Followers

Monday, October 22, 2012

ஆன்மீக அனுபவங்கள் 9



வணக்கம் நண்பர்களே ஆன்மிக அனுபவங்களுக்கு சில கேள்விகளை நமது நண்பர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் கேள்விகள் மூலம் உங்கள் சந்தேகங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

நான் ஒரு மந்திரத்தை எடுத்து மந்திர உச்சாடணம் செய்து கொண்டு இருக்கிறேன். அதை விட்டு விட்டு அடுத்த மந்திரத்தை எடுத்துக்கொள்ள நினைக்கிறேன். எடுத்து செய்யலாமா?

நல்ல கேள்வியை கேட்டு இருந்தார் அந்த நண்பர் அதற்காக பதில் கொஞ்சம் சொல்லுகிறேன். நீங்கள் ஏன் அந்த மந்திரத்தை விட வேண்டும். அந்த மந்திரத்தில் ஏதாவது நடைபெறவில்லையா அந்த மந்திரங்கள் உங்களின் வாழ்க்கை மாற்றவில்லையா அப்படி என்றால் கண்டிப்பாக அடுத்த மந்திரத்தை எடுக்கலாம். நீங்கள் அடுத்த மந்திரத்தை எடுத்தாலும் அந்த மந்திரம் அது போல தான் இருக்கும். அதன் பிறகு வேறு ஒரு மந்திரத்தை எடுப்பீர்கள். இப்படியே வாழ்நாள் முழுவதும் போய் கொண்டே இருக்கும். எதுவும் நடைபெற போவதில்லை.

குரு நாதர் கிடைக்காமல் செய்வதால் இந்த மாதிரி பிரச்சினை ஏற்படுகிறது. நீங்கள் முதலில் தேடவேண்டியது குருநாதரை தான் தேட வேண்டும். அப்படி தேடும் பட்சத்தில் அவர் உங்களுக்கு கிடைப்பார். தேடினால் தான் கிடைக்கும்.

நீங்கள் அனைவரும் கோவில்களுக்கு செல்லுங்கள் அங்கு உள்ள இறைவனிடம் வேண்டுங்கள் அப்பொழுது அந்த இறைவனின் கருணை பார்வை பட்டு உங்களுக்கு நல்ல குரு அமைவார்.

எந்த கோவில் என்று நான் குறிப்பிட்டு சொல்லவில்லை ஏன் என்றால் எவருக்கு எந்த கோவிலில் ஸ்பார்க் ஆகின்றது என்று தெரியாது எந்த கோவிலும் நடைபெறலாம். அதனால் நீங்கள் கோவிலுக்கு செல்லும் பட்சத்தில் இது நடைபெறும்.

நேற்று ஒரு அம்மா போன் செய்தார்கள் நீங்கள் ஒரு  குருவை ஏற்பாடு செய்து தாருங்கள் எங்களால் இந்த வயதில் போய் தேடமுடியாது என்று கேட்டார் நான் எழுத தான் முடியும் குருவை தேட என்னால் முடியாது.

பெண்களாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் திருமணம் முடித்தவர்கள் என்றால் உங்கள் கணவரை முதலில் கற்றுக்கொள்ள சொல்லுங்கள். அதன் பிறகு அவரை வைத்து அவரின் வழிகாட்டால் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளுவது நன்மை பயக்கும்.

நம் நாட்டு பெண்களை பொறுத்தவரை அவர்களின் கணவன் தான் உலகம். அந்த உலகத்தை வைத்து தான் ஆன்மீக உலகத்தையும் பார்க்க வேண்டும். ஏன் என்றால் நீங்கள் எல்லாம் உங்கள் வீட்டை விட்டு செல்வது என்பது முடியாத காரியம்.

முதலில் உங்கள் கணவரை இதற்கு தயார்படுத்துங்கள் அதன் பிறகு உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு ஒரு எளிதான வழியை சொல்லிவிட்டேன்.

உங்கள் கணவர் மூலம் அடைவது எளிதான காரியமாக உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு இரண்டு வழியில் நன்மையளிக்கும். ஒன்று உங்கள் கணவர் நல்லவராக மாறிவிடுவார் அடுத்தது உங்களுக்கு அந்த சக்தி கிடைத்துவி்டும்.

உங்கள் அருகில் இருந்து தூண்டுதல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே சரியான திசையில் நீங்கள் செல்லமுடியும் ஏன் என்றால் அவ்வளவு கடினமான விஷயங்கள் இதில் இருக்கிறது. உங்கள் கணவர் மட்டுமே உங்கள் அருகில் இருந்து இதை செய்யமுடியும். நான் சொல்லுவது சரி என்று உங்கள் மனதில் படும் என்று நினைக்கிறேன்.

நேற்று ஒரு வீட்டிற்க்கு என்னை அழைத்துக்கொண்டு சென்றார்கள் அந்த வீட்டில் உள்ளவர் என்னிடம் சொன்னார் நான் ஒரு குருநாதரை தேடி அலைந்தேன் எனக்கு குரு அமையவில்லை. நான் ஐயப்பனுக்கு வருட வருடம் மாலை போட்டுக்கொள்வேன் அப்படி செல்லும் போது அந்த ஐயப்பனே எனக்கு ஒரு குருவை காட்டிக்கொடுத்தார் என்று சொன்னார்.

ஐயப்பனிடம் மானசீகமாக கேட்டு இருக்கிறார் அந்த ஐயப்பன் அவருக்கு சரியான குருவை அடையாளம் காட்டி இருக்கிறார். அவருக்கு குரு கொல்லிமலையில் கிடைத்து இருக்கிறார் அவரை வைத்து அவர் ஆன்மிகத்தில் முன்னேற்றம் கண்டு இருக்கிறார். அப்படியே அந்த நல்ல விசயங்களை அவரின் மனைவிக்கும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார் அந்த அம்மாவும் இன்று நல்ல நிலையில் ஆன்மீகத்தில் உள்ளார். இப்படி செய்தும் நீங்கள் குருவை பெறலாம்.

எத்தனையோ வழிகளை உங்களுக்கு சொல்லுகிறேன். உங்களால் அதனை அடைய முடியவில்லை. பார்க்கலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: