Followers

Thursday, September 13, 2012

மந்திர அனுபவங்கள்



வணக்கம் நண்பர்களே மந்திர அனுபவங்கள் தொடரில் கடைசியாக பார்த்தது ஆத்மா விரிவடையும் போது ஒரு பிரச்சினை இருக்கும் என்று சொல்லிருந்தேன். ஆத்மா பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படும் போது சில கெட்டவிசயங்கள் உங்களை தாக்கும் வாய்ப்பு இருப்பதால் அதற்கு   உங்கள் குருநாதர் உங்களுக்கு உடல்கட்டு போட்டுவிடுவார்.

இந்த ஒரு செயல் இருந்தே குரு உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறதா உங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களும் அவர் தான் விளக்குவார். 

நாம் செய்கின்ற வழிபாடு கூட நடைபெறாமல் போவதற்க்கு நம்மை தாக்கும் தீயசக்திகள் தான் காரணமாக இருக்கின்றன. அதனால் உடல்கட்டு என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும்.

ஒரு குரு எப்படி இருப்பார். அந்த ஞானியை நீங்கள் எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை விவேக சூடாமணி என்ற நூலில் 425 வது செய்யுளில் சொல்லி உள்ளார்.

புறப்பொருளிகளின் பற்றை நீக்கி உலகத்தையும் அதன் தோற்றத்தையும் ஒர் மனிதன் எவ்வாறு விருப்பு வெறுப்பின்றி பார்ப்பானே அவ்வாறே நோக்கி தான் உலகத்தோடு இருப்பினும் தன் சித்தத்தை பிரமனிடத்தே ஒன்றச்செய்து எவன் இன்பம் அனுபவிக்கின்றானோ அவனே ஞானி என்று சொல்லியுள்ளார்.

இப்படி கிடைப்பது ரொம்ப கடினமான ஒன்றாக தான் இருக்கும். குருவை பற்றி நிறைய எழுதியுள்ளேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல குரு கிடைக்க நீங்கள் தவம் செய்து இருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே உங்களை நீங்கள் நல்ல முறையில் வளர்த்துக்கொள்ளலாம். அந்த மாதிரி குரு கிடைக்கும்வரை பல நல்ல புத்தகங்களை நீங்கள் படிப்பதால் உங்களை வளர்த்துக்கொள்ள உதவும். 

இவ்வளவு பதிவுகள் மந்திர அனுபவங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஒருவர் மட்டும் தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டு எனக்கு கற்று தாருங்கள் என்று கேட்டார். அவர் ஆஸ்திரிலியாவில் இருக்கிறார். அவருக்கு மட்டும் கற்று தர உள்ளேன்.

பலர் என்னிடம் கேட்டதோடு சரி நல்ல இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்கள் என்று மட்டும் சொன்னார்கள் வேறு யாருக்கும் இதில் ஈடுபாடு அந்தளவுக்கு இருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து இதைப்பற்றி எழுதுவேன் அப்பொழுது உங்களை எப்படி எல்லாம் தயார்படுத்திக்கொள்ளலாம் என்று தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Enathu Ennangal said...

நண்பரே எனக்கு மந்திரங்கள் கற்று கொடுங்கள்..எனக்கு இதில் முழுமையான ஈடுபாடு உள்ளது. உங்கள் மொபைல் எண் என்ன? உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் கற்று கொடுங்கள். நான் என்னுடைய வாழக்கை முன்னேற்றத்திற்காக மட்டுமே இதனை உங்களிடம் கேட்கிறேன்.

CFS G.R. MURUGAN said...

ஐயா வணக்கம்,

கடக லக்னம் 6இல் குருவுடன் சனி சிறுவயதிலிருந்தே மந்திரங்கள் மற்றும் பாடல்களில் விருப்பம் அதிகம் அவற்றில் சில எந்த எதிர்பார்பும் இன்றி பாராயணம் செய்வேன் அர்த்தங்களும் தெரியும், அடிக்கடி குரு மூலம் அறியவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் எப்படி எனக்கு சாத்தியமாகும் குரு தரிசனமே யோகமான விஷயம் வழி கூறுங்கள்
கு ரா முருகன் பி‌எஸ்‌என்‌எல்