Followers

Saturday, July 21, 2012

வேலையாட்கள் அமைய பரிகாரம்



வணக்கம் நண்பர்களே ஆறாம் வீட்டு தசாவில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பரிகாரம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று ஆறாம் வீட்டு அதிபரின் மூலம் வேலைக்காரர்கள் அமைவார்கள் அந்த வேலையாட்கள் சரியில்லை என்றால் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஒரு தொழில் நன்றாக அமையவேண்டும் என்றால் அந்த தொழிலை செய்வதற்க்கு நல்ல வேலையாட்கள் அமையவேண்டும். அப்பொழுது தான் அந்த தொழில் நன்றாக வளர்ச்சி அடையும். 

நீங்களே பல இடங்களில் பார்த்த அனுபவம் இருக்கும். கடைகளில் நாம் ஏதாவது பொருட்கள் வாங்க சென்றால் அங்குள்ள தொழிலாளிகள் நடந்துக்கொள்ளும் விதம் உங்களுக்கு அந்த பொருட்கள் வாங்குவதற்க்கே பிடிக்காது. ஒரு சில கடைகளில் மட்டும் நன்றாக வேலைகாரர்கள் அமைவார்கள். 

வேலையாட்கள் நன்றாக அமைய ஒவ்வொரு மாதமும் வருகின்ற வளர்பிறை திரிதியை திதி அன்று நீங்கள் விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி அர்ச்சனை உங்கள் தொழில் யார் பேரில் இருக்கின்றதோ அந்த பெயருக்கு அர்ச்சனை ஒன்பது முறை (ஒவ்வொரு மாதமும் )செய்ய வேண்டும். தொழிலை நடத்துபவர் இதனை செய்யலாம் அல்லது தொழிலை நடத்துபவரின் மனைவி இதை செய்யலாம் இவ்வாறு செய்யும் போது உங்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவார்கள்.

ஒன்பது தடைவை என்பது ஒன்பது மாதங்கள் ஆகலாம் இதை செய்ய ஆரம்பித்த முதல் தடவையில் இருந்து உங்களுக்கு நல்ல பலன் அமையும்.அனைத்து பரிகாரமும் பொது பரிகாரம் தான் உங்கள் ஜாதகத்தை பார்த்து அதற்கு தகுந்தார் போல் பரிகாரம் செய்தால் உடனடி பலனை நீங்கள் அடையலாம்.

பல நண்பர்கள் என்னை தொடர்பு கொள்கிறார்கள் அவர்கள் சார் உங்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பேசி இருக்கிறேன் நான் இப்பொழுது ஒரு ராசிகல் கடையில் இருக்கிறேன் என்ன ராசிகல் நான் போடலாம் என்று கேட்கிறார்கள் அவர்களுக்கு நான் சொல்லுவது உங்கள் ஜாதகத்தை பார்க்காமல் திடீர் என்று கேட்பது தவறு. நான் ராசிகல் எல்லாம் யாருக்கும் பரிந்துரைப்பது கிடையாது. 

நான் சொல்லும் பரிகாரங்கள் அதிகபட்சமாக Rs 300 ல் முடிந்துவிடும். நீங்கள் பல சோதிடர்களிடம் சென்று கேட்டுவிட்டு கடைக்கு சென்று என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: