Followers

Tuesday, August 7, 2012

சூரியன் பரிகாரம்



வணக்கம் நண்பர்களே ஆறாம் வீட்டுடன் சூரியன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் என்ன பரிகாரம் செய்யலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம் சில சோதிடர்கள் சொல்லுவார்கள் எந்த பரிகாரம் செய்தாலும் முதலில் சூரிய பகவானை தரிசனம் செய்துவிட்டு தான் அடுத்த கிரகத்திற்க்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். 

நாடி சோதிடத்திலும் சூரியபகவானுக்கு பரிகாரம் செய்துவிட்டு தான் செய்யவேண்டும் என்று சொல்வார்கள். சூரிய வழிபாடு எல்லா இடத்திலும் நடைபெறும். சொல்லபோனால் மனிதனின் முதல் வழிபாடு ஆக இருந்தது சூரிய வழிபாடு தான். அந்த அளவிற்க்கு முக்கியமான ஒன்றாக தான் சூரிய வழிபாடு இருக்கிறது. 

உங்களுக்கு ஆறாம் வீட்டுடன் சூரியன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அதனால் பிரச்சினை வருகிறது என்று தெரிந்தால் ஞாயிற்றுகிழமை அன்று நவக்கிரக சந்நதிக்கு சென்று சூரியபகவானின் காலில் கோதுமை வைத்து அவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்துவிட்டு வாருங்கள். இவ்வாறாக ஒன்பது வாரங்களுக்கு வழிபாடு நடத்தினால் உங்களின் பிரச்சினை தீரும். 

காலையில் குளித்துமுடித்தவுடன் முதலில் வாசலில் வந்து சூரியபகவானை தரிசனம் செய்துவிட்டு (கை எடுத்து கும்பிடவும்) வீட்டிற்க்குள் செல்ல வேண்டும் அதன் பிறகு தான் வழக்கமாக உங்களின் பூஜையை செய்திட வேண்டும் இதனை தினமும் செய்யலாம். ஆறாம் வீட்டு தசா நடப்பவர்கள் மட்டும் அல்ல அனைவரும் இதனை செய்திடலாம்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இருந்தார் அவரின் ஜாதகத்தில் சூரியன் பகை வீட்டில் அமர்ந்து இருந்தார் அவருக்கு ஆறாம் வீட்டு தசா ஆரம்பித்தவுடன் நண்பருக்கும் அவரது அப்பாவிற்க்கும் பகை ஏற்பட்டு அவரின் அப்பா வீட்டை விட்டு சென்று விட்டார் நண்பர் தினமும் இந்த பரிகாரத்தை செய்தார். நண்பர் இந்த பரிகாரத்தை செய்து கொண்டு இருக்கும் போதே அவரின் அப்பா வீடு திரும்பி வந்துவிட்டார். நம்பிக்கையுடன் செய்தால் அதன் பலனை நீங்கள் கூடியவிரைவில் அனுபவிக்கலாம்.

நண்பர்களே நான் தருவது பொது பரிகாரம் தான் இதனை உங்களின் நண்பர்கள் மற்றும் உங்களின் உறவினர்களின் குடும்பங்களுக்கும் நீங்கள் பரிந்துரைக்கலாம். அதனால் நீங்கள் பயன் அடையமுடியும். உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் சிறந்த பரிகாரமாக இது இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: