Followers

Friday, October 19, 2012

விவாகரத்து ஏற்படாமல் இருக்க பரிகாரம்



வணக்கம் நண்பர்களே விவாகரத்து வரும் கிரக நிலைகளை பார்த்தோம் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் அல்லவா. அதனால் அதற்கு எப்படி பட்ட பரிகாரம் செய்யலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

திருமணங்கள் தோல்வியில் முடியும் நிலை வரும்போது துவண்டுவிடாமல் அதற்கான பரிகாரங்களைக் கவனித்துச் செய்தல் வேண்டும். கணவன் மனைவி விரிசல் என்பது வேறு வகையிலும் விவாகரத்து என்பது வேறு வகையிலும் பார்க்க வேண்டும்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தவர்கள் சந்திப்பது விரிசல் ஒரு ஆண்மகனும் பெண்ணும் வாழ வேண்டிய நல்ல சுக தருணங்களை விட்டு விட்டு காலத்தின் கோளாறால் பிரிவது விவாகரத்து என்னும் சட்ட ரீதியான விபத்து.சட்டத்தினால் தம்பதினர்களை பிரிக்க வைக்க முடியும் அவர்களை சேர்த்து வைக்க சட்டம் வழி செய்வதில்லை. இந்த நேரத்தில் நாம் இறைவனை நாடுவதை தவிர வேறு வழியில்லை.

கூடுமான வரை பெண்கள் கையில் தான் குடும்பம் இருக்கிறது அவர்கள் பொறுமை காத்து செல்ல வேண்டும். உங்கள் கணவர் உங்கள் குழந்தைகளின் ஜாதகத்தை அவ்வப்போது பார்த்துக்கொள்ளுங்கள் அதில் பிரச்சினை வரும் மாதிரி தெரிந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் வழிபாட்டை மேற்க்கொண்டு பிரச்சினையை முதலிலேயே தீர்க்க பாருங்கள்.

உங்கள் கணவர் பிரச்சினை செய்தால் அல்லது வழி தவறி செல்வதும் ஜாதகத்தில் இருக்கும் கிரகநிலைகள் அவ்வாறு வழி தவற செய்கிறது என்று நினைத்துக்கொண்டு அதற்கு என்ன பரிகாரம் செய்தால் அதனில் இருந்து நீங்கள் தப்பிக்க வழி இருக்கிறது. விடுபடலாம் என்று நினையுங்கள் அதை விட்டு விட்டு சண்டை சச்சரவில் இறங்காதீர்கள்.

விவாகரத்து ஏற்படும் நிலை வரும்போது நீங்கள் செய்ய வேண்டியது அர்த்தநாரிஸ்வரர் படத்தை வைத்து பூஜை செய்யுங்கள் அந்த படத்திற்க்கு பூ போட்டு சாம்பிராணி ஊது வைத்தி வைத்து மனதார வேண்டுங்கள் நீங்களும் உங்கள் துணைவரும் கூடிய விரைவில் ஒன்று சேருவீர்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: