இருவருக்கும் சண்டை அதனால் அவளை கொலை செய்யும் நோக்கில் செய்து இருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரமாக அந்த பெண் பிழைத்துவிட்டார்.

அந்த பெண்னை யாரோ பார்த்து காவல்துறைக்கு தகவல் அனுப்பி அந்த பெண்ணை பிழைக்க வைத்துவிட்டார்கள். இந்த டிரைவர் வீட்டில் வந்து ஒன்றும் நடக்காது போல இருந்துவிட்டார். காவல்துறையினர் வந்து தேடி இவரை சென்னையில் கைது செய்துவிட்டார்கள். 

வண்டியில் வைத்து நடந்ததால் வண்டியையும் காவல்துறையினர் எடுத்து கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டார்கள் அந்த வண்டியை மீட்க இவர் அந்த பாடுபட்டு எடுத்தார். 

இது நடந்தது இவருடைய ஆறாம் வீட்டு தசாவில் நான்காம் வீட்டு சம்பந்தம் ஏற்பட்டபோதுதான் இதை எல்லாம் நான் ஏன் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால் ஒவ்வொரு செயலும் ஜாதகத்தில் உள்ளது போல் தான் நடக்கும் உங்களுக்கு இந்த மாதிரி தசாவில் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கலாம் அல்லவா.


நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: