Followers

Tuesday, August 21, 2012

சுதந்திரம்


வணக்கம் நண்பர்களே திருமண தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். திருமணத்தில் பலபேர் என்னிடம் கேட்கும் கேள்வி தான் சார் நான் திருமண செய்துக்கொண்டால் என்னை அவர் சுதந்திரமாக இருக்கவிடுவாரா என்று கேட்பார்கள். திருமணம் என்பதே சுதந்திரத்திற்க்கு கட்டுபோடும் ஒரு விசயமாக தான் இருக்கின்றது. அப்புறம் எப்படி சுதந்திரமாக இருப்பது. வரும் கணவனை பொருத்து அது அமையும்.

இயற்கையில் ஒரு விதி உள்ளது நீங்கள் எதனை ஆசைபடுகிறீர்களோ அதற்கு கடவுள் முதலில் ஆப்பு அடிப்பார். உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு துணையாக வருபவர் எப்படி என்று தெரியும். அதனை எல்லாம் நாம் பார்க்கலாம்.

நீங்கள் திருமணம் செய்யபோகிறாவராக இருந்தால் முதலில் நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சொந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை அவனுக்கு அல்லது அவளுக்கு நீங்கள் சொந்த வாழ்க்கையை வாழ உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.  உங்கள் துணையின் சுதந்திர வாழ்வில் நீங்கள் தலையிடாததால் அவர்களுக்கு உண்மையிலேயே உதவுகின்றீர்கள். 

நீங்கள் மனதில் கேட்கும் கேள்வி எனக்கு புரிகின்றது. என்னடா உன் இஷ்டத்திற்க்கு சுதந்திரம் தரனும் என்று சொல்கிறாய் அவள் பாட்டுக்கு போய்விட்டால் என்னடா பண்றது என்று கேட்க தோன்றும். என்ன செய்வது நாடு அப்படி போய்கிட்டு இருக்கிறது. நாமும் மாறிதானே ஆகவேண்டும். கடிவாளம் போடகூடாது. அந்த வழியில் போய் அவர்களை உங்கள் வழிக்கு கொண்டு வரவேண்டும். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்.

நான் உங்களை பயமுறுத்தவில்லை இந்த காலத்தில் எந்த கணவன் மனைவின் பேச்சை கேட்பதில்லை அனைத்து பேரும் மனைவின் பேச்சை கேட்டு தான் நடப்பவர்களாக இருக்கிறார்கள் அப்புறம் எதற்கு பயம். 

திருமணம் முடித்தவர்கள் நினைக்கிறார்கள் வந்து பாரு தெரியும் நாங்கள் படும்பாட்டை என்ன செய்வது ஒவ்வொரு மனிதனையும் தனித்தன்மையுடன் தான் கடவுள் படைக்கிறார். மனிதன் சுதந்திரத்தை விரும்புவது இயற்கையின் செயல்பாடு. 

உங்கள் லக்கினம் என்பது முதல் வீடு அதன் அதிபதி ஒருவராக இருப்பார் உங்களுக்கு வரும் துணைவர் ஏழாம் வீட்டில் இருந்து வருபவர் அதன் அதிபதி வேறு ஒரு ஆளாக இருப்பார் கண்டிப்பாக ஒத்துபோகாது. ஒருவரை ஒருவர் நேராக பார்ப்பதால் மோதல் வருபவது சோதிடத்தில் இயற்கை.

இவர்களை ஒத்துவாழ கடவுள் தான் துணைபுரிகிறார் அதனை நம்பினால் தாராளமாக திருமணத்தை செய்துக்கொள்ளலாம்.என்ன நண்பர்களே அனைவரும் பதிவை படிக்கிறீர்களா படியுங்கள் அப்பொழுது தான் உங்கள் வாழ்க்கை துணையின் உண்மை நிலை அறிந்து அவர்களுடன் சந்தோஷமாக வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

No comments: