Followers

Tuesday, October 9, 2012

திருமணமும் பூர்வபுண்ணியமும் 3



வணக்கம் நண்பர்களே திருமணமும் பூர்வபுண்ணியமும் 2 பதிவில் பரிகாரம் என்ன என்று கேட்டு இருந்தேன் ஒருவர் மட்டும் பதில் தந்துள்ளார். கீழே இருக்கிறது பாருங்கள்.


 Rajaram said...
////அதிலும் ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்தால் இந்த பலனை கனகச்சிதமாக செய்வார் அவர் மூன்றாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்த்துவிடுவார் திருமண வாழ்வு அல்லது குழந்தைகளின் விசயத்தில் அருமையாக உங்களை விளையாடிவிடுவார்.இந்த வீட்டைப்பொருத்தவரை எந்த கிரகங்கள் உட்கார்ந்தாலும் பிரச்சினை தான். இதில் ராகு கேது உடகார்ந்தால் பித்ரு தோஷம் என்பார்கள் இதில் எந்த கிரகம் உட்கார்ந்தாலும் முன் ஜென்ம தோஷம் தான் என்பதில் சந்தேகம் இல்லை என்றே சொல்லலாம். ////

ஐந்தில் ச‌னியிருந்தால் தத்துப்புத்திர‌ யோக‌ம் என்றும் உண்டு,அப்ப‌டியிருப்பின் குழ‌ந்தையின் சுய‌ ஜாத‌க‌ அமைப்பிற்குத் த‌குந்த‌வாறு கோவில்க‌ளில் சென்று எழுதி வைப்ப‌து ந‌ல்ல‌து.இல்லையெனில் ந‌ம்மைக்காலி செய்யும்,அல்ல‌து குழ‌ந்தையைக் காலி செய்துவிடும்.குழந்தையைக் காலி செய்தால் இருந்தயிடத்து வேலையைக் கச்சிதமாகச் செய்துவிட்டது என்று கொள்ளலாம்.இதை ந‌டைமுறையிலும் நான் பார்த்திருக்கிறேன். முடிந்த‌வ‌ரைக் குல‌தெய்வ‌ வ‌ழிபாடும், ராமேஸ்வ‌ரம் சென்று அக்னி தீர்த்த‌க்க‌ட‌லில் நீராடி சாமி த‌ரிச‌ன‌ம் செய்வ‌து ந‌ல்ல‌து.அத‌ற்கு அடுத்த‌ப‌டியெனில் காள‌ஹ‌ஸ்தி செல்ல‌லாம்.தென் த‌மிழ‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ராமேஸ்வ‌ரம், வ‌ட‌ த‌மிழ‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு காள‌ஹ‌ஸ்தி. அமாவாசை விர‌த‌ம் இருந்து பித்ருக் க‌ட‌ன் செய்வ‌தும் ந‌ல்ல‌து.

////இந்த ஐந்தாவது வீடு கெட்டது என்றால் அந்த ஆசாமி கொலை செய்யக்கூட தயங்கமாட்டான்.////

ம‌ன‌தைக்குறிக்கும் வீடாக‌ இருப்ப‌தால் அது சுத்த‌மாக‌ இருப்ப‌து உத்த‌ம‌ம்.அவ்வாறு பாவிக‌ள் கூடிவிட்டால் சந்திர‌னாவது(மனோகாரகன்) கெடாம‌ல் இருக்க‌வேண்டும்(வ‌ள‌ர்பிறை சந்திர‌னாக‌ அல்ல‌து பாவிக‌ள் சேர்க்கையின்றி இருப்ப‌து).பாவிகள் வலுத்துவிட்டால் மனம் கெட்டுவிடும் மனிதன் எதற்கும் அஞ்சமாட்டான்.

////செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்தால் நீங்கள் அவனின் நட்பை விட்டு விலகி இருப்பது நன்மையளிக்கும்.////

க‌டின‌மான‌ ஆசாமியாக‌ இருப்பார்க‌ள்,சில‌ரைப்பார்த்துச் சொல்வ‌து போல் கல் நெஞ்ச‌க்கார‌ர்க‌ள்.
இந்த நண்பருக்கு எனது நன்றிகள் இவர் ஒருவர் மட்டும் எழுதி அனுப்பியுள்ளார் வேறு யாரும் பதில் எழுதி அனுப்பவில்லை. இவர் சொல்லுவதை செய்யலாம்.
இதில் ராமேஷ்வரம் நல்ல பலனை தரும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: