Followers

Friday, June 1, 2012

அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே நான் தஞ்சாவூரில் இருப்பதால் பதிவு எழுதமுடியவில்லை. நான் திங்கள் கிழமை முதல் சென்னையில் இருப்பேன் அதுவரை பொறுமை காக்குமாறு மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எவ்வளவு முடியுமே அவ்வளவு விரைவாக வேலை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிவிடுவேன்.

 நமது சோதிட வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சென்னை திரும்பியவுடன் இரவு பகல் பாராமல் பலன் அனுப்பிவிடுகிறேன். இதில் கட்டண சோதிட சேவையில் வந்தவர்களும் காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் சென்னை வந்தவுடன் பலன் தருகிறேன்.

எமது சோதிட சேவைக்கு வருபவர்கள் அனைவருக்கும் சொல்லப்படுவது என்ன என்றால் நீங்கள் தனியாக வசிப்பர்கள் என்றால் உங்களுக்கு மட்டும் ஜாதகத்தை பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் குடும்பத்தாருடன் வசிப்பராக இருந்தால் குடும்பத்தில் அனைவருக்கும் ஜாதக்தை பார்த்துக்கொள்ளுங்கள். 

ஏன் என்றால் குடும்பத்தில் வசிப்பர்களுக்கு மொத்த ஜாதகத்தை வைத்துதான் பலன்கள் நடைபெறுகிறது. உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கெடுதல் தரும் கிரகங்கின் பிடியில் இருந்தால் மொத்த குடும்பத்தையும் அது பாதிக்கிறது. எனது அனுபவத்தில் பல பேர்களை இவ்வாறு பார்த்து உள்ளேன்.

நீங்கள் குடும்பத்தில் இருந்து தனியாக வசிப்பவராக இருந்தால் பரவாயில்லை உங்களுக்கு மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். பல நண்பர்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளி இடங்களில் வேலைக்காக போய் தனியாக தங்கி இருப்பார்கள் அவர்கள் தனியாக இருந்தால் அவர்கள் மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.

நான் பல குடும்ப ஜாதகங்களை பார்த்து இருக்கிறேன் அவர்கள் அனைவரும் அவர்கள் வீட்டில் மனைவின் ஜாதகத்தை பார்க்கமாட்டார்கள் அந்த ஜாதகரின் ஜாதங்களில் இருக்கும் நல்ல பலனோ அல்லது கெட்ட பலனோ குடும்பத்தாருக்கு நடந்துவிடும். அதனால் யாருடைய ஜாதகத்தையும் ஒதுக்கிவிட்டு ஜாதகபலனை கேட்காதீர்கள். நான் இதைச்சொல்லுவது கட்டண தொகை அதிகமாகும் என்ற எண்ணத்தில் அதை கூறவில்லை அனுபவத்தை வைத்துதான் இதை கூறுகிறேன். 

சனியின் வக்கிர நிவர்த்தி

சனி பகவான் வக்கிரத்தில் இருந்தார் அல்லவா அவரின் வக்கிர நிவர்த்தி முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். அவரின் வக்கிர நிவர்த்தி ஒன்பதாவது மாதம் என்றாலும் சில பேருக்கு இப்பொழுது பலன் தர ஆரம்பித்து இருக்கிறது அனுபவத்தில் இது நடந்துவருகிறது. அதனால் எச்சரிக்கையுடன் இருக்க இந்த செய்தி தரப்படுகிறது.

பல நண்பர்கள் போன் மூலம் விசாரித்தார்கள் ஏன் பதிவு வரவில்லை என்று அவர்களுக்கு எனது நன்றிகள் பல. என்னை எதிர்பார்த்து வருகிறார்களே என்று தான் அவர்களின் ஆவலை பூர்த்தி செய்ய என்றும் கடமைபட்டுள்ளேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: