Followers

Monday, September 3, 2012

மந்திர அனுபவங்கள்



வணக்கம் நண்பர்களே மந்திர அனுபவங்களுக்கு இருக்கும் நல்ல வரவேற்பு  இருக்கிறது பல பேர் இதற்காகவே தொடர்பு கொள்கிறார்கள். வேறு யாரும் இதைப்பற்றி எழுதவில்லையா என்றும் தெரியவில்லை. நான் எழுதுகிற கருத்து புதுமையாக இருக்கிறதா என்றும் தெரியவில்லை அனைவருக்கும் பிடிக்கிறது. 

மந்திர அனுபவங்களை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்வதே நீங்கள் ஏற்கனவே இதை பயின்று வரலாம் அல்லது புதிதாக மந்திரங்களை கற்க வேண்டும் என்று எண்ணம் ஏற்படும் என்பதால் தான் உங்களுக்கு இதனை எழுதுகிறேன்.

என்னுடைய அனுபவங்கள் உங்களுக்கு வழிகாட்டும் என்பதால் அனைத்தையும் எழுதுகிறேன். பல பேர் என்னை தொடர்பு கொண்டு கற்று தாருங்கள் என்று கேட்கிறார்கள். கற்று கொடுப்பதில் தவறு இல்லை. கற்பதற்க்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். எப்படி தயார் படுத்துவது என்பது எல்லாம் ஒவ்வொரு பதிவுகளிலும் எழுதிவருகிறேன்.

ஏற்கனவே நீங்கள் ஏதாவது மந்திரங்களை பயிற்சி செய்து வந்தால் நல்லது அதனைப்பற்றி சந்தேகங்கள் என்னிடம் கேட்டும் தெரிந்துக்கொள்ளலாம். என்னால் முடிந்தளவுக்கு உங்களுக்கு உதவி செய்கிறேன்.

இந்த மந்திரங்களை யார் எளிதில் கற்கலாம்?

வேலை வெட்டி இல்லாதவன் கற்கலாம். 

என்னடா இப்படி சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா உண்மை இதுதான். உங்கள் ஜாதகத்தை எடுத்து பாருங்கள். உங்களுக்கு குரு தசா நடந்தால் கண்டிப்பாக எளிதில் கற்கலாம் அல்லது ஐந்தாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டு அதிபதி தசா நடந்தால் கற்கலாம். 

பத்தாவது வீடு கர்மஸ்தானம் ஆறாவது வீடு செய்யும் வேலையை காட்டும் இடம் அதற்கு பனிரெண்டாவது வீடு வேலைக்கு ஆப்பு அடிக்கும் இடம். பத்தாவது வீட்டுக்கு பனிரெண்டாவது வீடு ஒன்பதாவது வீடாக வருகிறதா ஆறாவது வீட்டுக்கு பனிரெண்டாவது வீடு ஐந்தாவது வீடாக வருகிறதா எப்படி வேலை செய்யமுடியும். வேலையில் இருந்தால் கூட கொஞ்சம் கூட அந்த வேலையை செய்வது உங்களுக்கு பிடிக்காது. அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள் இந்த மாதிரி விசயங்கள் மீது அதிக ஈடுபாடு இருக்கும். இதை தான் வேலை வெட்டி இல்லாதவன் என்று சொன்னேன்.

பூர்வ புண்ணியத்தை காட்டும் இடம் ஐந்தாவது வீடு நமக்கு இருக்கும் பாக்கியத்தை காட்டும் இடம் ஒன்பதாவது வீடு இந்த இரண்டு வீட்டு தசாதான் உங்களை மந்திரங்களில் உயர்த்தி கொடுக்கும்.

மந்திரங்களுக்கு மிகப்பெரிய உதவி செய்யும் கிரகம் குரு. சோதிடத்திற்க்கும் குரு தான் அதிக உதவி செய்வார். உங்கள் ஜாதகத்தில் குரு எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். அவர் நல்ல நிலையில் இருந்தால் உங்களால் எளிதில் இதனை கற்றுவிடலாம்.

குரு கிரகம் கெட்டுவிட்டால் ஒரு மந்திரத்தையும் உங்களால் கற்க முடியாது அல்லது மந்திரத்தை சொல்லி தரும் குருவிடம் போய் சண்டை போட்டு கொண்டு இருப்பீர்கள்

குரு கெட்டுவிட்டால் மந்திரங்கள் மீது அதிக ஈடுபாடு இருக்கும் ஆனால் உங்களால் மந்திரத்தை கற்கமுடியாது. உங்களுக்கு எந்த கிரகம் கெடுகிறதோ அந்த விசயங்களில் உங்கள் மனது ஈடுபட்டு உங்களை வாட்டி எடுத்துவிடும் இது சோதிடத்தில் உள்ள விதி.

சுக்கிரனும் மந்திரங்களுக்கு உறுதுணை புரியும் கிரகம் தான் ஆனால் அவர் இருக்கும் வீட்டை பொருத்து பலனை கொடுப்பார். 

மந்திரங்கள் உங்களின் ஆத்மாவை சம்பந்தப்பட்ட ஒரு விசயம். உங்கள் உடம்பை சம்பந்தப்பட்ட விசயங்களாக இது இருக்காது. உங்கள் மனது அமைதி அடையவேண்டும் நோய்கள் வரகூடாது என்று நினைத்தால் நீங்கள் செய்யவேண்டியது யோக இந்த மாதிரி உள்ளவற்றை கற்கவேண்டும். 

மந்திரங்களில் உடம்புக்கு மனதிற்க்கு ஏற்படும் நோய்கள் போன்றவற்றை நீக்க உயர்நிலையில் கற்றுதருவார்கள். ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு சில நடந்தாலே போதும்.

நீங்கள் ஒரு மந்திரத்தை எடுத்துக்கொண்டு தினமும் செய்தாலே போதும். நல்ல பலனை கொஞ்ச நாட்களில் நீங்கள் அனுபவிக்கலாம் இயந்திர உலகில் அனைவருக்கும் அதிகமாக வேலை இருக்கிறது அப்படி உள்ளவர்கள் தினமும் இதற்கு என்று ஒரு சிறு நேரம் ஒதுக்கி செய்தாலே போதும். 

நீங்கள் செய்கின்ற நேரம் இதற்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். தினமும் நீங்கள் செய்கின்ற நேரத்தில் தவறாமல் செய்ய வேண்டும். அந்த நேரத்தை தினமும் மாற்றிக்கொண்டே இருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக எந்த பலனையும் தராது.

எந்த மந்திரத்தை எடுப்பது? 

நீங்கள் எடுக்கும் மந்திரங்கள் அனைத்தும் சக்தியை அடிப்படையாக கொண்டதாக இருந்தால் நன்றாக இருக்கும். சிவம்,பெருமாள் உயர்நிலையில் அதுவும் சந்நியாசியாக இருப்பவர்கள் மேற்க்கொள்ளலாம். அதற்கு பல கட்டுபாடு உண்டு. சக்தியை எடுத்தால் எளிதில் உங்களுக்கு நன்மை தரும்.

எந்த மந்திரத்திற்க்கும் நல்ல சக்தி இருக்கும். நீங்கள் என்ன செய்வீர்கள் ஒரு பத்து நாள் செய்வது அதை விட்டு விட்டு அடுத்த மந்திரத்தை எடுப்பது இப்படியே சென்றால் கடைசி வரை ஒன்றும் நடக்காது. மனிதனின் இயல்பு அனைத்தையும் சந்தேகத்துடன் பார்ப்பது அப்படி இருந்தால் ஒரு நாளும் உங்களுக்கு இந்த மந்திரங்கள் நன்மை செய்யாது.

எனக்கு குரு உபதேசம் முதலில் இரண்டு வரி உள்ள ஒரு மந்திரத்தை கொடுத்தார். அவரிடம் நான் அதை வாங்கும்போது உலகத்தில் இது தான் மிகபெரிய பொக்கிஷம் என்று நினைத்து வாங்கினேன். அதை என் உயிர் போல் வைத்து உரு ஏற்றினேன். அதன் மூலம் தான் அனைத்தும் ஏன் அது ஒன்று போதும். இந்த மாதிரி மனநிலையில் இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறமுடியும்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

MANI said...

அருமையான கருத்துகள் கொண்ட பதிவு. அனுபவம் தொடரட்டும்.