Followers

Sunday, September 9, 2012

மந்திர அனுபவங்கள்



வணக்கம் நண்பர்களே இப்பதிவில் மந்திர அனுபவங்களைப் பற்றி பார்க்கலாம். நான் நல்ல குருவை தேடுங்கள் என்று சொல்லியிருந்தேன். பல நண்பர்கள் தேடியுள்ளார்கள் என்று தெரியவருகிறது. பல சாமியார்களிடம் போய் கேட்டு உள்ளார்கள். என்னை தொடர்பு கொண்டும் பேசினார்கள்.

பல பேர் எனக்கு குரு அமையவில்லை நான் பலவழிகளில் தேடினாலும் அவர்களை பிடிக்கமுடியவில்லை என்று சொல்லுகிறார்கள். என்னை தொடர்பு கொள்வதில் பல சோதிடர்களும் தொடர்புக்கொண்டு கேட்டார்கள்.

எனக்கு ஆச்சரியமான விஷயமாக இது இருக்கிறது இந்தியாவில் குருக்கு பற்றாக்குறை வந்துவிட்டதா என்று எனக்கு வியப்பாக இருந்தது. இந்தியாவில் எந்த பற்றாக்குறை ஏற்பட்டாலும் சாமியார் பற்றாக்குறை ஏற்படாது.

நீங்கள் தேடுகிறீர்கள் என்பது உண்மை தான் ஆனால் தேடுவதில் ஒரு சில தவறுகள் இருக்கும். அது என்ன என்று பார்த்துவிடலாம். ஒவ்வொருவரும் குருவை எப்படி போய் பார்ப்போம் என்றால் நம்மை சுற்றி ஒரு சுற்றுசுவர் மாதிரி எழுப்பிக்கொண்டு போய் பார்ப்போம். தன்னை காத்துக்கொள்வதாக நினைத்துக்கொண்டு நான் இப்படி தான் இருப்பேன் எனக்கு நீ கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்போம்.

நாம் போய் அவர்களிடம் பேரம் பேசுவது நீங்கள் அதை எனக்கு தரவேண்டும் பதிலுக்கு நான் உங்களுக்கு இதனை செய்வேன் அவ்வளவு தான் நமது உறவு உன்னுடைய வேலை பார்த்து கொண்டு நீ  போ என்னுடைய வேலையை நான் பார்த்துக்கொண்டு போய்விடுவேன் என்று கேட்பது.

நாம் அவர்களிடம் கற்கபோகிறோம் நமக்கு அவர்கள் கண்டிஷன் போடவேண்டும் ஆனால் நாம் அவர்களுக்கு கண்டிஷன் போட்டால் எப்படி உங்களுக்கு குரு அமைவார்.

அவர் நமக்கு கண்டிஷன் போடுவதாக இருந்தால் இந்த குரு நமக்கு தேவையா என்று உங்களுக்கு தோன்றும் என்ன செய்வது நாம் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடையவேண்டுமே.

ஆன்மிக வியாபாரம் நடைபெற்றால் நாம் அவர்களுக்கு கண்டிஷன் போடலாம். பொருள் வியாபாரத்திலேயே நாம் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறோம் .ஆன்மிக வியாபாரம் இல்லாத இடத்தில் போய் நாம் கேட்டால் கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் குரு அமையமாட்டார்.

இது நீங்கள் செய்யும் தவறு இல்லை உங்கள் ஜென்மகர்மவினை செய்யும் தவறு அதை நீங்கள் உணர்ந்துவிட்டால் உங்கள் பக்கத்துவீட்டிலேயே அவர் இருக்கலாம்.உங்களுக்கு அமையும் குரு உங்களுக்கும் அவருக்கும் முன்ஜென்ம உறவு இருக்கும்.

ஆன்மிகத்திற்க்கு குரு தேவையா என்றும் சிலர் என்னிடம் கேட்டார்கள். என்னை பொருத்தவரை நான் சொல்லுவேன் கண்டிப்பாக தேவை என்று சொல்லுவேன். இந்த மந்திர அனுபவங்களை எழுதும் நோக்கம் எனக்கு கிடைத்த அனுபங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்க்கு தான் என்னுடைய அனுபவங்களில் கண்டிப்பாக ஒரு குரு இருந்தால் மிக பெரிய எல்லை நாம் எளிதில் தொட்டுவிடலாம்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்கள் நம்மை தேடமாட்டார்கள் நாம் தான் அவர்களை தேடி விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் மந்திரங்களை படித்து இருப்போம். அவற்றை சொல்லிக்கொண்டும் இருப்போம் ஆனால் மந்திரங்களினால் நமக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்திருக்கும்.

நாம் குரு மூலம் கற்றால் அந்த மந்திரங்கள் எப்படி சொல்ல வேண்டும் அப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும் என்று அவர்களால் மட்டும் தான் சொல்லி தரமுடியும்.

மந்திரங்கள் ஆத்மாவுடன் தொடர்பு உள்ளது என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.ஆத்மா மூலம் நடைபெறும் காரியம் அது. மந்திரங்கள் சொல்லும் போது உங்கள் ஆத்மா விரிவடையும். அப்பொழுது ஒரு மிகப்பெரிய பிரச்சினை உள்ளது அது என்ன என்றால் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: