Followers

Thursday, October 18, 2012

ஆன்மீக அனுபவங்கள் 3



வணக்கம் நண்பர்களே ஆன்மிக அனுபவங்களில் இந்த சக்தியை நீங்கள் 18 பேருக்கு கொடுத்து அதனை பெரிய அளவில் உற்பத்தி செய்யலாமே என்று நினைத்தால் அந்த 18 பேரும் கண்டிப்பாக அந்த சக்தியை உற்பத்தி செய்யும் திறனை அவர்கள் அடையமாட்டார்கள் ஒருவர் அடைந்தாலே மிகப்பெரிய விஷயமாக இருக்கும். 

என்னுடைய குருநாதர் 18 சக்திகளை பெற்றவர் அவரிடம் நான் மற்றும் இன்னொருவர் பயிற்சி பெற்றோம் என்னுடன் பயின்றவர் ஒரு சில நாட்களிலேயே இதனை விட்டுவிட்டார் அவரால் செய்ய முடியவில்லை என்ன காரணம் என்றும் தெரியவில்லை. ஒரு சிலருக்கு அவர்களின் பூர்வபுண்ணியமும் தடுக்கிறது. எவ்வளவு பாவ பட்ட பூர்வ புண்ணியமாக இருந்தாலும் அதனை சரி செய்து எடுக்கமுடியும் என்ன காரணம் என்று தெரியவில்லை அவர் விட்டுவிட்டார் நானும் அதனைப்பற்றி கேட்டுக்கொள்ளவில்லை.

இதனை வைத்து சந்நியாச பயிற்சி பெறலாமா என்றால் கண்டிப்பாக பெறலாம். நல்ல ஏற்றம் மிக்க சக்தி தான் அது அதனை வைத்து எவ்வளவு பெரிய விஷயத்தையும் செய்ய முடியும். 

நான் பயிற்சி பெறுவதற்க்கு முன்பு கஷ்டங்களால் சில நேரங்களில் சாப்பாட்டிற்க்கு கஷ்டம் இருந்தது ஒரு வேலை சாப்பாடு மட்டுமே என்ற நிலையில் இருந்த காலங்கள் அந்த நேரத்தில் எனக்கு சாப்பிடாததால் எனக்கு நிறைய பிரச்சினை ஏற்பட்டது. உடல் ரீதியான பிரச்சினை. உடல் வேலை செய்யவதற்க்கு தேவையான உணவு கூட சாப்பிடுவதில்லை. அதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. உடம்பு கெட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

நீங்கள் நினைக்கலாம் என்னடா இது சாப்பிட வழி இல்லை என்று கதை விடுகிறார். ஒரு சாதாரண வேலை செய்தால் கூட சாப்பிடலாமே என்று நினைக்க தோன்றும். நான் வேலை செய்ய சென்றாலும் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன் அதனால் வேலை செய்ய மனம் ஈடுபாடு இல்லை. இது எதனால் ஏற்பட்டது என்று தனிபதிவாக எழுதுகிறேன்.

நான் மந்திரபயிற்சி செய்த பிறகு எனக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லை. நான் ஒரு நாள் கூட சாப்பிடாமல் இருந்தால் கூட எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை. உடல் வேறுவிதமாக வேலை செய்கிறது. இதனை நான் சொன்னால் உங்களுக்கு புரியாது அதனை நீங்கள் செய்யும் போது உங்களுக்கு எந்தளவு உண்மையாக இருக்கிறது என்று நினைக்க தோன்றும். இந்த ஆன்மிக அனுபவங்கள் என்னுடைய உண்மையான அனுபவத்தில் இருந்து தான் உங்களுக்கு தருகிறேன். எந்த ஒரு கற்பனையும் இதில் இல்லை.

இது நான் உடல் அல்ல என்ற தத்துவத்தில் இயங்கும். நீங்கள் ஆன்மிகத்தில் பெரிய அளவில் வரவேண்டும் என்றாலும் இதனை பயன்படுத்த முடியும். இதனை எடுத்த பிறகு உங்களுக்கு தேவைகள் அதிகம் இருக்காது உடலில் போடும் உடைகள் கூட நாட்டம் செல்லாது. வெளிஉலகத்திற்க்கு அசிங்கத்தை மறைக்க தான் உடைகள் என்று நினைக்க தோன்றும் அந்தளவுக்கு எளிமையை தரும். 

இப்பொழுது நான் வெளி உலகத்தில் உள்ள ஆட்கள் போல இருக்க வேண்டும் அதே நேரத்தில் ஆன்மிகத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் புத்தி அங்கே தான் செல்ல நினைக்கிறது. ஏன் வெளி உலகத்திற்க்கு வரவேண்டும் என்று நினைக்கலாம். நான் அங்கேயே இருந்தால் இதனைப்பற்றி உங்களுக்கு தெரியவாய்ப்பு குறைவாக இருந்து இருக்கும் அதனால் மக்களோடு மக்களாக வாழவேண்டும். அவர்களை இந்த வழியில் செல்லுங்கள் என்று சொல்ல ஒரு வழி இருக்கிறது இதில் ஒருவர் சென்றாலே அது எனக்கு வெற்றி. 

இந்த சக்தியை வைத்துக்கொண்டு சமுதாயத்திற்க்கு நல்லது செய்யமுடியுமா என்று கேட்டால் கண்டிப்பாக செய்ய முடியும். ஒருவர் இறக்கும் தருவாயில் அதாவது மருத்துவர் கைவிட்ட நோயாளியை கூட காப்பாற்ற முடியும். அது எப்படி?

அந்த நோயாளியின் ஜாதகத்தை பாருங்கள் அவனுக்கு மரணத்தை தருபவர் யார் என்று பாருங்கள்  அந்த கிரகத்தை பார்த்து செய்ய வேண்டியதை செய்தால் நோயாளி எழுந்து உட்காருவான். அது எப்படி என்று உங்களின் குரு அதற்கு வழிகாட்டுவார்.

மந்திர சக்தியால் ஒரு ஊரை காப்பாற்றிய நிகழ்வு அடுத்த ஆன்மிக அனுபவ தொடரில்..

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: