Followers

Monday, June 4, 2012

ஆறாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே ! நாம் தசாபுத்திகளைப் பற்றி எழுதியவுடன் முதலில் ஆறாவது வீட்டு தசா பதிவுகளைப் பற்றி எழுதவேண்டியது ஆகிவிட்டது ஏன் என்று மனதில் நினைத்தேன். அப்பொழுது தான் எனக்கு என்னுடைய ஜாதகத்தின் தசாநாதன் குரு இவர் என்னுடைய ஜாதகத்தில் ஆறாவது வீட்டில் அமர்ந்துள்ளார். 

அவர் தான் என்னை தசாவை பற்றி நடத்தும் போது அவர் முன்ணனி வகித்துவிட்டார். யாராக இருந்தாலும் ஒருவரை வழி நடத்துவதில் முன்ணனி வகிப்பவர் அவருடைய தசாநாதனாக தான் இருக்கும். நான் பார்த்த ஜாதகங்களில் எல்லாருக்கும் அப்படிதான் நடந்துள்ளது. 

இந்த ஆறாவது வீட்டு தசா என்னதான் பண்னும் என்று பார்த்தால் ஒருவரை எந்த அளவுக்கு அவனுக்கு விரக்தியை கொடுக்கவேண்டுமோ அந்த அளவுக்கு விரக்தியின் உச்சத்திற்க்கு அவனை கொண்டு செல்லும். ஒருவருக்கு ஆறாவது வீட்டின் தசாவில் அவனை சொந்ந பந்தங்களை எல்லாம் பிரித்து அவன் ஒருவித தனிமையான மனநிலைக்கு தள்ளிவிடும். 

அவனை சுற்றி பல விஷயங்கள் நடைபெறும் ஆனால் அவன் நீங்கள் ஏதாவது செய்ங்க என்னை எதிலும் சேர்க்காதீர்கள் என்று மனது நினைக்கும். நாம வேலைக்கு போனம கடனை அடைத்தமா என்று நினைப்பார்கள். கடன்கள் இவரை ஒரு வழி பண்ணிவிடும்.

கடன் ஆனாலும் பரவாயில்லை ஒரு சிலருக்கு நோய் தொல்லை இருக்கிறேதே அவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடும். இந்த ஆறாவது வீட்டு தசா இருக்கிறதே இதனைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டு செல்லலாம். அந்த அளவுக்கு அதில் அவலங்களை தரும் விஷயம் இருக்கிறது. ஆறாவது வீட்டு தசாவில் நல்ல விஷயங்களும் இருக்கிறது அது எல்லாம் என்னவென்று வரும் காலங்களில் மிகவும் உள்ளே சென்று பார்க்கலாம். 

நான் நினைக்கிறேன் ஒரு சிலருக்கு மட்டும் மிக கெடுதல் தரும் தசா மட்டும் நடைபெறுகிறது அப்பொழுது நான் நினைப்பது ஒரு சாமியாரை உருவாக்குவதில் கிரக நிலைகளில் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது என்று நினைக்க தோன்றும். உங்களுடைய பதில் என்ன என்று எனக்கு அனுப்புங்கள். 

ஒரு சிலரை அதாவது சாமியாரை நான் பார்த்தது உண்டு என்ன என்றால் அவர்களின் தசாவில் முதலில் ஆறாவது வீட்டு தசா நடக்கும் அதன் பிறகு எட்டாவது வீட்டு தசா அதன் பின் பனிரெண்டாம் வீட்டு தசா இந்த மாதிரி தசாவை அவர்கள் சந்தித்து தான் சாமியாராக ஆகிவிட்டார்களா என்று நினைத்தது உண்டு ஏன் என்றால் ஒரு மனிதனை இந்த அடி அடித்தால் அவன் என்ன தான் செய்ய முடியும். 

நான் சொல்லும் சாமியார்கள் எல்லாம் வெளி உலகத்தில் தெரியாத சாமியார்களைப் பற்றி குறிப்பிடுகிறேன். நீங்கள் இந்த காலத்து சாமியார்கள் எல்லாம் ஆடி காரில் செல்லுகிறார்கள் அவர்கள் இருக்கும் சொகுசு ஒரு நாட்டின் மன்னன் கூட இருப்பது இல்லை என்று நினைக்க தோன்றும். நான் பார்த்தது எல்லாம் அவர்கள் வெளி உலகத்தில் அவர்கள் தலையை கூட காட்டியது கிடையாது.

வரும் பதிவுகளில் எல்லாம் நல்ல விலாவரியாக பார்க்கலாம். இப்பொழுது இது போதும் என்று நினைக்கிறேன். நமது இலவச சோதிட வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நீங்கள் எனக்கு Email செய்தீர்கள் என்றால் உடனே நான் பதில் email அனுப்பிவிடுவேன். நீங்கள் காலம் தாழ்த்தாமல் என்னை உடனே தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 






No comments: