Followers

Saturday, September 15, 2012

மந்திர அனுபவங்கள்




நண்பரே எனக்கு மந்திரங்கள் கற்று கொடுங்கள்..எனக்கு இதில் முழுமையான ஈடுபாடு உள்ளது. உங்கள் மொபைல் எண் என்ன? உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் கற்று கொடுங்கள். நான் என்னுடைய வாழக்கை முன்னேற்றத்திற்காக மட்டுமே இதனை உங்களிடம் கேட்கிறேன்.

பதில்

நான் எழுதுவதே நான் அடுத்தவர்களுக்கு கற்று தரவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை  யாராவது ஒன்று இரண்டு பேர்க்கு மட்டுமே என்னால் கற்று தரமுடியும். எல்லாருக்கும் கற்றுதருவது என்னால் இயலாத காரியம். இந்த பதிவுகளில் தலைப்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும் மந்திர அனுபவங்கள் என்று வைத்துள்ளேன். என்னுடைய அனுபவத்தை உங்களுக்கு சொல்லும் போது நீங்கள் அந்த வழியில் சென்றால் உங்களுக்கு என்னுடைய அனுபவங்கள் ஒரு வேலை பயன்படலாம். இதை எழுதும் போது நான் நினைத்தது யாராவது ஒருவர் மட்டும் இதை கருத்தில் எடுத்துக்கொண்டால் போதும் என்று நினைத்து தான் எழுதினேன். இன்றைக்கு பார்த்தால் எனக்கு வரும் போன்கால் அனைத்தும் இது சம்பந்தமாக தான் இருக்கிறது. நீங்கள் மந்திரவழியை தேர்ந்தெடுப்பதற்க்கு நல்ல சாமியார்களை தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும். நான் சாமியார் கிடையாது நான் ஆசாமி.


ஐயா வணக்கம், 



கடக லக்னம் 6இல் குருவுடன் சனி சிறுவயதிலிருந்தே மந்திரங்கள் மற்றும் பாடல்களில் விருப்பம் அதிகம் அவற்றில் சில எந்த எதிர்பார்பும் இன்றி பாராயணம் செய்வேன் அர்த்தங்களும் தெரியும், அடிக்கடி குரு மூலம் அறியவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் எப்படி எனக்கு சாத்தியமாகும் குரு தரிசனமே யோகமான விஷயம் வழி கூறுங்கள் 
கு ரா முருகன் பி‌எஸ்‌என்‌எல்


பதில்

வணக்கம் முருகன் நீங்கள் இரண்டு கிரகங்களை மட்டும் வைத்து கேள்வி கேட்டு உள்ளீர்கள் பரவாயில்லை  உங்களுடைய முழு ஜாதகத்தையும் வைத்து பார்த்தால் தான் தெரியும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்வீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள் எதற்கு அவ்வாறு செய்யவேண்டும். எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். குரு தேவை என்று அடிக்கடி சொல்லுவதின் நோக்கம் இது எல்லாம் நான் எழுதகூடாது என்று நினைத்திருந்தேன் ஆனால் உங்களை மாதிரி நிறைய பேர் என்னிடம் கேட்டுகொண்டே இருப்பதால் ஒரு நிகழ்ச்சியை மட்டும் உங்களுக்கு சொல்லுகிறேன். மந்திரங்களை நிறைய விசயத்திற்க்கு பயன்படுத்துவார்கள் எந்த எந்த விசயத்திற்க்கு எல்லாம் என்றால் அதைப்பற்றி சொல்லுவதற்க்கே எனக்கு நேரம் இருக்காது. 

அதில் ஒன்று உங்கள் ஆத்மாவை உங்கள் உடல் இருந்து பிரித்து எடுத்து வெளியில் கொண்டு செல்லலாம். அப்படி உங்கள் ஆத்மாவை உங்கள் உடலிருந்து பிரிக்கும் போது அதற்கு என்று நிறைய பயிற்சி தேவை அந்த பயிற்சி புத்தகத்தில் இருப்பது மாதிரி செய்தால் உங்கள் உயிர் போய்விடும் அதற்கு தகுந்த குரு தேவை அப்பொழுது மட்டுமே சாத்தியப்படும்.உயிரை பிரித்து எடுத்து அந்த ஆத்மாவை மறுபடியும் உங்கள் உடம்பிலேயே உகுத்தவேண்டும் அப்பொழுது மட்டுமே உங்கள் உடம்பு உயிர் வந்து எழும். அதுவரை உங்கள் உடம்பு செத்த உடம்பு போலதான் இருக்கும். சில சாமியார்கள் குகைகளில் இருப்பதன் ரகசியம் இதற்கு தான் நண்பரே. என்னடா படமாக ஒட்டிகிறாய் என்று கேட்கலாம்.

ஆத்மாவை பிரிக்கும்போது என்ன நடக்கும் என்று இரண்டு விசயத்தை சொல்லுகிறேன் உங்களுக்கு குரு யாராவது இருந்தால் அல்லது இதைப்பற்றி தெரிந்தவர்களிடம் போய் கேளுங்கள் அப்பொழுது தெரியவரும். முதலில் மந்திர பிரயோகம் செய்தவுடன் கடலின் சத்தம் நம் காதில் கேட்கும் அதன் பிறகு சங்குவின் சத்தம் கேட்கும் அதன் பிறகு நிறைய வேலை இருக்கிறது அதை எல்லாம் நான் எழுதவில்லை உங்கள் ஆத்மா பயணத்தை தொடங்கும். இதைப்போய் உங்கள் குருவிடம் கேளுங்கள் உண்மையை சொல்லுகிறேன அல்லது பொய் சொல்லுகிறேன என்று தெரியவரும்அவர் சொல்லுவார். 

இதை எல்லாம் நான் சொல்லுவதால் நீங்கள் சாமியார் என்று நினைத்துக்கொண்டு போனில் சாமி என்று கூப்பிடாதீர்கள். நான் ஆசாமி. கடைசியாக சொல்லுவது கண்டிப்பாக குரு தேவை. உங்கள் ஜாதகத்தை அலசிபாருங்கள் அனைத்திற்க்கும் வழி இருக்கும். ஜாதகத்தில் வழி இல்லாமல் செய்வது கடினம் உலகில் உள்ள அனைவரும் கற்கலாம் ஆனால் ஜாதகத்தில் அதற்கு வழி என்ன என்று பார்த்தால் தான் தெரியும். போதுமா நண்பரே

நிறைய எழுதபோகிறேன் அப்பொழுது உங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகத்திற்க்கும் வழி கிடைக்கும் ஸ்ரீ அங்காளஅம்மன் என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை பார்க்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

mani said...

மந்திர சாஸ்திரங்கள் பற்றி ஒரு கேள்வி எனக்கு இதன் மேல் விருப்பம் உள்ளது வெறும் மந்திர சாஸ்திரங்களால் ஒருவர் உயர்நிலையை அடையமுடியுமா அல்லது யோக தியானம் கற்றபிறகு அடையமுடியுமா தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள்