Followers

Wednesday, June 27, 2012

நான் பேச நினைப்பதெல்லாம்



வணக்கம் நண்பர்களே! கடந்த நான் பேச நினைப்பதெல்லாம் பதிவில் தொழில் சோதிடராக மாறுவதற்க்கு என்ன செய்யலாம் என்று கேட்டு இருந்தேன் அந்த சந்தேகத்தை தீர்க்கும் விதமாக இப்பதிவில் அதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

நீங்கள் சோதிட தொழில் செய்யவதற்க்கு ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது நீங்கள் ஒரு தேவதையை உங்களுக்காக அமைத்துக்கொள்வது தான் அது. அதவாது உச்சடணம் செய்து ஒரு தேவதைக்கு உபசாரராக இருந்தால் போதும். உங்களுக்கு அந்த தேவதை எல்லா வழியும் செய்து கொடுத்துவிடும்.

நீங்கள் ஜாதகத்தின் கணக்குகளை எல்லாம் போட்டு பார்த்துவிட்டு அந்த தேவதையிடம் அனுமதி வாங்கி சோதிட பலன் கூறினால் நீங்கள் சொல்லும் பலன் அனைத்தும் பலித்துவிடும்.

இந்த மாதிரி சோதிட தொழில் செய்தால் உங்களுக்கு நல்ல காலம் இருக்கும். இல்லை என்றால் சும்மாக சொல்லி கொண்டு இருக்க வேண்டியது தான். சோதிடம் மூலம் நீங்கள் பிரபலமாகமாட்டீர்கள்.

தேவதையை உச்சாடணம் செய்து சோதிட தொழில் செய்தால் கை மேல் பலன் இருக்கும் நீங்கள் கூறும் பரிகாரமும் அவர்களுக்கு தீர்வாக அமையும் அப்படி இல்லை என்றால் அவர்கள் எத்தனை பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.

நீங்கள் ஒரு தேவதையை உச்சாடணம் செய்வதற்க்கு 
நீங்கள் ஒரு தேவதையை தேர்ந்தெடுப்பது எப்படி? அந்த தேவதை எப்படி இருக்க வேண்டும் ?

அந்த தேவதை ஒரு சாந்தமான அம்மனாக இருந்தால் நன்மை பயக்கும். இல்லை உங்கள் குலதெய்வமாக கூட இருக்கலாம் அல்லது உங்கள் குடும்பத்தில் இறந்த மூத்தவர்களாக கூட இருக்கலாம். பொதுவாக தெய்வசக்தியாக இருந்தால் நல்லது.

சில பேர்கள் உக்கிர அம்மனை வைத்துவழிபாடு நடத்துவார்கள் அது கூட இருக்கலாம். சாந்தமான அம்மனாக இருந்தால் உங்களுக்கு எந்த நேரத்திலும் அது உதவியாக இருக்கும் உக்கிர தெய்வங்களை வைத்துகொள்வது மிக கடினம். நான் பார்த்த வரையில் சாந்தமான அம்மனை வைத்திருந்தால் நன்மை பயக்கும். பல சோதிடர்கள் சாந்தமான அம்மனை தான் இஷ்டதெய்வமாக வைத்து இருக்கிறார்கள்.

மாந்தீரிக தொழில் செய்பவர்கள் தான் உக்கிர அம்மனை தன் இஷ்ட தேவதையாக வைத்திருப்பார்கள் அதவாது காளி போன்ற உக்கிர தெய்வங்களை வைத்திருப்பார்கள் . உக்கிர அம்மனுக்கு இரத்த பலி கொடுக்க வேண்டும் அப்போது தான் கட்டுப்படும்.

காளியை கட்டுக்குள் வைத்துக்கொள்வது என்பது ரொம்ப கடினமான ஒன்று அது திடீர் என்று உங்களை விட்டு விலகிவிடும். மாந்தீரிகர்கள் காளியை பீரித்தி செய்து பிணஆத்மாவை வைத்துக்கொண்டு தொழில் செய்வார்கள். பிணஆத்மா என்றால் திடீர் விபத்துகளில் மரணம் அடைந்த ஆத்மா. தீயால் செத்த ஆத்மா, தண்ணீரில் விழுந்து செத்த ஆத்மா, தற்கொலை செய்துகொண்ட ஆத்மா போன்றவை பிணஆத்மாக்கள் அல்லது பிரேத ஆத்மாக்கள். அதனை பிடித்து வைத்துக்கொண்டு செய்வார்கள். காளியை பீரித்தி செய்து பிணஆத்மா மூலம் தன் காரியத்தை செய்வார்கள்.

மாந்தீரிகர்கள் தன் இரத்தத்தை அதற்கு காணிக்கையாக கொடுப்பார்கள். அதவாது அவர்களின் கைகளை பார்த்தால் பிளைடால் கிழித்து இரண்டுக்கும் இரத்ததை காணிக்கை செய்வார்கள். அந்த தழும்பு அவர்களின் கைகளில் இருக்கும்.

மாந்தீர விஷயங்கள் அனைத்தும் பொதுவாக தீமை செய்யும் விஷயமாக தான் இருக்கும் அது உங்களுக்கு தேவையில்லை. அதனை வைத்து நல்லதும் செய்யலாம்.

நீங்கள் சாந்தமான அம்மனை வைத்துக்கொண்டு சோதிட தொழில் செய்யலாம். இந்த பதிவில் இருக்கும் விஷயங்கள் நடைமுறையில் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் ஆனால் இதனை செய்த பிறகு என்னை நீங்கள் பாராட்டுவீர்கள்.

நண்பர்களே நம் பதிவில் இருக்கும் இலவச சோதிடம் நம் பதிவுக்கு வரும் நபர்கள் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இலவச சோதிட ஆலோசனை வழங்கப்படுகிறது. 

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பார்க்க விரும்பினால் இந்த பதிவை மட்டும் சொல்லுங்கள் அவர்கள் பதிவு மூலம் வரட்டும். பல நண்பர்கள் நேரிடையாக என்னுடைய மொபைல் போனுக்கு வந்துவிடுகிறார்கள். அவர்கள் அனைவரும் பதிவுக்கு வந்தால் மட்டும் தான் என்னால் பலன் வழங்கமுடியும். 

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 




1 comment:

Unknown said...

sir can you pls check our jathagam