Followers

Wednesday, August 22, 2012

மந்திர அனுபவங்கள்


வணக்கம் நண்பர்களே நமது பதிவில் மந்திர அனுபவங்களை பற்றி சொன்னதும் போதும் அனைத்து நண்பர்களும் எனக்கு ஒரு மந்திரத்தை கற்றுக்கொடுங்கள் என்று தான் கேட்கிறார்கள். தொடர்ந்து எனக்கு வரும் கால்கள் அனைத்தும் அதைப்பற்றி தான் கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த பதிவு அடுத்த பதிவில் ஏழாம் வீட்டு தசாவைப் பற்றி எழுதுகிறேன். அந்த நண்பர்களுக்காக இந்த பதிவு 

எனக்கு மந்திர தந்திரங்களில் எனக்கு சிறுவயதில் இருந்தே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எனது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நல்ல ஆன்மிகவாதிகள் தான் ஆனால் எனக்கு என்னமோ ஆன்மிகத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நீங்கள் கேட்கலாம் சிறுவயதில் ஆன்மிக ஈடுபாடு எதற்கு உண்மையில் சிறுவயதில் ஆன்மிகத்தை உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுத்துவிட்டால் அவர்களுக்கு எந்த காலத்திலும் அவை மறக்கமாட்டார்கள். நான் வளர்ந்த சூழ்நிலை ஆன்மிகம் சம்பந்தப்பட்டது. எனது குடும்பத்தில் இரண்டு பெரியப்பாவும் நல்ல ஆன்மிகவாதிகள் + மந்திரங்கள் பயன்படுத்துவதில் வல்லவர்கள். அவர்கள் காலத்தில் ஒரு பைசா கூடு கட்டணம் வாங்காமல் ஏழைகளை காப்பாற்றியவர்கள்.

எனது குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி இதை பற்றி நான் சொல்லவே தேவையில்லை உங்களுக்கே தெரியும். எனது பெரியப்பாவின் பூஜைக்கு தேவையான சாமான்களை நான் தான் எடுத்துக்கொடுப்பேன். ஆனால் அந்த பூஜையில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது.அவர்களிடம் நான் எதையும் கற்கவில்லை. அவர்கள் இருவரும் இறந்த பிறகு அதை விட்டுவிட்டார்கள் எனது குடும்பத்தார்கள். யாரும் அந்த வேலையை செய்யவில்லை.

பல காலங்கள் ஒடியபிறகு எனது வாழ்க்கையில் சந்தித்த பல கசப்பான அனுபவங்களுக்கு பிறகு நான் ஒரு முடிவு எடுத்தேன். எத்தனை நாள் தான் தன் கண்ணீரை மட்டும் துடைத்துக்கொண்டு இருப்பது இதை போல அடுத்தவரின் வாழ்க்கையிலும் கஷ்டங்களை சந்தித்து இருப்பார்கள் அவர்களின் கண்ணீரை துடைக்க வழி என்ன என்று பார்த்தேன் சோதிடம் என்னுள் வந்தது மந்திரமும் என்னுள் வந்தது.

சோதிடம் என்பது தனி வழி அதை அப்புறம் பார்க்கலாம் மந்திர வழி என்ன என்று பார்ப்போம். மந்திரங்களை கற்க வேண்டும் என்று ஆவல் வந்த பிறகு முதலில் நான் செய்த வேலை எங்கு மந்திரங்கள் இருக்கும் யாரிடம் கற்பது என்று பல குழப்பங்கள் இருந்தது. பல புத்தங்களை தேடி அழைந்தேன். பல மந்திரங்களைப் பற்றி குறிப்பு எடுத்தேன் ஆனால் அதனை பயன்படுத்த எனக்கு வழி தெரியவில்லை. 

நான் எடுத்த குறிப்புகளை பார்த்தாலே பேப்பர் கடை வைக்கலாம். அத்தனையும் என்னிடம் பாதுகாப்பாக இன்று வரை வைத்திருக்கிறேன். அதில் உள்ள விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு தான்.மந்திரங்களை படிப்பேன் அதில் இருந்து என்ன நடக்கிறது என்று தெரியாது. 

இந்த காலகட்டத்தில் ஒரு முடிவு செய்து யாராவது இதில் பெரிய ஆள்களாக இருந்தால் அவர்களிடம் கற்கலாமே என்று நினைத்து அவர்களை தேடி அழைந்தேன். இப்படி அழையும் போது யாரும் எனக்கு கிடைக்கவில்லை. 

அப்பொழுது எனது நண்பர் ஒருவரை இராமேஸ்வரம் செல்ல சொல்லிருந்தேன் அவருக்கு நான் பல ஆன்மிக விசயங்களை சொல்லி இருந்தேன். அவர் ராமேஸ்வரம் கடற்கரையில் இரவில் தங்கியுள்ளார். அவரிடம் ஒரு சாமியார் வந்து பேசி இருக்கிறார். அந்த சாமியார் உன்னை இங்கே வரசொன்னவனை பார்க்க வேண்டும் அவரை நான் பார்க்கலாமா என்று அவர் கேட்டு இருக்கிறார். உடனே எனது நண்பர் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு நீங்கள் தங்கி இருக்கும் இடத்தை சொல்லுங்கள் அவரும் நானும் வந்து பார்க்கிறோம் என்று சொல்லிவிட்டு அவர் எங்கு இருப்பார் என்று கேட்டுவிட்டு ஊருக்கு வந்துவிட்டார் 

நான் இரண்டு மாதங்கள் ஆனபிறகு அவரை போய் சந்திக்கலாம் என்று முடிவு செய்து அவரை பார்ப்பதற்க்குள் எனக்கு 20 நாட்கள் தேவைப்பட்டது. அப்பொழுது செல் வசதி கிடையாது. இப்பொழுதும் அவர் செல்போன் வைத்திருப்பதில்லை. அவரின் சந்திப்பு ஒரு காட்டில் இருக்கும் ஒரு குகையில் தான் முதன் முதலில் நடந்தது. முதலில் சந்தித்தவுடனே அவர் சிவலிங்கத்திற்கு பூஜைசெய்ய சொன்னார் நான் செய்தேன். பிறகு பேசி முடித்த பிறகு ஒரு வளர்பிறையில் என்னை வந்து பார் என்று சொன்னார் அவரை நான் பார்க்க சென்றேன் அப்பொழுது ஒரு மந்திர உபதேசத்தை கொடுத்து அதை செய்யும் வழி முறையும் சொன்னார். நான் செய்தேன் 17 நாட்களில் அந்த தரிசனம் கிடைத்தது.

அவர் முதலில் சொன்னது மூன்று நாட்களில் நல்ல பலன் இருக்கும் என்று சொன்னார் மூன்று நாட்களில் இருந்து அந்த பலன் கிடைத்தது. அதை பற்றி நான் சொல்லகூடாது. அது அனுபவத்தில் தெரிவது ஒன்று.

நான் தேடிய அனைத்து மந்திரங்களுக்கும் பொருள் கிடைத்தது. மந்திரங்களுக்கு உயிர் பெற ஆரம்பித்தது.குறைந்தது பத்து வருட காலங்கள் மந்திரவித்தையை கற்றேன். அதன் பிறகு பல சாதுகள்,அகோரிகள்,நாகாஸ் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது எனது பூர்வ புண்ணியம். தொடர்ந்து கிடைத்துக்கொண்டு வருகிறது. என்னை பொருத்தவரை எது கற்க வேண்டும் என்றாலும் என்னை நான் அதிகம் காட்டிக்கொள்ளாமல் பிறரிடம் இருந்து கற்பேன். அது எனது இயல்பு .

பொதுவாக மந்திரங்களை கற்றுதருபவர்கள் பணம் வாங்கமாட்டார்கள். அவர்களுக்கு சேவை செய்து தான் நாம் கற்க வேண்டும். இன்று குரு சிஷ்யர்கள் உறவு சரியாக இருப்பதில்லை. அனைத்தும் தானே கற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அது தவறு இல்லை குரு மூலம் கற்கும் போது நல்ல முன்னேற்றம் அடையலாம்.

நான் நினைப்பது இந்த அனைத்து விசயங்களும் அடுத்தவர்களுக்கு கற்றுதர வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் கற்பதற்க்கு உள்ள பக்குவத்துடன் யாரும் வருவது இல்லை. உடனே அனைத்தும் கற்க வேண்டும் என்று அவசர கதியில் இருக்கிறார்கள்.

எந்த குருவிடம் போனாலும் அவர்கள் உடனே சொல்லிதரமாட்டார்கள். அவர்கள் உங்களுக்கு பல பரிட்சை வைத்துவிட்டு தான் உங்களுக்கு சொல்லி தர சம்மதிப்பார்கள். அதில் நீங்கள் கண்டிப்பாக தோல்வியை சந்திப்பீர்கள். அதனால் தான் இந்த மந்திரங்கள் அனைத்தும் அவர்களின் சொந்தங்களில் மட்டும் இருக்கின்றது. அடுத்தவர்களுக்கு கிடைக்கவில்லை ஆனால் பணத்திற்க்கு என்று சில பேர் நடத்துகிறார்கள் அவர்களின் மந்திரங்கள் எந்தளவுக்கு இருக்கும் என்பது சந்தேகமே ஏன் என்றால் மந்திரங்களை கற்றவன் ஒரு போதும் பணத்தை எதிர்பார்க்க மாட்டான்.

இந்த பதிவு மூலம் வரும் நண்பர்களுக்கு அந்த விசயங்களை கற்று தரலாம் என்று நினைத்தால் அவர்கள் நான் வைக்கும் முதல் தேர்விலே தோல்வியை அடைகிறார்கள். பின்பு எப்படி கற்றுதருவது. என்னுடைய அதிக பட்ச தேர்வே நீங்கள் நல்லவராக இருந்தால் மட்டும் போதும் ஆனால் வருபவர்கள் அனைவரும் ஏதாவது நோக்கத்துடன் தான் தொடர்பு கொள்கிறார்கள். அவர்களுக்கு இது கிடைத்தால் கண்டிப்பாக தீங்கான விசயங்கள் தான் நடக்கும்.

நான் சாமியார் ஆன்மிகவாதி என்பது எல்லாம் கிடையாது நான் ஒரு சராசரி மனிதன் தான் நான் எதிர்பார்க்கும் விசயமும் சாதாரணமாகதான் உங்களிடம் எதிர்பார்ப்பேன். அதை நீங்கள் பூர்த்தி செய்தால் போதும் நீங்கள் மந்திர சாஸ்திரத்தில் வெற்றி பெறுவது உறுதி.நான் கண்டிப்பாக பணத்தை எதிர்பார்க்கமாட்டேன். நல்ல உள்ளத்தை மட்டும் தான் கூடுதலாக உங்களுக்கு பூர்வபுண்ணியமும் இருக்கவேண்டும் அப்பொழுது அது கிடைக்கும்.எனக்கு சிஷ்ய கூட்டம் தேவையில்லை நான் கற்ற விசயத்தை அடுத்தவருக்கு கற்று தர வேண்டும் அவ்வளவுதான். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

8 comments:

MANI said...

வணக்கம் ராஜேஷ்சுப்பு,

பல நல்ல விஷயங்களை சிறப்பாக எழுதிவருகிறீர்கள். மிக்க நன்றி. நீங்கள் எழுதியுள்ள விஷயங்களில் இருந்து ஆன்மீக, ஜோதிட, மந்திர சாஸ்திரங்களில் தங்களின் ஆர்வமும், தேர்ச்சியும், முதிர்ச்சியும் தெரிகிறது.

அவற்றை பிறருக்கு கற்றுக்கொடுக்க நினைக்கும் உங்கள் பரந்த மனப்பான்மை மிகவும் உயர்ந்தது.

அவற்றை கற்றுக்கொள்ள போதுமான தகுதிகள் உள்ளவர்கள் குறைவாக உள்ளனர் என்று தாங்கள் குறைபட்டுக்கொள்வதும் நியாயமானதே.

ஆனால் உண்மையிலேயே அவற்றை நல்ல முறையில் கற்று தேர்ச்சியடைய விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும், தங்களை நேரில் சந்தித்து விளக்கங்கள் பெறலாமா? அல்லது போன் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக தொடர்பு கொள்ள இயலுமா என்பதை தெரிவித்தால் நல்லது.

பலரும் இவற்றை கற்க ஆர்வமும், முயற்ச்சியும் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சரியான வழிகாட்டலும், பூர்வ புண்ணியமும் அமையாமல் இருப்பதால் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. தாங்கள் விரும்பினால் தங்களையும் குருவாக ஏற்று எங்களது முயற்ச்சிகளை தொடர மிக்க உதவியாக இருக்கும். நீங்கள் குருவாக இருப்பது கடினம் என்று நினைத்தால் ஒரு வழிகாட்டியாக இருந்து எமக்கு உதவலாமே.

நன்றி.

perumal shivan said...

ungal blog-kin aarambakalathilirunthe
naan follower aaga erukkiren .neegal simple and truth aaga eruppathu enakku pidikkum.

ungal name : "rajesh babu" thane ean? "rajesh subbu" ena maatrikkondeer?

rajeshsubbu said...

//* MANI said...வணக்கம் ராஜேஷ்சுப்பு,

பல நல்ல விஷயங்களை சிறப்பாக எழுதிவருகிறீர்கள். மிக்க நன்றி. நீங்கள் எழுதியுள்ள விஷயங்களில் இருந்து ஆன்மீக, ஜோதிட, மந்திர சாஸ்திரங்களில் தங்களின் ஆர்வமும், தேர்ச்சியும், முதிர்ச்சியும் தெரிகிறது.

அவற்றை பிறருக்கு கற்றுக்கொடுக்க நினைக்கும் உங்கள் பரந்த மனப்பான்மை மிகவும் உயர்ந்தது.

அவற்றை கற்றுக்கொள்ள போதுமான தகுதிகள் உள்ளவர்கள் குறைவாக உள்ளனர் என்று தாங்கள் குறைபட்டுக்கொள்வதும் நியாயமானதே.

ஆனால் உண்மையிலேயே அவற்றை நல்ல முறையில் கற்று தேர்ச்சியடைய விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும், தங்களை நேரில் சந்தித்து விளக்கங்கள் பெறலாமா? அல்லது போன் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக தொடர்பு கொள்ள இயலுமா என்பதை தெரிவித்தால் நல்லது.

பலரும் இவற்றை கற்க ஆர்வமும், முயற்ச்சியும் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சரியான வழிகாட்டலும், பூர்வ புண்ணியமும் அமையாமல் இருப்பதால் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. தாங்கள் விரும்பினால் தங்களையும் குருவாக ஏற்று எங்களது முயற்ச்சிகளை தொடர மிக்க உதவியாக இருக்கும். நீங்கள் குருவாக இருப்பது கடினம் என்று நினைத்தால் ஒரு வழிகாட்டியாக இருந்து எமக்கு உதவலாமே.

நன்றி.
*//

வருக வணக்கம் தங்கள் கருத்துக்கு நன்றி உங்களுக்கும் ஏன் அனைவருக்கும் திறமை இருக்கும் ஆனால் மனதை திடப்படுத்த வேண்டும். உங்கள் அறிவை நேர்வழியில் கொண்டு செல்லும்போது அனைத்தும் கிடைக்கும்.நன்றி

rajeshsubbu said...

//* perumal shivan said...
ungal blog-kin aarambakalathilirunthe
naan follower aaga erukkiren .neegal simple and truth aaga eruppathu enakku pidikkum.

ungal name : "rajesh babu" thane ean? "rajesh subbu" ena maatrikkondeer? *//

வருக வணக்கம் எனது பெயர் ராஜேஷ் தந்தையின் பெயர் சுப்பு அவரின் பெயரை சேர்த்து அனைத்து mail யிலும் வந்ததால் வைத்துக்கொண்டேன். பிறகு தான் numerology பார்க்கும்போது அந்த பெயர் பொருத்தமாக வந்தது. அப்படியே வைத்துக்கொண்டேன். பாபு என்ற பெயரை நான் வைத்தது கிடையாது.

Unknown said...

iyaa vanakkam era ravikumar. naan thangaledam mantheram karkka verumpukindrean athan muulam ennai naade varum eliya makkalukku seavai saiya virumpukirean thayavu saidu enakku kattru tharuveergala . nanree vannakkam.

Unknown said...

bala: vanakam,naan nermaiyanavan...enaku manthiram karka aarvam ,,naan suya nalathukum ubayogika maaten,,matravargal pootravendum endrum karka villai...enaku ethanayum karka vendum endru aasi...athil ithu romba aasai yen endral ithai kattru thara enaku aal illai.....ungal pathiluku kathirukiren

GOPI said...

வணக்கம் திரு.ரமேஷ்சுப்பு

உங்கள் பதிவை படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. எனக்கும் உங்கள் குலதெய்வம் தான். நான் 10 வருடங்களாக தெய்வீக பணியில் இருக்கிறேன். எனக்கும் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆகவே எனக்கு மந்திரங்களை கற்க உதவி செய்வீர்களா? உங்கள் அருளும் தெய்வதின் அருளும் எனக்கு இருந்தால் போதும் மக்களுக்கு உதவ முடியும். எனது இமெயில் ktgopijai@gmail.com தொடர்பு கொள்ளுங்கள்.

Unknown said...

தங்களை தொடர்பு கொள்ளி விரும்புகிறேன்