Followers

Saturday, July 28, 2012

சுக்கிரன் பரிகாரம்



வணக்கம் நண்பர்களே நேற்று பதிவு போடமுடியவில்லை நெட் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதால் பதிவை எழுதமுடியவில்லை. அதனால் இன்று பதிவுயை தருகிறேன். 

நான் தருகின்ற பரிகாரங்களை செய்யும் போது எனக்கு போன் செய்து விட்டு இன்று செய்யபோகிறேன் என்று சொல்லிவிட்டு பரிகாரத்தை செய்யுங்கள். இலவச சோதிட ஆலோசனையில் பரிகாரம் செய்பவர்கள் அப்படியே செய்யலாம். என்னை தொடர்பு கொள்ள தேவையில்லை.

கட்டண சோதிட ஆலோசனையில் செய்பவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொண்ட பிறகு தான் பரிகாரம் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் போது என்னுடைய பிராத்தனையும் உங்களுக்கு துணையாக இருக்கும். 

ஆறாம் வீட்டு தசா நடக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு பரிகாரத்தை பார்த்து வருகிறோம். இப்பதிவில் சுக்கிரனுக்கு என்ன பரிகாரம் என்று பார்க்கலாம். சுக்கிரன் தசா எந்த வீட்டியிருந்து இருந்து நடந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

சில பேருக்கு சுக்கிரனின் தசா பிரச்சினையை ஏற்படுத்தும் சுக்கிரன் அள்ளி அள்ளி கொடுப்பான் என்று நினைத்துக்கொண்டு இருப்பார்கள் ஆனால் சுக்கிர தசாவில் அவர்கள் கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் இந்த பரிகாரத்தை செய்த பிறகு அவர்கள் நல்ல நிலைக்கு வரமுடியும்.

பொதுவாக பரிகாரத்தில் இது மட்டும் சற்று கூடுதல் செலவு பிடிக்கும். இதை செய்ய வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று பட்டு துணி ( சிறிய அளவு கூட இருக்கலாம் அவர்களுக்கு பயன்படுகின்ற மாதிரி இருக்க வேண்டும்) ஒன்று ஒரு கிலோ சர்க்கரை ( ஜீனி) ,வாசனை பொருட்கள் அழகு சாதன பொருட்களை வாங்கி உங்கள் ஊரில் இருக்கும் ஒரு பெண்னுக்கு கொடுத்துவிட்டு அன்று உங்கள் ஊரில் இருக்கும் நவக்கிரக சந்நதியில் இருக்கும் சுக்கிரபகவானின் காலில் வெள்ளை மொச்சை கொட்டையை வைத்து உங்கள் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு நேராக உங்கள் வீட்டுக்கு சென்றுவிடுங்கள்.  

இலவச சோதிட ஆலோசனை கேட்பவர்கள் ஒரு முறை மட்டுமே என்னை தொடர்பு கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

நான் சோதிட தொழில் செய்தாலும் எனது செலவுக்கு எல்லாம் உழைத்துதான் சம்பாதிக்கிறேன். அந்த நேரத்தில் எனக்கு போன் செய்தால் அது நான் செய்யும் பணிகளுக்கு இடர் வருகிறது.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: