Followers

Friday, August 31, 2012

ஏழாவது வீடு ஒரு பார்வை



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவைப் பற்றி பார்த்து வருகிறோம். இப்பதிவில் ஏழாம் வீட்டில் இருக்கும் விசயங்களை எல்லாம் பார்க்கலாம் அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் எளிதில் புரிந்துவிடும்.

பொதுவாக சோதிடர்களிடம் கேட்கும் போது ஏழாம் வீட்டை திருமணத்திற்கு மட்டும் தான் பார்ப்பார்கள் வேறு எதற்கும் பார்க்கமாட்டார்கள். நாமும் ஏழாம் வீடு களத்திரம் மட்டும் தான் என்று நினைத்திருப்போம். 

ஏழாம் வீட்டைப்பற்றி பார்த்தால் உண்மையில் பயந்துவிடுவோம் பயப்படாமல். எவனுக்கு தான் மரணத்தைப்பற்றி பயம் இருக்காது. உங்களை கொல்வதில் முதல் நிலையில் இருப்பவர் ஏழாம் வீட்டு அதிபதி தான் என்பதை நினைவில் வையுங்கள்.திருமண காலத்தில் திருமணத்தை கொடுத்தவன். உங்கள் ஆயுள் முடியும்போது உங்களை கொல்வதிலும் முதலில் நிற்பான். 

பொதுவாக ஏழாம் வீட்டு தசா நடந்தால் நாம் உஷாராகி விடவேண்டும். நாம் ஏழாம் வீட்டு அதிபதி தசா நடக்கும் போது திருமணம் நடக்கும் வியாபாரத்தில் நல்ல வருமானம் வரும் என்று நினைத்துக்கொண்டு இருப்போம் அவனின் செயலை பொருத்து திடிர் என்று மரணத்தை தந்துவிடும்.

விட்டு விட்டு செல்லும் பயணத்தை குறிக்கும் வீடும் இந்த ஏழாம் வீடு.  பயணத்திற்க்கு 3 வது வீடும் 9 வது வீடும் தானே நாம் படித்து இருக்கிறோம். இது என்ன புது கதையாக இருக்கின்றது என்று நினைக்கலாம். 

அதாவது நீங்கள் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  இடையில் திருச்சி,மதுரை போன்ற இடங்களை பார்த்துவிட்டு சென்றால் அது தான் விட்டு விட்டு செல்லும் பயணம் அதனை குறிப்பதும் இந்த ஏழாம் வீடு தான்.

திருமணத்தைப் பற்றி தான் ஏற்கனவே நாம் பார்த்துவிட்டோம். நமக்கு அமையும் கூட்டு தொழில் எப்படி அமையும் அதனால் பிரச்சினை வருமா என்று தெரிவிக்கும் இடமும் இந்த ஏழாவது வீடு தான்.

நமது தாயாரின் சொத்து எப்படி இருக்கும் என்பதை காட்டும் இடம் தான் ஏழாவது வீடு. மறைமுக எதிரிகளை தெரிவிக்கும் இடமும் இந்த ஏழாவது வீடு தான். ஒரு வேலை நமக்கு அமையும் துணைவி ஒரு மறைமுக எதிரியோ அப்படி எல்லாம் நடைபெறாது. இருந்தாலும் இப்பொழுது அங்கு ஒன்று இங்கு ஒன்று என்று நடைபெறுகிறது.

உங்களின் இளைய சகோதர சகோதரிகளின் குழந்தைப் பாக்கியத்தை காட்டும் இடமும் இந்த ஏழாவது வீடு தான். உங்கள் குழந்தைகளின் தைரியத்தை காட்டும் இடமும் இந்த ஏழாவது வீடு தான். உங்கள் எதிரிகளின் தனத்தை தெரிவிக்கும் வீடு ஏழாவது வீடு. உங்களின் தந்தையாரின் லாபத்தை காட்டும் இடமும் இந்த ஏழாவது வீடு தான் இன்னும் பல விசயங்கள் இதில் இருக்கிறது. அதை எல்லாம் ஏழாவது வீட்டு தசா மூலம் உங்களுக்கு விளக்கபோகிறேன்.

என்னிடம் பேசிய வெளிநாட்டு நண்பர்கள் அனைவரும் ஆறு மாதத்திற்க்கு முன்பு தான் சென்னை வந்தேன் அப்பொழுது எனக்கு தெரியவில்லை தெரிந்து இருந்தால் உங்களை சந்தித்திருப்பேன் என்று பல பேர் எனக்கு போன் செய்கிறார்கள் அதனால் வெளிநாட்டு நண்பர்கள் உங்களின் நண்பர்களுக்கு இந்த பிளாக்கைப்பற்றி தெரிவியுங்கள் அவர்களும் பயன்பெறுவார்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, August 30, 2012

மந்திர அனுபவங்கள்



வணக்கம் நண்பர்களே நான் மந்திர அனுபவங்களை பற்றி எழுதியபோது நான் நினைத்தேன் இது எல்லாம் யார் படிக்கபோகிறார்கள். சும்மா படித்துவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள் என்று நினைத்து எழுதினேன் ஆனால் நான் எழுதிய பதிவுகளிலே அதிக பேர் என்னை தொடர்பு கொண்டு கேட்டது இந்த தொடருக்கு தான் இருக்கும் அதிலும் அயல்நாடுகளில் வசிப்பவர்கள் அதிகம் பேர் இதில் ஆவலாக உள்ளனர். அவர்களுக்காவே மந்திர அனுபங்களைப் பற்றி நிறைய எழுதுவேன்.

நான் பழைய பதிவில் சொல்லிருந்தேன் உங்களால் முடியும் என்றால் இந்த மந்திர அனுபவங்களை பெறலாம் என்று சொல்லிருந்தேன். இந்தியாவில் ஒருவரை தவிர வேறு யாரும் தொடர்பு கொள்ளவில்லை அயல்நாடுகளில் இருக்கும் பல நண்பர்கள் தொடர்பு கொண்டார்கள்.

இந்தியாவில் இருப்பவர்கள் ஒன்று மந்திர அனுபவங்களை ஏற்கனவே நன்றாக கற்று இருக்க வேண்டும் அல்லது நல்லவனாக நாங்கள் இல்லை என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள. இருக்கட்டும் அது அவர்களின் விதி.

ஏன் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் ?

அடுத்தவரை கெடுப்பதற்க்காக அல்லது இதன் மூலம் வேறு ஏதாவது பெறுவதற்க்காக. உண்மையில் சொல்லபோனால் மனித வாழ்க்கையை ஒவ்வொருவருக்கும் தினமும் நடைபெறும் நிகழ்வுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு கொள்வது அவர்களின் தசா புத்திதான். இதனை அனுபவ பூர்வமாக உங்களுக்கே தெரியும். 

இப்பொழுது நடைபெறும் ஒரு நிகழ்வுகள் அதாவது இப்பொழுது நீங்கள் இருக்கும் நிலையை நீங்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக செய்யவேண்டியது இந்த மாதிரி மந்திரங்களை கற்றுக்கொள்வதை விட வேறு இல்லை.

நீங்கள் சூரிய தசாவில் இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது சூரிய தசாவில் முதலில் ஒரு வியாபாரத்தை தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு சூரிய தசா நல்ல பலனை வழங்குகிறது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது அந்த வியாபாரம் நன்றாக செல்லும். 

சூரிய தசாவின் மொத்த காலமே ஆறு வருடம் தான். உங்கள் வியாபாரம் ஆறு வருடம் நன்றாக சென்ற வியாபாரம் அடுத்த வருகின்ற சந்திரன் தசாவில் சந்திரன் தீமை தரும் இடத்தில் இருந்து நடைபெற்றால் கண்டிப்பாக உங்கள் வியாபாரம் நஷ்டத்தை சந்திக்கும்.

நீங்கள் கஷ்டபட்டு கடனை வாங்கி இருப்பதை எல்லாம் விற்று வியாபாரம் நன்றாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் நஷ்டத்தை எதிர்கொள்வது கடினம். அதைவிட உங்களின் மதிப்பு அந்த வியாபாரத்தில் தான் இருக்கின்றது. 

நஷ்டம் அடைந்தால் உங்களால் ஒரு முதலாளியாக இருந்ததை விட்டு விட்டு அடுத்தவர்களிடம் போய் வேலை பார்ப்பது தானே தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மனது ஏங்கும். இந்த மாதிரி நிலைகளை தவிர்ப்பதற்க்கு பெரும் உதவியாக இருப்பது இந்த மந்திரங்கள் தான் உங்களை காப்பாற்றும். என்ன இப்பொழுது புரிகிறதா.

உண்மையில் பல கம்பெனிகளின் முதலாளிகள் இந்த மாதிரி தான் தொடர்ந்து தன்னுடைய வியாபாரத்தை தக்க வைத்துக்கொள்கிறார்கள். நானே பல வியாபார நிறுவனங்களை காப்பாற்றி கொடுத்து இருக்கிறேன்.

இந்த நேரத்தில் நீங்கள் ஒன்று கேட்க உங்கள் மனது நினைக்கும் எல்லாம் விதிபடிதான் நடக்கும் எப்படி இது சாத்தியபடும் என்று உங்கள் மனதிற்க்கு தோன்றும். எல்லாம் விதிபடிதான் நடக்கும் என்று சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா. ஏதாவது செய்தால் தான் உண்டு இல்லை என்றால் நீங்கள் ஆட்டத்தை விட்டு விலகிவிடவேண்டியது தான். இவ்வளவு கிரகத்தை கண்டுபிடித்தவன் அதில் இருந்து கொஞ்சமாவது தப்பித்துக்கொள்ள வழி தேடி இருப்பான் அல்லவா அந்த வழிதான் இந்த வழி.

இந்த நேரத்தில் உங்கள் மனதில் ஒன்று தோன்றும்

நீங்கள் மந்திர அனுபங்களை பெறுவதை விட பெரும் சாமியார்கள் அதாவது கார்ப்பரேட் சாமியார்கள் நடத்தும் தியானம் மற்றும் யோக கற்றுக்கொண்டு 
அதன் வழி நடக்கலாமே என்று தோன்றும் அது தவறு இல்லை என்று நானும் ஒப்புக்கொள்வேன். அதில் உங்கள் மனது மட்டும் அமைதி கொள்ளும். உங்கள் வியாபாரத்திற்க்கு மற்றும் வரும் பிரச்சினைகளுக்கு அது வழி வகுக்காது.

ஒரு சிலருக்க நடக்கலாம் கண்டிப்பாக அனைத்து பேருக்கும் அதில் வழி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மந்திர அனுபவங்கள் தொடரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, August 29, 2012

மீனம் அமையும் வரன்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவில் மீன ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன மாதிரி வரன் அமையும் என்று இப்பதிவில் பார்க்கலாம். 

மீன ராசியின் அதிபதி குரு. மீன ராசிக்கு ஏழாவது வீடாக வருவது கன்னி ராசி. கன்னி ராசியின் அதிபதி புதன்.  இவர் இருக்கும் ஏரியாவில் வணிகவளாகங்கள்,விஷ்ணு கோவில் இருக்கும் இருக்கும்.

இவர் பேசுவது கேலியும் கிண்டலுமாக இருக்கும். எவரை சந்தித்தாலும் அவரை நண்பராக மாற்றிவிடுவார். அவர்களிடம் பணத்தை கறந்துவிடுவார்.பல நண்பர்களை பெற்று இருப்பார் எப்பொழுதும் அழகாக ஆடை அணிந்து கொள்வதில் விருப்பம் உள்ளவர்.

இவர் வேலை செய்வது செய்தி தொடர்பு துறை, அயல்நாட்டு தூதுவர், முகவர்களாக இருப்பது, பொது மக்கள் சம்பந்தமாக  தொடர்பில் இருப்பது போன்ற வேலையில் இருப்பார். இவர் யாருடனும் சேர்ந்து தொழில் செய்தாலும் அதில் வெற்றி பெற்றுவிடுவார்.

எந்த நேரத்திலும் ஏதாவது சிந்தனையுடன் இவர் இருப்பார். அதனால் மனது அமைதி குறையும். எந்த மாதிரி சோதனை வந்தாலும் அதனை சிரித்துக்கொண்டே சமாளித்துவிடுவார். உடல் உழைப்பு இருக்காது மூளை உழைப்பு அதிகம் இவரிடம் இருக்கும்.

அடிக்கடி தொழிலை மாற்றுவதால் இவர் நஷ்டத்தை சந்திப்பார். அந்த நஷ்டத்தால் ஒன்றும் கலங்கிவிடமாட்டார்.

மீன ராசியை லக்கினமாக கொண்டவர்களே இந்த மாதிரி வரன் வந்தால் அவர் தான் உங்களுக்கு அமையும் வரன்.

நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவிற்க்கு தேவையான அடிப்படை எல்லாம் பார்த்துவிட்டோம். அடுத்து ஏழாம் வீட்டு தசாவில் உள்ள பண்புகளை எல்லாம் ஒவ்வொன்றாக பார்க்கபோகிறோம். அனைத்தையும் மீண்டும் ஒரு முறை படித்துபாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


Tuesday, August 28, 2012

கும்பம் அமையும் வரன்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவில் அமையும் வரன் எப்படி என்று பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பதிவில் கும்ப ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு அமையும் வரனைப் பற்றி பார்க்கலாம். கும்ப ராசியின் அதிபதி சனி கும்ப ராசிக்கு ஏழாவது வீடாக வருவது சிம்ம ராசியாக வருகிறது. அதன் அதிபதி சூரியன்.

இவர்கள் வசிப்பது மலை ஸ்தலங்களில் தான் அதிகம் வசிப்பார்கள் அல்லது வீட்டுக்கு பக்கத்தில் குன்றுவாது இருக்கும்.இவர்களின் உடல் அமைப்பு ஆண் தன்மை உடையதாக இருக்கும். நடுத்தரமான உயரம். கம்பீரமான நடை இருக்கும்.

அதிகமான தன்னம்பிக்கை இருக்கும். அடுத்தவர்களிடம் எந்த உதவியும் எதிர்பார்க்க மாட்டார்கள். இவருக்கு வரும் பிரச்சினையை கூட உங்களிடம் சொல்ல மாட்டார்கள் அவர்களே வரும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விளைவார்கள். இவர் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டார். எந்த தவறும் செய்ய மாட்டார் அப்படியே செய்தாலும் இவர் மாட்டிக்கொள்வார்.

இவர் வேலை செய்வது அரசாங்கத்தில் தான் அதிகம் இருக்கும். அந்த வேலையில் நேர்மையாக இருப்பார். எந்த வேலை செய்தாலும் அந்த வேலையில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்.எந்த வேலையாக இருந்தாலும் பின் வாங்க மாட்டார். அந்த வேலையை முடித்தால் தான் இவருக்கு தூக்கம் வரும்.தனக்கு கீழ் வேலைபார்ப்பவர்களை விடாமல் வேலையை வாங்குவார். எந்த வேலையும் சட்டப்படி தான் நடக்க வேண்டும் என்று நினைப்பார்.

கோபம் அதிகமாக வரும் அதனால் இவருக்கு எதிரிகள் வர வாய்ப்பு இருக்கிறது.கோபத்தை மட்டும் வராமல் இருந்தால் இவர்கள் போல் நல்லவர் யாரும் இல்லை என்று சொல்லலாம் அந்தளவுக்கு இவர் நல்லவர்.

கும்ப ராசியை லக்கினமாக கொண்டவர்களே இப்படி வந்தால் இவர் தான் உங்களின் வாழ்க்கை துணையாக வருபவர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


மகரம் அமையும் வரன்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவில் இப்பதிவில் மகர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு அமையும் வரனைப் பற்றி பார்க்கலாம். 

மகர ராசியை பொருத்தவரை திருமண வாழ்க்கை அவசரபட்டு முடிவு எடுத்தால் பிரச்சினையை சந்திக்க வேண்டி வரும். மகர ராசியின் அதிபதி சனி. மகரத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன்.

வரும் துணைவர் ஒரு நேரம் நல்ல குண்டாக இருப்பார். ஒரு நேரத்தில் ஒல்லியாகி விடுவார். வளர்பிறை தேய்பிறையை பொருத்து அமையும். 

குளக்கரை ஏரிக்கரை மற்றும் கடலுக்கு அருகில் இவர் வசிப்பார்.  மனதால் செய்யும் தொழிலில் இவர் இருப்பார். கவிதை எழுதுவது, கதை எழுதுவது, திட்டமிடுதல் போன்ற வேலைகளை இவர் செய்வார். நடப்பதற்க்கு ஆசைபடுவார். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார். அதிகமாக பேசுவார்.

எந்த ஒரு விசயத்தையும் பல கோணங்களில் சிந்தித்து பேசிக்கொண்டு இருப்பார். நீங்கள் பேசுவதை விரும்பமாட்டீர்கள். ஆனால் இவர் பேசிக்கொண்டே இருப்பார்.உங்களை சந்தேகப்படுவார். அதனால் பிரச்சினை வரும்.

காரணமே இல்லாமல் தன் மனதை வருத்திக்கொள்வார். இது நடக்குமோ அது நடக்குமோ என்று மனதை குழப்பிக்கொள்வார். ஒரு நேரத்தில் துணிச்சலாக பேசுவார். அப்படியே பயந்துக்கொண்டு இருப்பார்.

இவருக்கு என்று பழக்க வழக்கங்கள் என்று ஒன்றும் இருக்காது அடுத்தவரை பார்த்து தான் பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்வார். இவர் எடுக்கும் முடிவு கூட அடிக்கடி மாற்றிக்கொள்வார்.

மகர ராசியை லக்கினமாக கொண்டவர்களே இப்படி வந்தால் அவர் தான் உங்களுக்கு அமையும் வரன்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தனுசு அமையும் வரன்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவில் அமையும் வரனைப் பற்றி பார்த்து வருகிறோம். இப்பதிவில் தனுசு ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு அமையும் வரனைப் பற்றி பார்க்கலாம்.

தனசு ராசியின் அதிபர் குரு. தனசு ராசிக்கு ஏழாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். இப்பொழுது தனுசு ராசிக்கு எப்படி பட்ட வரன் அமையும் என்று பார்க்கலாம்.

இவர் வசிப்பது  கடை தெருவில் வீடு அமைந்திருக்கும்.ஒவ்வொரு நிமிடமும் புதிய யோசனை இவர் மனத்தில் தோன்றிக்கொண்டே இருக்கும். அடுத்தவரை கவர்வதில் இவர் வல்லவராக இருப்பார். அழகான ஆடைகளை அணிவார். இவரின் பேச்சு கேலியும் கிண்டலுமாக இருக்கும். 

இவர் வேலை செய்வது கிளர்க்காக வேலை பார்ப்பார் அல்லது ஏஜென்டாக பணிபுரிவார். சொந்த தொழிலும் செய்வார். புதிய புதிய தொழில்களை தொடங்குவார். ஒரு தொழில் செய்துக்கொண்டு இருக்கும்போதே அடுத்த தொழிலில் இறங்குவார். நஷ்டம் வந்தாலும் பயப்பட மாட்டார்.

நல்ல சாப்பிடுவதிலும் நாட்டம் அதிகம் செல்லும்.  மாமன்கள் கூட தொடர்பு அதிகம் இருக்கும். புதியதாக எதையும் அறிந்துகொள்ளும் அறிவு இயற்க்கையாக இவரிடம் இருக்கும். இவரை புகழ்ந்தால் எளிதில் இவர் வசப்படுவார்.

காதல் செய்வதற்க்கு இவர் மனம் ஏங்கும். இவரின் துணையை நல்ல வசதியான இடத்தில் தேடுவார். சிந்தனை அதிகமாக இவருக்கு இருக்கும். அதனால் தூக்கம் கெடும்.

தனசு ராசியை லக்கினமாக கொண்டவர்களே இப்படிபட்டவர்களை பார்த்தால் அவர் தான் உங்களுக்கு அமையும் வரன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Monday, August 27, 2012

விருச்சிகம் அமையும் வரன்



விருச்சிக ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு அமையும் வரன் எப்படி என்று ஏழாம் வீட்டு தசா மூலம் இப்பதிவில் பார்க்கலாம். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் விருச்சிக ராசிக்கு ஏழாம் வீடாக வருவது ரிஷப ராசி. ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன்.

உங்களுக்கு அமையும் வரன் இவர் இருக்கும் தெருவில் பெருமாள் கோவில் இருக்கும்,பூ மார்கெட் தெருவில் கூட இருக்கலாம்.ஆடம்பர பிரியராக இருப்பார். உடலில் எந்த நேரமும் வாசனை திரவியங்கள் மணக்கும்.

அதிகமாக வெள்ளை ஆடையை விரும்பி அணிவார். காமத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். நல்ல அழகானவராக இருப்பார். வாகன பயணத்தில் ஒரு தனியான விருப்பம் இருக்கும். விதவிதமான கார்களை வைத்திருப்பார்.

அடிக்கடி மற்றவர்களிடம் பணத்தை வாங்குவார் கொடுத்தவர் கேட்டால் அவருக்கு இழுத்தடித்து தான் திரும்பி கொடுப்பார்.சுயநலன் நிறைந்தவர் இவர் என்று சொல்லலாம்.

பார்ட்டி கொண்டத்தில் அதிக ஈடுபாடு காட்டுவார். இவருக்கு வேலையை விட இந்த மாதிரி தான் அதிகம் ஈடுபாடு இருக்கும். இசை கலைகளில் மீது தீராத காதல் இருக்கும். அடிக்கடி மால்களில் இவரை காணலாம்.

வேலையை விட ஊர் சுற்றுவதில் அதிகம் விரும்புவார். அடிக்கடி சுற்றுலா தளங்களுக்கு செல்வார். மற்றவர்களை புண்படுத்தும் பேச்சுகள் இவர்க்கு இருக்கும். இவருக்கு கோபங்களும் அடிக்கடி ஏற்படும். பொறாமை குணங்களும் இவருக்கு உண்டு. சபலபுத்தி காரணமாக பல துன்பங்களை வாங்கிக்கொள்வார்.

எவர் மூலமாக இவருக்கு செலவு செய்ய பணம் வந்துக்கொண்டே இருக்கும். அதிக செலவு செய்வது சிற்றின்பத்திற்க்கு தான் இருக்கும்.குபேரனின் மைந்தர் என அனைவராலும் அழைக்கப்படுவார்.

விருச்சிக ராசியை லக்கினமாக கொண்டவர்களே இவர்கள் தான் உங்களுக்கு வரனாக வருபவர்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

துலாம் அமையும் வரன்



ஏழாம் வீட்டு தசாவில் இப்பதிவில் துலாம் ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு அமையும் வரன் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

துலா ராசியின் அதிபதி சுக்கிரன். துலா ராசிக்கு ஏழாவது வீடாக வருவது மேஷம். அதன் அதிபதி செவ்வாய். உங்களுக்கு வரனாக வருபவர் எங்கு இருப்பார் என்றால் இவர்களின் தெருவில் முருகன் கோவில் இருக்கும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் இயங்கிவரும். அந்த மாதிரி தெருவில் தான் இவர்கள் இருப்பார்.

நல்ல உயரமான ஆளாக இருப்பார். நல்ல துணிச்சல் இருக்கும். எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருப்பார். சோம்பல் என்பதே இவர்களுக்கு இருக்காது.

பணிபுரியும் இடம் மக்களுக்கு பாதுகாப்பு தரும் துறையில் இருப்பார். நான் ஒரு பெண்ணுக்கு வரன் பார்க்கும் போது இப்படி சொன்னேன். அந்த பெண்ணுக்கு அமைந்தவர் ஒரு பிரவேட் டிடெக்டிவ் கம்பெனியில் வேலை செய்தவர் வரனாக அமைந்தார். 

ஒரு சிலர் மிகப்பெரிய தொழிற்சாலையில் தலைமை பொறுப்பில் இருப்பார்கள். ஒரு சிலர் மிகபெரிய இயந்திரங்களை கையாளும் துறையிலும் வேலை செய்யலாம்.

அதிக கோபம் இவருக்கு வரும். ஏதாவது அநியாயம் நடந்தால் உடனே களத்தில் இறங்கி ஒரு வழி பண்ணிவிடுவார். ஊரில் நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்பவர் இவராக தான் இருப்பார்.

இவரின் காம ஆசைக்கு ஈடுக்கொடுப்பது கொஞ்சம் கடினம்தான். அதிக ஈடுபாடு இவருக்கு இருக்கும்.

துலாம் ராசியை லக்கினமாக கொண்டவர்களே இந்த மாதிரி இருப்பவர் தான் உங்களுக்கு வரனாக வருபவர்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

கன்னி அமையும் வரன்



நாம் ஏழாம் வீட்டு தசாவை பற்றி பார்த்து வருகிறோம் இப்பதிவில் கன்னி லக்கினத்திற்க்கு அமையும் வரனைப் பற்றி பார்க்கலாம். கன்னி லக்கினத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மீன ராசி. கன்னி லக்கினத்தின் அதிபதி புதன் மீன லக்கினத்தின் அதிபதி குரு. 

கன்னி லக்கினத்தை கொண்டவர்களுக்கு அமையும் வரன் நல்ல குடும்பத்தில் இருந்து வரலாம். உயர் குலத்தில் இருந்து வருவார். அப்படி இல்லை என்றால் அவர்களின் குணாதிசயங்கள் அவர்களே போல் இருக்கும்.

கோவிலுக்கு அருகில் வீடு இருக்கும். வீட்டில் எந்த நேரமும் பூஜை செய்யவார். இவர்கள் பணிபுரியும் இடம் கோவிலாக இருக்கும். அறநிலையத்துறையில் பணிபுரிவார். நீதிமன்றம் பொதுநல அமைப்பு போன்றவற்றில் பணிபுரிவார். 

இவர்கள் நீதிபடிதான் நடக்க வேண்டும் என்று சொல்வார். பெரியோரை மதித்து நடப்பார். அடுத்தவர்களிடம் அளவு கடந்த கருணை வைப்பார். எதிர்காலத்தை பற்றி அதிக திட்டம் வைத்திருப்பார். அடுத்தவரைப் பற்றி தன் நிலையில் வைத்து எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பார்.

தேவையில்லாமல் பேசிக்கொண்டே இருப்பார். அதனால் அடுத்தவர்களிடம் எரிச்சலை வாங்கிக் கொள்வார். இவர் சொல்லுவதை அடுத்தவர் ஏற்க வேண்டும் என்று நினைப்பார்.

அதிகமாக புண்ணிய யாத்திரை செல்வதில் இவரின் மனம் ஈடுபடும். அனைத்து கோவிலுக்கும் செல்வதை ஒரு வேலையாகவே இவருக்கு இருக்கும்.

என்ன கன்னி ராசியை லக்கினமாக கொண்டவர்களே இப்படி இருந்தால் இவர் தான் உங்களின் வாழ்க்கை துணையாக வருபவர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Sunday, August 26, 2012

சிம்மம் அமையும் வரன்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவில் இப்பதிவில் சிம்ம லக்கினத்திற்க்கு எப்படி பட்ட வரன் அமையும் என்று பார்க்கலாம். சிம்ம ராசிக்கு ஏழாவது வீடாக வருவது கும்பராசி. சிம்ம ராசியின் அதிபதி சூரியன் கும்பராசியின் அதிபதி சனி. இரண்டு பேரும் தந்தையும் மகனுமாக இருந்தாலும். பரம எதிரிகள். என்ன செய்வது கடவுளின் செயல் என்றால் அதை பட்டுதான் ஆகவேண்டும். சிம்ம ராசியை லக்கினமாக உங்களுக்கு அமையும் வரன் எப்படி என்று பார்த்து விடலாம்.

அதிக உயரம் இருக்க மாட்டார். அழகும் கம்மிதான் ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள் .முகத்தில் எண்ணெய் வழியும். இவர்களின் நடையை பார்த்தால் ஊனமுற்றவர்கள் போல் தோன்றும். இவர் இருக்கும் ஏரியாவில் ஊனமுற்றோர் இல்லம் இருக்கும். 

எதையும் லாப நோக்கத்தோடு தான் பார்ப்பார்கள். எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணம் இவரிடம் காணப்படும். நண்பர்களிடம் சம்பாதிக்க நினைப்பார்கள். இவர்கள் பேசுவது பெரும்பாலும் எப்படியாவது பணத்தை சேர்த்துவிடவேண்டும் அடிக்கடி சொல்லுவார்கள்.

தவறு செய்வதற்க்கு அஞ்ச மாட்டார்கள் ஆனால் நீங்கள் தவறு செய்தால் அடுத்தவர்களிடம் மாட்டிக்கொள்வீர்கள். எப்படி ஜோடி பொருத்தம் பார்த்தீர்களா. 

எந்த பிரச்சினையிலும் தெளிவான முடிவு எடுப்பவர்களா இருப்பார். பொதுமக்களிடம் எளிதில் பழககூடியவர்கள். வசியமான பேச்சு திறமை உடையவர்.சகோதர பாசம் அதிகமாக இவர்களிடம் இருக்கும். லாபம் லாபம் என்று சேர்த்த பணத்தை சகோதரர்களிடம் கொடுத்துவிடுவார்கள். 

என்ன சிம்ம ராசியை லக்கினமாக கொண்டவர்களே உங்களுக்கு வாழ்க்கையை துணை இப்படி தான் இருப்பார் அப்படி யார் வந்தாலும் அவரை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


Saturday, August 25, 2012

மந்திர அனுபவங்கள்


வணக்கம் நண்பர்களே தொடர்சியாக ஏழாவது வீட்டைப் பற்றி பார்த்து வந்தாலே ஒரு சிலருக்கு போர் அடித்துவிடும் அதனால் இந்த பதிவில் மந்திர அனுபவங்களைப் பற்றி பார்க்கலாம்.

இந்த மந்திரங்களை கற்க நினைத்து ஒரு குருவிடம் சென்றால் அவர்கள் கண்டிப்பாக உடனே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நான் முதலில் கற்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் குருவை தேடிய கதை உங்களுக்கு தெரிந்ததே அப்படி தேடிய போது முதலில் நான் தேடியது கண்டிப்பாக பெரிய குருவை நாம் தேடக்கூடாது என்று முடிவு எடுத்து இருந்தேன் ஏன் என்றால் பெரிய குருவிடம் ஏகாபட்ட கூட்டம் இருக்கும்.

அடுத்தது அவர்களுக்கு நம்மால் பணி செய்ய முடியாது ஏன் என்றால் ஒரு சிலர் பணத்தை எதிர்பார்த்தால் என்ன செய்வது என்னிடம் அப்பொழுது பணம் இல்லை இப்பொழுதும் இல்லை தான் ஆனால் அப்பொழுது பணத்தை கேட்டால் யாரும் கொடுப்பதற்க்கு ஆள் இல்லை இப்பொழுது ஆட்கள் இருக்கிறார்கள்.

கண்டிப்பாக சந்நியாசியாக இருப்பவரை தான் தேர்ந்தெடுப்பது என்று முடிவு எடுத்து தேடினேன். அவர் கிடைத்ததை தான் பழைய பதிவில் சொன்னேன் அல்லவா நான் பல சாமியார்களை பார்த்தேன். அவர்களை பார்க்கும் போது அவர்கள் பேசுகிற விதம் கண்டிப்பாக நமக்கு ஒன்றுமே புரியாது. நாம் அவர்களை பார்க்கதான் வந்து இருக்கிறோம் என்பதைப் பற்றி கவலைபடாமல் அவர்கள் வேறு யாருடன் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

நம்மிடம் சம்பந்தமே இல்லாமல் ஒரு மணி நேரமாவது பேசுவார்கள் அதுக்குள் நமக்கு இருந்த பொறுமை எல்லாம் போய்விடும் இப்படியே பல நாட்களை ஓட்டிவிடுவார்கள். அந்த பழக்க வழக்கம் தான் நான் இன்று கூட என்னிடம் பேசுவர்களிடம் சம்பந்தமே இல்லாமல் சில நேரங்களில் பேசுவேன்.அதனால் நான் சாமியார் கிடையாது பழக்க வழக்கம் தான்.

அவர்கள் நினைப்பது இதனை பின்பற்றகூடாது அல்லது தவறான ஆளாக நாம் மாறிவிடுவார்கள் என்று  நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய குரு அடிக்கடி என்னிடம் கூறுவது ராஜேஷ் நான் சந்நியாசி வாழ்க்கையை பார்த்துவிட்டேன் நீ சம்சார வாழ்க்கையை வாழு என்று சொல்வார்.

ஏன் அவ்வாறு கூறுகிறார் என்று எனக்கு தெரியாது ஆனால் அவர் உண்மையான சந்நியாசி தான். அவர் வெளியில் வருவது கூட கிடையாது அவருக்கு தெரிந்தவர்கள் என்று எடுத்தால் ஒரு பத்து பேர் கூட தேறமாட்டார்கள் மற்றபடி அவருக்கு தெரிந்தவர்கள் அவரை போல சாமியார்கள் தான். அவரின் போட்டாவை அவரின் அனுமதியோடு இந்த தளத்தில் ஒரு நாள் போடுகிறேன்.

அவர் இன்று வரை இருக்கிறார். அவர் இந்த பூமியை விட்டு செல்லும் நாளும் என்னிடம் சொல்லி இருக்கிறார். உண்மையில் அந்த மாதிரி ஒரு குரு கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை.

மந்திர அனுபவங்களை பெறுவதால் நமக்கு என்ன கிடைக்கும். மந்திர அனுபங்களை பெறுவதற்க்கு பல தெய்வங்களை ஒவ்வொரு வரும் உரு ஏற்றுவார்கள். அந்த தெய்வத்திற்க்கு தகுந்தார் போல் பலனை முதலில் நமக்கு தரும்.

மந்திர அனுபவங்களை கற்பதற்க்கு முன்னால் எனக்கு ஒழுங்காக தூக்கம் வராது. எப்படி தூக்கம் வரும் கடுமையான வறுமை இருந்தால் எவனுக்கு தான் தூக்கம் வரும். மந்திர அனுபவங்களை பெற்ற பிறகு எனக்கு என்ன நடந்து என்றால் படுத்த உடனே தூக்கம் வந்துவிடும்.

ஒரு தாய் எப்படி நம்மை குழந்தையாக இருக்கும் போது தாலாட்டி தூங்க வைப்பாளோ அதை விட இந்த தாய் தாலாட்டி தூங்க வைப்பாள். முதலில் கவலை வராது. அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள்.

மந்திர அனுபங்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

என்னை மந்திரவாதி என்று நினைக்க வேண்டாம் அனைத்து அனுபங்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் உங்களுக்கும் அது பயன்படும் என்று தான் எழுதுகிறேன். அடுத்த பதிவில் ஏழாம் வீட்டு தசாவைப் பற்றி பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

சொல்ல துடிக்குது மனசு



வணக்கம் நண்பர்களே நாம் ஏழாம் வீட்டு தசாவை பற்றி பார்த்து வருகிறோம். இதை நான் எழுதியபோது பலபேர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு உண்மையை எழுதிவிடாதீர்கள் அவற்றை பார்த்து ஒன்று மகிழ்ச்சி அடைவோம் அல்லது கவலை அடைவோம் அதனால் முழுவதும் எழுதிவிடாதீர்கள் என்று என்னிடம் கேட்டார்கள்.  அனைத்தும் பொதுவான ஒரு தகவல் தான். இதை பார்த்து நீங்கள் பயப்பட தேவையில்லை. 

அப்படியே இது உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என்று உங்கள் மனது நினைத்தால் நீங்கள் திருமணம் செய்தவற்க்கு முன்பே அனைத்தையும் பார்த்துவிட்டு பொருத்தமான வரனை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். தேவையற்ற பிரச்சினையை தவிர்க்கலாம். மனிதனை பொதுவாக சிக்கவைப்பது திருமணத்தில் தான் ஒரு சிலருக்கு சொர்க்கமாக அமையும். ஒரு சிலருக்கு அது தான் அவர்களா தேடிக்கொண்ட புதைகுழியாக இருக்கும் அனைத்தும் கிரகங்களின் தாக்கம்  தான் வேறு ஒன்றும் இல்லை.

குரு திருமணத்திற்க்கு முக்கிய காரண கர்த்தவாக இருந்தாலும் சனியும் முக்கிய காரணகர்த்தவாக இருக்கிறார். உங்களை திருமணத்தின் மூலம் கர்மத்தில் மாட்டவைக்கிறார். சனியின் நிலை பலவாறு இதில் காணப்படுகிறது. இந்த உலக பந்தத்தில் சிக்க வைக்கவேண்டும் என்று சனி நினைக்கிறார். பல பேருக்கு ஏழரை சனியில் தான் திருமணம் நடைபெறுகிறது. அதனால் சனியும் இதில் முக்கியமானவர்.

இதை எல்லாம் நீங்கள் பார்த்து திருமணம் செய்துகொண்டால் ஒன்று திருமணத்திற்க்கு முன்பே சரியான வரனை தேர்வு செய்யலாம் அல்லது திருமணத்திற்க்கு பின்பு நமக்கு அமைந்த வரன் இப்படி தான் இருப்பார் அவரை சொல்லி ஒன்றும் இல்லை எல்லாம் கிரகத்தின் வேலை தான் என்று மனதை சமாதான படுத்திக்கொண்டு நீங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியோடு சந்தோஷமாக வாழலாம்.திருமணம் முடிந்தவர்கள் இதை படித்தால் நீங்கள் கண்டிப்பாக உங்கள் திருமண வாழ்வில் பிரச்சினை இல்லாமல் வாழலாம். 

உங்களை நம்பி பெரியவர்கள் அல்லது நீங்களே தேர்ந்தெடுத்திருக்கலாம் உங்கள் வாழ்க்கை துணையை. அவர்களிடம் நீங்கள் சண்டை சச்சரவு இல்லாமல் இருப்பது உங்களின் கடமை. திருமணம் என்பது துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு மாதிரி அதை திரும்பபெற இயலாது. கடைசிவரை நீங்கள் தான் பொறுமையுடன் இருந்து குடும்பத்தை நடத்தவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Friday, August 24, 2012

கடகம் அமையும் வரன்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவில் கடக லக்கினத்திற்க்கு அமையும் வரன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். கடக லக்கினத்திற்க்கு அதிபதி சந்திரன் இவர் ஒரு நிலையில் இருப்பது என்பது ரொம்ப கடினம்.  இரண்டரை நாளுக்கு ஒரு தடவை குணம் மாறிவிடும்.

இவருக்கு அமையும் வரனாக அமைவர் மகர ராசியாக வருகிறது அதன் அதிபதி சனி. எப்பொழுதும் சந்திரனுக்கும் சனிக்கும் ஆகாது. ஆனால் கடவுள் இவர்களை தான் இணைக்கிறார்.

கடக லக்கினத்திற்க்கு வருபவர் எப்படி என்று பார்க்கலாம். இவர்கள் எளிமையாக தான் இருப்பார்கள். ஆடம்பர வாழ்க்கையை விரும்பமாட்டார்கள். இவரை பார்க்கும் போது கர்வமாக தெரிந்தாலும் யாரும் கஷ்டபட்டால் உடனே ஓடி வந்து உதவி செய்வார்கள். இவர்களுக்கு சும்மா இருக்க பிடிக்காது. ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார்கள் . உயரம் குறைவாக இருப்பார்கள். அழகும் குறைவாக தான் இருக்கும். அனைத்து விசயங்களும் தெரிந்து வைத்திருப்பார்கள் ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

இவர்கள் இருக்கும் ஏரியாவில் மருத்துவமனை, ஆன்மிகமடங்கள், சுடுகாடு போன்றவை இருக்கும். இவரை நீங்கள் வரன் பார்க்க போகும் போது எதிரில் ஊனமுற்றவர் வரலாம்.இரும்பு எண்ணெய் சம்பந்தப்பட்ட தொழிலும் இருக்கலாம்.

பெரும்பாலும் தனிமையை விரும்புவார்கள். எந்த விசயத்தையும் எடுத்தவுடனே பேசிட மாட்டார்கள்  நிதானத்துடன் தான் பேசுவார்கள்.ஆனால் கடக லக்கினம் பேசியே கொல்வார்கள். மகர லக்கினம் பேச மாட்டார்கள் இருவரும் இணையும் போது பெரும்பாலும் கடக ராசியால் தான் சண்டை வரும். கடக ராசியை லக்கினமாக கொண்டவர்களே பொறுமையுடன் இருப்பது உங்கள் திருமண வாழ்வுக்கு மகிழ்ச்சியை தரும்.

கடக ராசியை லக்கினமா கொண்டவர்களே உங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் அவசரபடாமல் நிதானத்துடன் தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும். பொதுவாக மகர ராசியை கொண்டவர்கள் சண்டை செய்ய மாட்டார்கள் சண்டை என்று வந்துவிட்டால் விட்டுவைக்கமாட்டார்கள் நீங்கள் காலிதான் என்னடா பயமுறுத்துகிறேன் என்று நினைக்காதீர்கள் என்னுடைய அனுபவத்தை சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


மிதுனம் அமையும் வரன்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவைப் பற்றி பார்த்து வருகிறோம் அதற்க்கு இந்த மாதிரி சில அடிப்படைகள் எல்லாம் இருந்தால் தான் உங்களால் அனைத்து பலன்களையும் எளிதில் கண்டுபிடிக்கமுடியும் அதனால் என்னால் முடிந்த அளவுக்கு தருகிறேன்.

உங்களுக்கு இந்த மாதிரி பதிவுகள் எல்லாம் உங்களை உயர்த்தும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன் உங்களுக்கு புரியவில்லை என்றால் பலமுறை படித்து பாருங்கள்.

இப்பதிவில் மிதுன லக்கினத்திற்க்கு என்ன மாதிரி வரன் அமையும் என்று பார்க்கலாம். மிதுனம் ராசியின் அதிபதி புதன் இவருக்கு ஏழாவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு.

இவருக்கு அமையும் வரன் சிறந்த பக்தி மானாக தான் இருப்பார். நல்ல அறிவு இருக்கும். எந்த ஒரு செயலிலும் கட்டுபாடும் ஒழுங்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பார் அளவுக்கு அதிகமாக கட்டுபாட்டால் எதிரியை பெற்று இருப்பார். அந்தண தொடர்பு அதிகம் இருக்கும்.

வீட்டை கோவிலாக வைத்து இருப்பார்கள் அல்லது கோவிலுக்கு அருகில் வீடு இருக்கும் இவர் பணிபுரியும் இடம் நீதிமன்றம். அரசு கருவூலம் போன்ற இடமாக இருக்கும். இவங்க பேசும் போது பார்த்தால் இறைவன் என்னோடு பேசிக்கிட்டு இருக்கிறார். விதி அப்படி தான் நடக்கும். நியாயமாக இருக்க வேண்டும் என்று தான் இவங்க பேச்சு இருக்கும்.

பெரும்பாலும் இவர்கள் காதல் செய்வதில்லை அப்படியே காதல் செய்தாலும் தோல்வியில் தான் முடியும்.இவர்கள் அதிகமாக பணத்தை விரும்பமாட்டார் ஊரில் பொதுகாரியங்களுக்கு இவர்கள் தான் தலைமை தாங்குவார்.

இவரின் எதிர்பார்ப்பு இவர் சொல்லும் கருத்தை அடுத்தவர்கள் ஏற்கவேண்டும். ஊரில் உள்ளவர்கள் இவரை மதிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

உடைகள் விசயத்தில் அதிகம் ஈடுபாடு இருக்காது பாராம்பரிய உடைகளை அணியவேண்டும் என்று நினைப்பார். மதவிசயத்தில் அதிக நாட்டம் இருக்கும்.

உடல் அமைப்பை பார்த்தால் நடத்தரமான உயரம் இருப்பார்கள். முடி அதிகமாக இருக்காது. பல் வரிசையாக அமையும். உதடுகள் பெரியதாக இருக்கும்.இப்படி இருந்தால் அது தான் உங்களுக்கு அமையும் வரன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

ரிஷபம் அமையும் வரன்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவில் நாம் பார்த்துவருவது ஒவ்வொருவருக்கும் வரும் வரன் எப்படி இருப்பார்கள் என்று பார்த்து வருகிறோம் அந்த வரிசையில் இப்பதிவில் ரிஷப லக்கினத்திற்க்கு என்ன மாதிரி வரன் அமையும் என்று பார்க்கலாம்.

ரிஷப லக்கினத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய் நல்ல வாட்டசாட்டாமான ஆளாக இருப்பார் போலீஸ் மிலிட்டரி போல் இருப்பார்கள். இப்பொழுது போலீஸ்காரர்கள் எல்லாம் வாட்டசாட்டாமான ஆள்களாக இருப்பதில்லை சுமாராக தான் இருக்கிறார்கள். அது ஏன் என்று தனிபதிவில் ஒரு நாள் பார்க்கலாம் இப்பொழுது மேட்டருக்கு வருவோம்.

இவர்கள் இருக்கும் தெருவில் இரும்பு அடிக்கும் லேத் பட்டரை இருக்கும் அல்லது காவல் நிலையம் இருக்கும் இப்படி தான் ஒரு பெண்ணுக்கு சோதிடம் பார்க்கும் போது சொன்னேன் அப்படி நடக்கவில்லை ஆனால் வேலூரில் வரன் அமைந்தது ஒன்றுமில்லை வேலூரில் அதிகம் வெயில் இருக்கும் செவ்வாய் நெருப்புக்கு காரணகர்தாவாக இருப்பர் ஆயிற்றே அதனால் வேலூரில் வரன் அமைந்தது. அதற்கு என்று ரிஷப லக்கினத்தில் இருப்பவர்கள் அங்கு போய் தேடிக்கொண்டு இருக்காதீர்கள்.ஒரு அனுபத்தை சொல்லுவோம் என்று சொன்னேன்.

உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். உடல் முறுக்கேறி இருக்கும். எதாவது வம்பு செய்தால் போட்டு தாக்கிவிடுவார். இவர்களை திருப்திபடுத்துவது என்பது கொஞ்சம் கடினம். சோம்பல் இல்லாமல் உழைப்பவர்கள் இவர் தான் இருப்பார்.

காமத்திலும் அதிக ஈடுபாடு இருக்கும். செவ்வாய் அதிபதியாகவும் சுக்கிரன் அதிபதியாகவும் கொண்டவர்கள் காமத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். இருவரையும் தான் கடவுள் ஒன்றாக இணைப்பான்.  மேஷத்திற்க்கு ஏழாம் வீடு துலாம் துலாத்திற்க்கு ஏழாவது வீடு மேஷம். ரிஷபத்திற்க்கு ஏழாவது வீடு விருச்சிகம், விருச்சிகத்திற்க்கு ஏழாவது வீடு ரிஷபம் எப்படி சேர்த்து இருக்கிறான் பார்த்தீர்களா.

நெருப்புக் காயங்கள், விபத்துக்கள் ஆகியவைகளால் உடலில் பாதிப்பும் ஏற்பட்டு இருக்கும் மேலும் கட்டிடம் கட்டுதல் தொழிற்சாலையில் உயர்பதவில் இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Thursday, August 23, 2012

மேஷம் அமையும் வரன்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவை பார்த்து வந்தோம் இப்பதிவில் மேஷ லக்கினகாரர்களுக்கு அமையும் வரன் எப்படி அமையும் என்று ஏழாம் வீட்டு தசா மூலம் பார்க்கலாம். 

ஒருவருக்கு ஏழாம் வீட்டு அதிபதியின் நிலை வைத்து தான் பெரும்பாலும் வரன் அமையும் வேறு வீடுகளை வைத்தும் வரும் இருந்தாலும் ஏழாம் அதிபதி முதல் நிலை பெறுகிறார்.

மேஷ ராசிக்கு ஏழாம் வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் மூலம் வரும் வரன் நல்ல அழகாக இருப்பார். சுக்கிரன் பூஞ்சோலைகளுக்கு காரகம் வகிப்பவர் அதனால் பூஞ்சோலைகள் இருக்கும் இடத்தில் இருக்கலாம் என்று சொல்லலாம்.

இன்று பூஞ்சோலைகள் எங்கு இருக்கிறது ஒரு சில இடத்தை தவிர அனைத்து இடத்தையும் மனிதன் அழித்துக்கொண்டு வருகிறான் எல்லாம் ரெடிமேட் பூ தான் வைத்துள்ளார்கள். அதனால் அடுக்குமாடி குடியிருப்பில் வருபவர் இருப்பார் என்று சொல்லலாம். பூ கடை தெருவில் இருந்து வருவார். 

வாகன யோகம் இருக்கும். அவர் டிராவல்ஸ் நடத்தலாம் அல்லது வீட்டில் பல நவீன கார் இருக்கும். அவர் இருக்கும் ஏரியாவில் மால்ஸ் கூட இருக்கலாம் .

இன்பம் பணம் சுகமான அனுபவங்கள் இதை தான் இவர்கள் அதிகமாக விரும்புவார்கள். இயல் இசை நாடகம் இவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும்.சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்.

இவர்கள் திருமணத்திற்க்கு பிறகு கணவன் மனைவியை வைத்துக்கொள்வார்கள் அப்படி திருப்தி ஏற்படவில்லை என்றால் அடுத்தவரை நோக்கி போகவும் தயங்கமாட்டார்கள்.


என்ன மேஷ ராசியை லக்கினமாக கொண்டவர்களே இவர்கள் தான் உங்கள் வாழ்க்கை துணைவர் இந்த மாதிரி இருந்தால் அது தான் உங்களுக்கு வரனாக அமைவார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Wednesday, August 22, 2012

மந்திர அனுபவங்கள்


வணக்கம் நண்பர்களே நமது பதிவில் மந்திர அனுபவங்களை பற்றி சொன்னதும் போதும் அனைத்து நண்பர்களும் எனக்கு ஒரு மந்திரத்தை கற்றுக்கொடுங்கள் என்று தான் கேட்கிறார்கள். தொடர்ந்து எனக்கு வரும் கால்கள் அனைத்தும் அதைப்பற்றி தான் கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த பதிவு அடுத்த பதிவில் ஏழாம் வீட்டு தசாவைப் பற்றி எழுதுகிறேன். அந்த நண்பர்களுக்காக இந்த பதிவு 

எனக்கு மந்திர தந்திரங்களில் எனக்கு சிறுவயதில் இருந்தே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எனது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நல்ல ஆன்மிகவாதிகள் தான் ஆனால் எனக்கு என்னமோ ஆன்மிகத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நீங்கள் கேட்கலாம் சிறுவயதில் ஆன்மிக ஈடுபாடு எதற்கு உண்மையில் சிறுவயதில் ஆன்மிகத்தை உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுத்துவிட்டால் அவர்களுக்கு எந்த காலத்திலும் அவை மறக்கமாட்டார்கள். நான் வளர்ந்த சூழ்நிலை ஆன்மிகம் சம்பந்தப்பட்டது. எனது குடும்பத்தில் இரண்டு பெரியப்பாவும் நல்ல ஆன்மிகவாதிகள் + மந்திரங்கள் பயன்படுத்துவதில் வல்லவர்கள். அவர்கள் காலத்தில் ஒரு பைசா கூடு கட்டணம் வாங்காமல் ஏழைகளை காப்பாற்றியவர்கள்.

எனது குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி இதை பற்றி நான் சொல்லவே தேவையில்லை உங்களுக்கே தெரியும். எனது பெரியப்பாவின் பூஜைக்கு தேவையான சாமான்களை நான் தான் எடுத்துக்கொடுப்பேன். ஆனால் அந்த பூஜையில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது.அவர்களிடம் நான் எதையும் கற்கவில்லை. அவர்கள் இருவரும் இறந்த பிறகு அதை விட்டுவிட்டார்கள் எனது குடும்பத்தார்கள். யாரும் அந்த வேலையை செய்யவில்லை.

பல காலங்கள் ஒடியபிறகு எனது வாழ்க்கையில் சந்தித்த பல கசப்பான அனுபவங்களுக்கு பிறகு நான் ஒரு முடிவு எடுத்தேன். எத்தனை நாள் தான் தன் கண்ணீரை மட்டும் துடைத்துக்கொண்டு இருப்பது இதை போல அடுத்தவரின் வாழ்க்கையிலும் கஷ்டங்களை சந்தித்து இருப்பார்கள் அவர்களின் கண்ணீரை துடைக்க வழி என்ன என்று பார்த்தேன் சோதிடம் என்னுள் வந்தது மந்திரமும் என்னுள் வந்தது.

சோதிடம் என்பது தனி வழி அதை அப்புறம் பார்க்கலாம் மந்திர வழி என்ன என்று பார்ப்போம். மந்திரங்களை கற்க வேண்டும் என்று ஆவல் வந்த பிறகு முதலில் நான் செய்த வேலை எங்கு மந்திரங்கள் இருக்கும் யாரிடம் கற்பது என்று பல குழப்பங்கள் இருந்தது. பல புத்தங்களை தேடி அழைந்தேன். பல மந்திரங்களைப் பற்றி குறிப்பு எடுத்தேன் ஆனால் அதனை பயன்படுத்த எனக்கு வழி தெரியவில்லை. 

நான் எடுத்த குறிப்புகளை பார்த்தாலே பேப்பர் கடை வைக்கலாம். அத்தனையும் என்னிடம் பாதுகாப்பாக இன்று வரை வைத்திருக்கிறேன். அதில் உள்ள விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு தான்.மந்திரங்களை படிப்பேன் அதில் இருந்து என்ன நடக்கிறது என்று தெரியாது. 

இந்த காலகட்டத்தில் ஒரு முடிவு செய்து யாராவது இதில் பெரிய ஆள்களாக இருந்தால் அவர்களிடம் கற்கலாமே என்று நினைத்து அவர்களை தேடி அழைந்தேன். இப்படி அழையும் போது யாரும் எனக்கு கிடைக்கவில்லை. 

அப்பொழுது எனது நண்பர் ஒருவரை இராமேஸ்வரம் செல்ல சொல்லிருந்தேன் அவருக்கு நான் பல ஆன்மிக விசயங்களை சொல்லி இருந்தேன். அவர் ராமேஸ்வரம் கடற்கரையில் இரவில் தங்கியுள்ளார். அவரிடம் ஒரு சாமியார் வந்து பேசி இருக்கிறார். அந்த சாமியார் உன்னை இங்கே வரசொன்னவனை பார்க்க வேண்டும் அவரை நான் பார்க்கலாமா என்று அவர் கேட்டு இருக்கிறார். உடனே எனது நண்பர் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு நீங்கள் தங்கி இருக்கும் இடத்தை சொல்லுங்கள் அவரும் நானும் வந்து பார்க்கிறோம் என்று சொல்லிவிட்டு அவர் எங்கு இருப்பார் என்று கேட்டுவிட்டு ஊருக்கு வந்துவிட்டார் 

நான் இரண்டு மாதங்கள் ஆனபிறகு அவரை போய் சந்திக்கலாம் என்று முடிவு செய்து அவரை பார்ப்பதற்க்குள் எனக்கு 20 நாட்கள் தேவைப்பட்டது. அப்பொழுது செல் வசதி கிடையாது. இப்பொழுதும் அவர் செல்போன் வைத்திருப்பதில்லை. அவரின் சந்திப்பு ஒரு காட்டில் இருக்கும் ஒரு குகையில் தான் முதன் முதலில் நடந்தது. முதலில் சந்தித்தவுடனே அவர் சிவலிங்கத்திற்கு பூஜைசெய்ய சொன்னார் நான் செய்தேன். பிறகு பேசி முடித்த பிறகு ஒரு வளர்பிறையில் என்னை வந்து பார் என்று சொன்னார் அவரை நான் பார்க்க சென்றேன் அப்பொழுது ஒரு மந்திர உபதேசத்தை கொடுத்து அதை செய்யும் வழி முறையும் சொன்னார். நான் செய்தேன் 17 நாட்களில் அந்த தரிசனம் கிடைத்தது.

அவர் முதலில் சொன்னது மூன்று நாட்களில் நல்ல பலன் இருக்கும் என்று சொன்னார் மூன்று நாட்களில் இருந்து அந்த பலன் கிடைத்தது. அதை பற்றி நான் சொல்லகூடாது. அது அனுபவத்தில் தெரிவது ஒன்று.

நான் தேடிய அனைத்து மந்திரங்களுக்கும் பொருள் கிடைத்தது. மந்திரங்களுக்கு உயிர் பெற ஆரம்பித்தது.குறைந்தது பத்து வருட காலங்கள் மந்திரவித்தையை கற்றேன். அதன் பிறகு பல சாதுகள்,அகோரிகள்,நாகாஸ் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது எனது பூர்வ புண்ணியம். தொடர்ந்து கிடைத்துக்கொண்டு வருகிறது. என்னை பொருத்தவரை எது கற்க வேண்டும் என்றாலும் என்னை நான் அதிகம் காட்டிக்கொள்ளாமல் பிறரிடம் இருந்து கற்பேன். அது எனது இயல்பு .

பொதுவாக மந்திரங்களை கற்றுதருபவர்கள் பணம் வாங்கமாட்டார்கள். அவர்களுக்கு சேவை செய்து தான் நாம் கற்க வேண்டும். இன்று குரு சிஷ்யர்கள் உறவு சரியாக இருப்பதில்லை. அனைத்தும் தானே கற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அது தவறு இல்லை குரு மூலம் கற்கும் போது நல்ல முன்னேற்றம் அடையலாம்.

நான் நினைப்பது இந்த அனைத்து விசயங்களும் அடுத்தவர்களுக்கு கற்றுதர வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் கற்பதற்க்கு உள்ள பக்குவத்துடன் யாரும் வருவது இல்லை. உடனே அனைத்தும் கற்க வேண்டும் என்று அவசர கதியில் இருக்கிறார்கள்.

எந்த குருவிடம் போனாலும் அவர்கள் உடனே சொல்லிதரமாட்டார்கள். அவர்கள் உங்களுக்கு பல பரிட்சை வைத்துவிட்டு தான் உங்களுக்கு சொல்லி தர சம்மதிப்பார்கள். அதில் நீங்கள் கண்டிப்பாக தோல்வியை சந்திப்பீர்கள். அதனால் தான் இந்த மந்திரங்கள் அனைத்தும் அவர்களின் சொந்தங்களில் மட்டும் இருக்கின்றது. அடுத்தவர்களுக்கு கிடைக்கவில்லை ஆனால் பணத்திற்க்கு என்று சில பேர் நடத்துகிறார்கள் அவர்களின் மந்திரங்கள் எந்தளவுக்கு இருக்கும் என்பது சந்தேகமே ஏன் என்றால் மந்திரங்களை கற்றவன் ஒரு போதும் பணத்தை எதிர்பார்க்க மாட்டான்.

இந்த பதிவு மூலம் வரும் நண்பர்களுக்கு அந்த விசயங்களை கற்று தரலாம் என்று நினைத்தால் அவர்கள் நான் வைக்கும் முதல் தேர்விலே தோல்வியை அடைகிறார்கள். பின்பு எப்படி கற்றுதருவது. என்னுடைய அதிக பட்ச தேர்வே நீங்கள் நல்லவராக இருந்தால் மட்டும் போதும் ஆனால் வருபவர்கள் அனைவரும் ஏதாவது நோக்கத்துடன் தான் தொடர்பு கொள்கிறார்கள். அவர்களுக்கு இது கிடைத்தால் கண்டிப்பாக தீங்கான விசயங்கள் தான் நடக்கும்.

நான் சாமியார் ஆன்மிகவாதி என்பது எல்லாம் கிடையாது நான் ஒரு சராசரி மனிதன் தான் நான் எதிர்பார்க்கும் விசயமும் சாதாரணமாகதான் உங்களிடம் எதிர்பார்ப்பேன். அதை நீங்கள் பூர்த்தி செய்தால் போதும் நீங்கள் மந்திர சாஸ்திரத்தில் வெற்றி பெறுவது உறுதி.நான் கண்டிப்பாக பணத்தை எதிர்பார்க்கமாட்டேன். நல்ல உள்ளத்தை மட்டும் தான் கூடுதலாக உங்களுக்கு பூர்வபுண்ணியமும் இருக்கவேண்டும் அப்பொழுது அது கிடைக்கும்.எனக்கு சிஷ்ய கூட்டம் தேவையில்லை நான் கற்ற விசயத்தை அடுத்தவருக்கு கற்று தர வேண்டும் அவ்வளவுதான். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Tuesday, August 21, 2012

திருமணம் உறவிலா அல்லது அந்நியத்திலா



வணக்கம் நண்பர்களே ஏழாம் அதிபதியின் தசாவை பற்றி பார்த்துவருகிறோம் அதில் சில அடிப்படை தகவல்களை சேர்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும். ஒருவருக்கு திருமணம் நடைபெறுவது உறவிலா அல்லது அன்னியத்திலா என்று இப்பதிவில் பார்க்க போகிறோம். முழு ஜாதகத்தையும் பார்த்தால் தான் அது தெரியவரும் ஏழாம் அதிபதியின் நிலை வைத்து சொல்லலாம். அதிக பட்சம் ஏழாம் அதிபதி தசாவில் தான் அவ்வாறு நடைபெறும் இல்லை என்றால் ஏழாம் அதிபதி சம்பந்தப்பட்டு தசா நடந்தால் நடைபெறும். 

ஏழாம் அதிபதி லக்கனத்தில் இருந்தால் தூரத்து உறவாக இருக்கும். அவரவர்களே துணையை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். 

ஏழாம் அதிபதி இரண்டாம் வீட்டில் இருப்பது அந்நியத்தில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி மூன்றாம் வீட்டில் இருப்பது உடன்பிறப்பின் உறவில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி நான்காம் வீட்டில் இருப்பது தாய்வழியில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருப்பது காதல் திருமணம் நடைபெறும். 

ஏழாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருப்பது தாய்வழி மாமன் உறவில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி ஏழாம் வீட்டில் இருப்பது தூரத்து உறவாக இருக்கும்.

ஏழாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருப்பது அந்நியத்தில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால் அந்நிய நாட்டில் வேலை செய்பவராக இருக்கலாம்.

ஏழாம் அதிபதி பத்தாவது வீட்டில் இருந்தால் அவரது தொழிலில் உள்ளவராக இருக்கலாம்.

ஏழாம் அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால் நண்பர்கள் குடும்பத்தில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி பனிரெண்டாம் வீட்டில் இருந்தால் அந்நியத்தில் திருமணம் நடைபெறும்.

உங்களுக்கு அமையும் துணைவர் யார் என்று நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

எந்த திசையில் இருந்து துணைவர் வருவார்


வணக்கம் நண்பர்களே திருமண தசாவில் இப்பதிவில் ஏழாம் வீட்டு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். உங்களுக்கு வரும் துணைவர் எந்த திசையில் இருந்து வருவார் என்பதை பார்க்கலாம். பொதுவாக ஏழாம் வீட்டு அதிபதியின் நிலையை வைத்து சொல்லுவார்கள். ஏழாம் வீட்டு தசா சில பேருக்கு நடக்காது ஆனால் கண்டிப்பாக ஏழாம் வீடு சம்பந்தப்பட்டு வேறு தசா நடந்தாலும் இப்பலனை பொதுவாக தரும் என்பது விதி.

உங்களின் வாழ்க்கை துணைவர் இருக்கும் திசையை அறிந்துக்கொள்வது ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி தானே தெரிந்துகொள்ளுங்கள்.

ஏழாம் அதிபதி சூரியனாக இருந்தால் கிழக்கு பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார்.

ஏழாம் அதிபதி சந்திரனாக இருந்தால் வடமேற்கு பகுதியில் உங்கள் வாழ்க்கை  துணைவர் வருவார்.

ஏழாம் அதிபதி செவ்வாயாக இருந்தால் தெற்குபகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார்.

ஏழாம் அதிபதி புதனாக இருந்தால் வடக்கு பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார். 

ஏழாம் அதிபதி குருவாக இருந்தால் வடகிழக்கு பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார்.

ஏழாம் அதிபதி சுக்கிரனாக இருந்தால் தென் கிழக்கு பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார்.

ஏழாம் அதிபதி சனியாக இருந்தால் மேற்கு பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார்.

இந்த திசையில் இருந்து உங்களுக்கு அதிகபட்சம் வரவாய்ப்பு இருக்கிறது அப்படி இல்லை என்றால் உங்கள் காதலன் அல்லது காதலியாவது அந்த திசையில் இருந்து வந்து இருப்பார்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

சுதந்திரம்


வணக்கம் நண்பர்களே திருமண தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். திருமணத்தில் பலபேர் என்னிடம் கேட்கும் கேள்வி தான் சார் நான் திருமண செய்துக்கொண்டால் என்னை அவர் சுதந்திரமாக இருக்கவிடுவாரா என்று கேட்பார்கள். திருமணம் என்பதே சுதந்திரத்திற்க்கு கட்டுபோடும் ஒரு விசயமாக தான் இருக்கின்றது. அப்புறம் எப்படி சுதந்திரமாக இருப்பது. வரும் கணவனை பொருத்து அது அமையும்.

இயற்கையில் ஒரு விதி உள்ளது நீங்கள் எதனை ஆசைபடுகிறீர்களோ அதற்கு கடவுள் முதலில் ஆப்பு அடிப்பார். உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு துணையாக வருபவர் எப்படி என்று தெரியும். அதனை எல்லாம் நாம் பார்க்கலாம்.

நீங்கள் திருமணம் செய்யபோகிறாவராக இருந்தால் முதலில் நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சொந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை அவனுக்கு அல்லது அவளுக்கு நீங்கள் சொந்த வாழ்க்கையை வாழ உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.  உங்கள் துணையின் சுதந்திர வாழ்வில் நீங்கள் தலையிடாததால் அவர்களுக்கு உண்மையிலேயே உதவுகின்றீர்கள். 

நீங்கள் மனதில் கேட்கும் கேள்வி எனக்கு புரிகின்றது. என்னடா உன் இஷ்டத்திற்க்கு சுதந்திரம் தரனும் என்று சொல்கிறாய் அவள் பாட்டுக்கு போய்விட்டால் என்னடா பண்றது என்று கேட்க தோன்றும். என்ன செய்வது நாடு அப்படி போய்கிட்டு இருக்கிறது. நாமும் மாறிதானே ஆகவேண்டும். கடிவாளம் போடகூடாது. அந்த வழியில் போய் அவர்களை உங்கள் வழிக்கு கொண்டு வரவேண்டும். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்.

நான் உங்களை பயமுறுத்தவில்லை இந்த காலத்தில் எந்த கணவன் மனைவின் பேச்சை கேட்பதில்லை அனைத்து பேரும் மனைவின் பேச்சை கேட்டு தான் நடப்பவர்களாக இருக்கிறார்கள் அப்புறம் எதற்கு பயம். 

திருமணம் முடித்தவர்கள் நினைக்கிறார்கள் வந்து பாரு தெரியும் நாங்கள் படும்பாட்டை என்ன செய்வது ஒவ்வொரு மனிதனையும் தனித்தன்மையுடன் தான் கடவுள் படைக்கிறார். மனிதன் சுதந்திரத்தை விரும்புவது இயற்கையின் செயல்பாடு. 

உங்கள் லக்கினம் என்பது முதல் வீடு அதன் அதிபதி ஒருவராக இருப்பார் உங்களுக்கு வரும் துணைவர் ஏழாம் வீட்டில் இருந்து வருபவர் அதன் அதிபதி வேறு ஒரு ஆளாக இருப்பார் கண்டிப்பாக ஒத்துபோகாது. ஒருவரை ஒருவர் நேராக பார்ப்பதால் மோதல் வருபவது சோதிடத்தில் இயற்கை.

இவர்களை ஒத்துவாழ கடவுள் தான் துணைபுரிகிறார் அதனை நம்பினால் தாராளமாக திருமணத்தை செய்துக்கொள்ளலாம்.என்ன நண்பர்களே அனைவரும் பதிவை படிக்கிறீர்களா படியுங்கள் அப்பொழுது தான் உங்கள் வாழ்க்கை துணையின் உண்மை நிலை அறிந்து அவர்களுடன் சந்தோஷமாக வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

திருமண தசா




வணக்கம் நண்பர்களே நாம் ஆறாம் வீட்டு தசாவைப்பற்றி பார்த்தபோது பல நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள் நீங்கள் ஆறாம் வீட்டு தசாவைப் பற்றி நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் ஒவ்வொரு கிரகத்தின் தசா நாட்களை சொல்லி அது எவ்வாறு பலனை தரும் என்று கேட்டார்கள். முதலில் அனைத்து தசாவையும் அது எவ்வாறு பலன் தருவதையும் தெரிந்துக்கொள்ளுங்கள் பிறகு ஒவ்வொரு கிரகத்தையும் எடுத்துக்கொண்டு அதன் தசா பலனை பார்க்கலாம் என்றும் சொல்லிருந்தேன். 

நான் ஆறாம் வீட்டு தசாவை எழுதும்போதே அனைத்தையும் எழுதிவிடவேண்டும் குறைந்தது 500 பதிவு நாளும் போடவேண்டும் நினைத்து இருந்தேன் ஆனால் பதிவுக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் பிறகு எழுதலாம் என்று முடிவு எடுத்து முடித்துக்கொண்டேன். நீங்கள் ஆச்சரியபடலாம் என்னது இவ்வளவு பதிவுகளா என்று கண்டிப்பாக அவ்வளவு பதிவுகள் எழுதினால் கூட அனைத்து சோதிட விசயங்களும் சொல்லிவிடமுடியாது . பிற்காலத்தில் நாம் பார்க்கலாம் கடவுளும் அருள் புரிவார் என்ற நம்பிக்கையில்.

நாம் அடுத்ததாக பார்க்க போவது ஏழாம் வீட்டு தசாவை தான் பல காலங்களுக்கு முன்பு மனிதன் ஜாதகத்தை கையில் எடுத்ததே அவன் திருமணத்திற்க்கு தான் இருக்கும் இன்றும் பல பேர் வாழ்க்கையில் அப்படி தான் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் பல பேர் இன்று அனைத்திற்க்கும் ஜாதகத்தை பார்த்து தான் முடிவு செய்கிறார்கள்.

அதனால் நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் பல பேர் திருமண ஆகாதவர்களாக இருப்பார்கள். சிலர் திருமணம் முடித்தவர்களாக இருப்பார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த தசா மூலம் பல நன்மைகள் பல நல்ல கருத்துக்களை தரலாம் என்று நினைத்து இந்த தசாவை நடத்தலாம் என்று முடிவு எடுத்துதேன். திருமணம் ஆனாவர்களும் இதனை படிக்கலாம் ஏன் என்றால் திருமணத்திற்க்கு மட்டும் இல்லை ஏழாவது வீடு பல தகவல்கள் உள்ளடங்கியது தான் ஏழாம் வீடு.அந்த விசயங்கள் உங்களுக்கு பயன்படும். 

முதலில் திருமணத்தைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம். ஏன் கொஞ்சம் பார்க்கலாம் நிறையவே பார்க்கலாமே என்று நீங்கள் கேட்கலாம் அந்த அளவு பார்ப்பதற்க்கு எனக்கு வயது கிடையாது. நானும் திருமணம் ஆகாதவன் தான். 

சமுதாயத்தில் ஒரு நிலைக்கு பிறகு மனிதனால் தனியாக வாழமுடியவில்லை அதற்காக அவன் இன்னொரு துணையை தேர்ந்துடுக்கிறான் அவள் அல்லது அவனுடன் வாழ்க்கையின் பின் பகுதியை கழிக்கிறான் என்று சொல்லலாம் அல்லது அவனின் இரத்தம் இந்த பூமியில் தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்து திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறான். 

சில பேர் சொல்லுவார்கள் திருமணம் என்பது கடமை அதனால் அதனை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று சொல்லி திருமணத்தை செய்துகொள்வார்கள். மனிதனின் நாகரிகத்து வளர்ச்சியில் அவனின் கடைசி கண்டுபிடிப்பாக கூட திருமணம் இருக்கலாம். இதைப்பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

திருமணத்தைப்பற்றி பல பேர் அச்சத்துடன் தான் பார்க்கிறார்கள். திருமணம் முடிந்தால் சுதந்திரம் போய்விடுமோ என்றும் நினைக்கிறார்கள்.  அதற்கு அவர்கள் திருமணத்தை தள்ளி போட்டுவிட்டு் ஆன்மீகத்தில் நுழைந்துவிடுகிறார்கள்.

இப்படியே ஆன்மிகத்தில் போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டு ஆன்மிகவாழ்வு வாழலாம் என்று நினைத்துக்கொண்டு சன்யாசியாக வாழ்க்கையை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். சன்யாசி ஆனாவுடன் சும்மா இருக்கிறது இல்லை நீங்கள் வாழும் வாழ்க்கை போலியானது. இல்லறத்தில் ஈடுபட வேண்டாம் வந்துவிடுங்கள் நீங்கள் கடவுளுடன் வாழுங்கள் என்று சொல்லி நல்ல வாழ்ந்து கொண்டு இருப்பவனை கெடுக்கிறது. 

நான் ஒன்று கேட்கிறேன் கடவுள் மனிதனுக்கு மட்டும் தான் சொந்த பந்தங்கள் அவர்களுடன் நன்றாக பழகி வாழலாம் என்று ஒரு அறிவை வைத்து இருக்கிறான். ஆடு மாடுகளுக்கு இப்படி இல்லை. இந்த சாமியார்கள் என்னடா என்றால் ஐந்தறிவு ஜீவன்கள் மாதிரி தனியாக ஊர் சுத்திக்கிட்டு அவனும் கெட்டு அடுத்தவனையும் கெடுக்கிறது. பல பேர் இதனை விரும்புவதால் நான் சொன்னேன்.

நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவை பற்றி பார்க்க போகிறோம் அதில் நான் கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் நான் படித்த மற்றும் என்னுடைய அனுபவங்களை தரபோகிறேன் இந்த ஏழாம் வீடு உங்களின் வாழ்க்கை துணையை அதிகம் பிரதிபலிக்கின்ற ஒரு வீடு அதனால் நீங்கள் உங்கள் ஜாதகத்தை வைத்துக்கொண்டு எனக்கு வரும் அவள் அல்லது அவன் இப்படிதான் இருப்பார் என்று முடிவு எடுத்து பிரச்சினையை வளர்த்து கொள்ளாதீர்கள் திருமணம் முடிந்தவர்கள் உங்களின் கணவன் அல்லது மனைவியை சந்தேகம் கொள்ளாதீர்கள். இந்த வீட்டை பொருத்தவரை நீங்கள் ஒரு பார்வையாளராக இருங்கள். 

எப்பொழுது ஒருவன் தன் மனைவி அல்லது கணவனின் திருமணத்திற்க்கு முன் வாழ்க்கையை பார்க்கிறார்களோ அவர்கள் நன்றாக வாழ்க்கையை நடத்தியது இல்லை. திருமணத்திற்க்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தாலும் அதனை விட்டுவிட்டு திருமணத்திற்க்கு பின்பு மகிழ்ச்சியோடு குடும்பத்தை நடத்துங்கள்.

திருமணத்திற்க்கு முன்பு ஒருவரின் வாழ்க்கையை பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக நிம்மதி போய்விடும். அதனால் நீங்கள் இந்த பாடங்களை படித்துவிட்டு இவள் இப்படி தானா என்று நினைத்துவிடாதீர்கள். அனைத்து மனிதர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்தும் கடவுள் கொடுத்தது தான் அவர்களின் மேல் எந்த தவறும் இல்லை. 

உங்கள் மனைவியாக வந்தவர் ஏற்கனவே ஒருவரை காதலித்து இருக்கலாம் அது உங்களுக்கு தெரியவரலாம். அதனை நீங்கள் ஒருபோதும் காட்டிக்கொள்ளாதீர்கள். கிடைத்த சின்ன வாழ்க்கையை மகிழ்வுடன் நடத்த வழி பாருங்கள். எந்த செயலும் கடவுளின் விதி படிதான் நடக்கும் என்று உங்களுக்கு தெரியும். ஏன் உங்களுக்கு தெரியும் என்று நான் சொல்லுகிறேன் என்றால் நீங்கள் அனைவரும் சோதிடராக வேண்டும் என்று இந்த பதிவுக்கு வருபவர்கள். சோதிடத்தின் அடிப்படை விதியே கடவுளின் விதிதான் என்பதை ஒரு நாளும் மறக்ககூடாது.

கடவுள் அவன் அல்லது அவளின் ஜாதகத்தில் இப்படி எழுதி உள்ளான் அதனை தவிர்க்க கடவுள் உங்களை சோதிடராக மாற்றிவிட்டார். அதற்கு வழி என்ன என்று பார்த்து அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள். உங்களின் துணையுடன் நன்றாக வாழ கடவுள் அனைத்து வழியும் ஏற்படுத்திக்கொடுப்பார். அனைவரின் நலம் கருதி தான் நான் பதிவுகளை தருவேன். சோதிடத்தின் மிகபெரிய விஷயம் என்ன என்றால் அது எப்படியாவது தன்னை வெளிபடுத்திக்கொள்ளும். அதனால் உங்களுக்கு இந்த அறிவுரையை தருகிறேன்.

மனதின் மிகபெரிய தந்திரம் என்ன என்றால் இதை பார்க்ககூடாது என்று நீங்கள் நினைத்தால் உங்களின் மனது அதனை தான் பார்க்க துண்டும். நீங்கள் நல்லவராக இருந்தால் உங்களின் வாழ்க்கை துணை மீது உங்களின் பார்வை அன்பு கலந்து தான் இருக்கும். உங்கள் துணைவரின் ஜாதகத்தை எடுத்து பார்த்துக்கொண்டு நீ இப்படி தானா என்று அவரிடம் சண்டை போட ஆரம்பித்துவிடாதீர்கள்.

அனைத்து விதியும் பொதுவானவை.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Monday, August 20, 2012

நோக்கம்



வணக்கம் நண்பர்களே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுபவர்கள் அனைவரும் என்னிடம் சொல்லுவது என்ன என்றால் நான் ஆன்மிகத்தில் ஈடுபடவேண்டும். சித்தராக வேண்டும். நான் அவ்வாறு போவதற்க்கு வழியை சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். அவர்களின் ஜாதகத்தை கொடுத்து எனக்கு குரு எப்படி அமைவார்கள் என்று கேட்டாலும் சொல்லலாம்.

பல நண்பர்கள் என்னிடம் பல தளங்களின் முகவரியை கொடுத்து அந்த தளத்தில் இப்படி சொல்லுகிறார்கள் அவர்கள் சித்தரை தரிசிக்க ஏற்பட செய்கிறார்கள் என்று சொன்னார்கள். அந்த முகவரிக்கு சென்றால் அவர்கள் சொல்லும் பதிவுகளை பார்த்தால் நல்ல வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு மாந்தீரிகவாதி சொல்லுவதை தான் அவர்கள் சொல்லுகிறார்கள். அந்த மையை எடுப்பது எப்படி பேய் விரட்டுவது எப்படி என்று தான் சொல்லுகிறார்கள். ஒளி உடல் அப்படி இப்படி என்று பயமுறுத்திக்கிறார்கள். பல பேர் இந்த போட்டாவில் பாருங்கள் ஒளி தெரிகிறது. அது மனித உருவத்தில் வருகிறது பாருங்கள் என்று வேற சொல்லுகிறார்கள்.

நீங்கள் போய் ஏமாந்துவிடாதீர்கள். பலமுறை சோதனைக்கு பிறகு ஏற்றக்கொள்ளுங்கள். பல பேர் கேரளாவில் போய் கொஞ்ச காலம் மாந்தீரிகம் கற்றுக்கொள்வது அதனை வைத்து இங்கு ஏதாவது சொல்லி மக்களை குழப்புவது இது தான் வேலையாக இருக்கிறார்கள்.

நான் கூட சொல்லி இருந்தேன் சாமியார்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆனால் அடுத்த பதிவிலேயே எச்சரிக்கையும் கொடுத்துவிட்டேன். நீங்கள் சோதிடராக இருக்கும் பட்சத்தில் இப்படி தொடர்பு வைத்திருந்தால் அவர்கள் தரும் சில கருத்துக்கள் உங்களின் சோதிட அறிவுக்கு மிக உகந்ததாக இருக்கும் அதனை வைத்து ஒரு சில பிரச்சினைகளை தீர்க்கமுடியும். என்று சொல்லி இருந்தேன். மறுபடியும் சொல்லுகிறேன் அவர்களிடம் போய் ஏமாந்துவிடாதீர்கள். பல தடவை சோதனை செய்து பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஆண்கள் மட்டும் தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள். பெண்களாக இருந்தால் ஏதாவது பெண் துறவியாக பார்த்து தொடர்பு வைத்துக்கொள்வது நன்மை பயக்கும்.

இந்த மாதிரி தளங்களை படிப்பவர்கள் இளைஞர்கள் அதிகம்பேர். அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளி இடங்களில் தங்கி அவர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் நகரத்தில் இருக்கிறது. அந்த மனஅழுத்தத்தை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள். 

கடந்த காலத்தில் கடவுளை காட்டுகிறேன் என்று சொல்லி ஏமாற்றினார்கள். இன்று சித்தரை காட்டுகிறேன் என்று ஏமாற்றுகிறார்கள்.

ஒரு வியாபாரியின் நோக்கம் பணம். ஒரு சாமியாரின் நோக்கம் அவனுக்கு பல சீடர்கள். நீங்கள் போய் விழுந்துவிடாதீர்கள். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது உங்களின் பெற்றோரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு எடுங்கள். அது தான் நன்மை பயக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Saturday, August 18, 2012

சோதிட அனுபவம் 2



வணக்கம் நண்பர்களே கடந்த சோதிட அனுபவம் பதிவில் ஐந்தாம் வீட்டை பற்றி பார்த்தோம். ஐந்தாம் வீட்டில் நான்கு கிரகம் இருக்கிறது. குரு சொந்த வீட்டில் இருப்பதால் குழந்தை பாக்கியம் இருக்கும். 

ஐந்தாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இருப்பதால் ஐந்தாம் வீடு புத்தி ஸ்தானத்தை காட்டும் இடம் என்பதால் இவருக்கு புத்தி கம்மிதான். எது கேட்டாலும் திணறுவார். நல்ல அறிவை தரக்கூடிய கிரகம் புதன். அவர் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். புதன் உடன் கெட்ட கிரகம் சேர்ந்ததால் அறிவு மழுங்கிவிட்டது.புதன் கெட்டதால் தோல் வியாதி இவருக்கு இருக்கிறது. 

ஐந்தாம் இடம்  கடக ராசியாக வருகிறது. அதன் அதிபதி சந்திரன். இவருக்கு பெண் குழந்தைகள் இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

ஆறாம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். ஆறாம் வீடடிற்க்கு குருவின் பார்வை கிடைக்கிறது. ஒழுங்காக சாப்பிடமாட்டார். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடமாட்டார்.

ஆறாவது வீடாக சிம்ம ராசி வருகிறது அதன் அதிபதி சூரியன் தந்தை வழி உறவினர்கள் இவருக்கு எதிரி. தந்தை வழியில் உள்ளவர்கள் இவரிடம் சண்டை போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.  ஆறாம் வீட்டு அதிபதியுடன் செவ்வாய் கிரகம் சேர்ந்து இருக்கிறது. இவர் சண்டையில் ரத்தம் காயம் எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது.

ஏழாவது வீடாக அதாவது களத்திர ஸ்தானம் அந்த வீடாக கன்னி ராசி வருகிறது அதன் அதிபதி புதன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். புதன் அதிபதியாக இருப்பதால் வரும் மனைவி ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக அமைவார். இவருக்கு நிச்சயதார்த்தம் இப்பொழுது தான் நடந்தது. அந்த பெண்னும் ஒரு அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிகிறார். புதன் சூரியனுடன் சேர்ந்ததால் அரசு வேலையில் அந்த பெண் இருக்கிறார்.

ஏழாம் வீடு என்பது நம்மிடம் தொடர்பு வைத்திருப்பவரையும் காட்டும் இடம் என்பதால் இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் அனைவரும் அலுவலகத்தில் தான் பணிபுரிகிறார் அல்லது வணிகம் நட்த்தி கொண்டு இருப்பவராக இருக்கிறார்கள்.

தொடரும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.