Followers

Friday, October 26, 2012

ஆன்மீக அனுபவங்கள் 10



வணக்கம் நண்பர்களே ஒரு நண்பர் கேட்டு இருந்தார் ஆத்மாவை உடலில் இருந்து பிரிக்கமுடியுமா எப்படி என்று கேட்டு உள்ளார். சாமியார்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். நான் சோதிடக்காரன் எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்.

உடம்பில் இருந்து ஆத்மாவை பிரிப்பது கடினமான ஒன்று தான். யோகாவில் உயர்நிலையில் அவ்வாறு பிரிக்க முடியும். அது கடுமையான பயிற்சியின் மூலம் தான் நடைபெறும் சாதாரணமாக நடைபெறாது.

இதயத்தில் உள்ள அறைகளில் ஒவ்வொரு அறையாக சுவாசத்தை நிறுத்தும் போது ஆத்மாவை உடலில் இருந்து பிரிக்கமுடியும் நீங்கள் நினைக்கும் இடத்திற்க்கு கொண்டு செல்ல முடியும்.

சுவாசத்தை நிறுத்துவது என்பது கடினமான ஒன்று தான் அதற்கு நேரம் இருக்கிறது. இரண்டு அறைகளில் சுவாசத்தை நிறுத்தும் போது ஆத்மாவை பிரிக்கமுடியும். உங்களின் இதயம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இது உயிருக்கு ஆபத்தான செயல் தக்க ஆலோசனைப்படி செய்ய வேண்டும். தேவையற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் உங்களின் குரு ஆலோசனைப்படி செய்யவும்.

பல நண்பர்கள் ஆன்மீக அனுபவங்களை படித்துவிட்டு பாராட்டுகிறார்கள். இதில் பெண்கள் நல்ல கணவன் அமையவில்லை என்று சொல்லுகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் எப்படி தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை வீட்டில் அம்மா அப்பாவிடம் சொன்னாலும் பேசுவார்கள் என்று மனது நினைக்கிறது நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சொல்லியுள்ளார்கள்.

மந்திர அனுபவங்கள் பத்து பதிவு வந்தால் அது பிரச்சினையை சந்திக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன். இந்த தொடர் உங்களின் மனதில் ஏதோ செய்கிறது இதற்கே இப்படி என்றால் மொத்தம் 5 பிளாக்கையும் படித்தால் தமிழ்நாட்டில் ஏகாபட்ட சாமியார்களை உருவாக்குவேன் என்று நினைக்கிறேன். நானே ஆசாமி உங்களை எதற்கு சாமியாராக மாற்ற வேண்டும். இல்லறவாழ்வில் ஈடுபட்டு நல்ல சந்தோஷத்துடன் ஆன்மீக வாழ்வை நடத்துங்கள்  அதுவே போதும்.

பெண்கள் இந்தளவுக்கு விழிப்புணர்வோடு பேசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த விழிப்புணர்வு இருந்தாலே கடவுள் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை தருவார்.

உங்களுக்கு துணையாக வருபவர் கண்டிப்பாக உங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் பொறுமையாக அவரை கையாண்டு ஆன்மீகத்திற்க்கு கொண்டுவாருங்கள்.

ஆன்மீக வாழ்வை பொறுத்தவரை மனிதர்களை மனிதர்களாக தான் பார்க்க தோன்றும். இந்த நிலை ஒவ்வொருவருக்கும் வரும்போது உங்களுக்கு கண்டிப்பாக குரு கிடைப்பார்.

அனைத்து நண்பர்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். நீங்கள் ஒரு குருவிடம் உபதேசம் பெற்றுவிட்டு என்னிடம் வாருங்கள் அதன் பிறகு என்னால் முடிந்த பயிற்சியை தருகிறேன்.

நீங்கள் வரும்போது உங்களிடம் அந்த சக்தி உங்களுடன் இருக்க வேண்டும் அப்படி இருக்கும்பட்சத்தில் என்னால் உங்களுக்கு பயிற்சியை தரமுடியும். சும்மாக வந்து நான் குரு உபதேசம் பெற்று ஒரு சக்தியை எடுத்துவிட்டேன் எனக்கு பயிற்சி  கொடுங்கள் என்று சொல்லகூடாது. நீங்கள் என்னை வந்து பார்த்தாலே உங்களிடம் இருப்பது என்ன என்று என்னால் கண்டுபிடிக்க முடியும்.  இதற்கும் சில நிபந்தனை உண்டு. 

பயிற்சி என்பது ஒரு சில வழிமுறைகள் தான் தருவேன். அதை வைத்து நீங்கள் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் இதை பயின்றபோது எனது குரு என்னிடம் உபதேசம் தந்தது ஒரு மந்திரத்தை கொடுத்து இதை செய் அவ்வளவு தான் அதன் பிறகு அவர் என்னை கண்டுக்கொள்ளவில்லை நான் கேட்கும் போது அவர் குப்பையை கிளறினால் தான் கோழி இரையை எடுக்கமுடியும். இது தான் எனக்கு கொடுத்த உபதேசம்.

வேறு ஏதுவும் சொல்லமாட்டார் அனைத்தும் பேசுவார் ஆனால் இதைப்பற்றி பேசமாட்டார். ஒருவன் ஒரு குருவை சரணடைந்து அவரிடம் தீட்சை பெறுவது என்பது ஆயிரம் மாஸ்டர் டிகிரி வாங்குவது போன்றது. அப்பொழுது மட்டுமே ஒருவன் வைரம்போல மின்னமுடியும்.

இன்றைக்கு இருக்கும் சாமியார்கள் சொல்லும் உபதேசம் ஒளி உடல் இருக்கிறது. உடம்பில் சக்கரம் இருக்கிறது அது இது என்று சொல்லி உங்களை பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவார்கள். என்னுடைய குருவின் உபதேசம் அனைத்தும் அனுபவத்தை தான் தந்தார்.

இன்றைக்கு தீட்சை என்பது ஆயிரம் ரூபாய்க்கு எல்லாம் தந்துக்கொண்டு இருக்கிறார்கள் உண்மையில் தீட்சை என்பது குருவின் உயிர். 

பயிற்சி என்பது சிந்தனையை தூண்டக்கூடியதாக அமையும். மற்றபடி தலைகீழ் நிற்க வேண்டும்.  அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு போதும் சொல்ல மாட்டேன். நான் இருப்பது சென்னையில் இந்த ஊரில் இருப்பவர்கள் வந்து பார்க்கலாம் இதற்காக நீங்கள் வெளியூரில் இருந்து செலவு செய்து என்னை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: