Followers

Tuesday, June 19, 2012

வில்லாதி வில்லன் 8



வணக்கம் நண்பர்களே என்ன ஆறாம் வீட்டு தசா பிடித்து இருக்கிறாத? இல்லையா? எனறு ஒரு வரி சொல்லிவிட்டு போங்கள். மனிதனுக்கு ஒரு பழக்கம் இருக்கும் தனக்கு வேண்டியது என்றால் எடுத்துக்கொள்வான் இல்லை என்றால் அந்த பக்கம் தலைவைத்து படுக்கமாட்டான். அதே மாதிரி தான் சோதிடமும் நீங்கள் நினைத்து கொண்டு இருப்பீர்கள் நமக்கு தான் ஆறாம் வீட்டு தசா நடக்கவில்லையே என்று அல்லது ஆறாம் வீட்டு தசா நமது வாழ்க்கையில் வரவே வராது என்று நினைத்தால் அவ்வாறு நினைப்பது தவறாகும். அனைத்து வீடுகளும் சேர்ந்தது தான் சோதிடம்.

நான் கீழே கொடுக்கும் பலன்களை பாருங்கள்

1.ஒருத்தருக்கு அமையும் வேலை வாய்ப்புகள்
2.ஒருவர் கடன் எங்கு பெறுவது
3.ஒருவர் தேர்வில் வெற்றி பெறமுடியுமா
4.ஒருவர் பதவி பெறமுடியுமா
5.ஒருவர் வழக்கில் வெற்றி பெறமுடியுமா
6. ஒருவருக்கு திருமண வாழ்வில் பிரச்சினை வருமா அதவாது திருமண வாழ்வு பிரியுமா
7.ஒருவருக்கு எந்த மாதிரி உணவு உண்பார்
8.அவரின் செரிமான சக்தி எப்படி இருக்கும் என்று பார்ப்பது
9. ஒருவர் செல்ல பிராணிகளை வளர்க்க முடியுமா
10.ஒருவருக்கு எந்த நோய் வரும்
11.ஒருவருக்கு எந்த எண்ணங்கள் முழுமையாக நிறைவேறுமா
12. ஒருவடைய தந்தைக்கு தொழில் எப்படி அமையும்.

விட்டால் இப்படியே கேட்டுகொண்டே போகலாம் அந்த அளவுக்கு தகவல் அடங்கி உள்ளது மேலே கொடுத்த தகவல்களை பாருங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நடப்பது தான் அதை எல்லாத்தையும் தாங்கி நிற்கும் வீடு தான் ஆறாம் வீடு. அந்த வீடு இல்லாமல் மனிதன் இல்லை என்பதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.

நாம் இன்னும் உள்ளே போக போக நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சும்மாவா சொன்னார்கள் சோதிட கட்டத்தில் ஒவ்வொரு கட்டத்திற்க்கும் ஒரு கோடிக்கு மேல் விஷயங்கள் இருக்கின்றன என்று அதை எல்லாம் நீங்கள் போய் பார்க்க வேண்டும் என்றால் என்னால் முடிந்தவரை போய் காட்டலாம் அதற்கு நீங்க செய்ய வேண்டியது என்னை ஊக்கபடுத்துவது தான் என்ன செய்வீர்களா?

பார்ப்போம்.

இப்பொழுது நாம் ஆறாம் வீட்டு அதிபதி ஏழில் இருந்து அல்லது சம்பந்தபட்டு தசா நடந்தால் என்ன செய்யும் என்று பார்க்கலாம் வேலை ஆட்கள் பிரச்சினை செய்து கொண்டு இருப்பார்கள்.  பெரிய கம்பெனியாக இருந்தால் சும்மா பிரச்சினை செய்ய மாட்டார்கள் சங்கம் வைத்து போராட்டத்தில் ஈடுபாடுவார்கள். கூட்டு தொழிலாக இருந்தால் நல்ல லாபம் பெறலாம். கடன் யாரும் பெற்று இருந்தால் கடனை உடனே திருப்பி கொடுத்துவிடுவார்கள்.

கெடுதல் தரும் விஷயம் என்ன என்றால் பெரிய பண்ணைகளை வைத்து இருந்தால் இப்பொழுது எல்லாம் எஸ்டேட் தொழில் எல்லாம் நசிந்துவிடும் முன்னோர்கள் சொத்துகள் எல்லாம் சிதையும்.

ஆறாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் அல்லது சம்பந்தம்பட்டு தசா நடந்தால் நீங்கள் பிறர் மேல் வழக்கு தொடர்ந்து இருந்தால் அந்த வழக்கு தோல்வியை தரும். வேலைகளால் பிரச்சினை தோன்றும். வீட்டில் பணம் இருக்காது. கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும். பணம் இல்லை என்றால் சண்டை தான் வரும். அது தான் நடக்கும்.

என்னுடைய ஊருக்கு பக்கத்தில் ஒருவன் இருந்தான் அவனுக்கு ஆறாம் வீட்டு தசா நடந்த போது எட்டாம் வீட்டில் இருக்கும் போது அவனுடைய சொத்துகளை எல்லாம் விற்று பணத்தை எல்லாம் தண்ணி அடித்தே காலி செய்தான்.

அவனுக்கு ஆறாம் வீடு நீர் ராசியாக இருந்தது பொதுவாக ஆறாம் வீடு நீர்ராசியாக இருந்து அந்த ஆறாம் வீட்டு தசா நடந்தால் அவர்கள் மதுவுக்கு அடிமையாகிவிடுவார்கள். இப்பொழுது எல்லாம் குடிக்காதவர்களே கிடையாது என்று கேட்கலாம் ஒத்து கொள்கிறேன்.

என்ன தான் இருந்தாலும் சென்னை வாசி மாதிரி குடிக்க முடியாது. நான் இருக்கும் கொட்டிவாக்கம் அலுவலகத்திற்க்கு எதிர் மாதிரி தான் டாஸ்மாக் கடை இருக்கிறது அப்பா என்ன கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரே தள்ளுமுள்ளு தான் நீங்களும் தள்ளுமுள்ளு போட்டீர்களா என்று கேட்காதீர்கள் அலுவலகத்தில் இருந்து பார்த்தால் தெரியும். நமக்கு அந்த பழக்கம் கிடையாது. போகிற போக்கில் பார்த்தால் தமிழ்நாட்டில் நாற்பது வயதிற்க்கு மேல் ஒருத்தனும் உயிரோடு இருக்கமாட்டான் போல் தெரிகிறது.

இவன் குடிப்பதற்க்காகவோ சொத்துகளை விற்று நடுத்தெருவிற்க்கு வந்தவன்.வீட்டில் பெண்ணை மணம் செய்து கொடுக்காமல் கூட அனைத்து சொத்துகளையும் விற்றவன். அதனால் அவன் குடும்பமே அழிந்தது. அந்த குடும்பத்திற்கு சொந்தமான பங்காளிகள் சேர்ந்து அந்த வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொடுத்தார்கள்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.


நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 





2 comments:

usha said...

nan piranthathu simma raasi. pooram nakshtra dasa sukra. ipoodu nadanthu kondu irukkum dasa guru dasa. idhu ennakku 6th dasa. ippodu thangal nadathum padam 6th dasa. idhu laknathil irundhu ovaruvarukkum amaya koodiya athipathyaa. I will confuse. please explain.

rajeshsubbu said...

/* usha said...
nan piranthathu simma raasi. pooram nakshtra dasa sukra. ipoodu nadanthu kondu irukkum dasa guru dasa. idhu ennakku 6th dasa. ippodu thangal nadathum padam 6th dasa. idhu laknathil irundhu ovaruvarukkum amaya koodiya athipathyaa. I will confuse. please explain. */

வருக வணக்கம் லக்கினத்தில் இருந்து ஆறாவது வீட்டு தசா. வரும் பாடங்களில் எல்லாம் விபரமாக வரும் அதுவரை பொறுமை. உங்களுக்கு பலன வேண்டும் என்றால் சோதிட சேவையில் தொடர்பு கொள்ளலாம்.