Followers

Tuesday, October 23, 2012

சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்



வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.எந்த பண்டிகையும் குடும்பத்தோடு கொண்டாடும் போது மட்டுமே அது சிறக்கும் பல பேர் வேலை காரணமாக வெளியில் இருக்கலாம் அவர்கள் பண்டிகை நடக்கும் நேரத்தில் போன் செய்து உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பேசுங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சந்தோஷம் அடைவார்கள். கொஞ்ச காலம் தான் இந்த பூமியில் வாழ போகிறீர்கள் என்ன தான் பணம் பணம் என்று ஒடினாலும் ஒரு கட்டத்தில் தனித்துவிடபடுவீர் அதனால் அனைவரும் உங்களுக்கு வரும் பண்டிகையை உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடுங்கள். 

இந்த நவராத்திரி விழாவில் நான் எழுதிய மந்திர உச்சாடணம் படித்துவிட்டு மூன்று பேர் அவர்களின் மந்திர உச்சாடணத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்களுக்கு எனது மனபூர்வமான வாழ்த்துக்கள். உங்களின் பின்னால் என்றும் நிற்பேன். 

சில நண்பர்கள் என்னிடம் பேசும் போது உதாரண ஜாதகம் மூலம் விளக்குங்கள் என்று கேட்டு உள்ளார்கள். உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன் நமது பிளாக்கில் வருபவர் எண்ணிக்கை குறைவு ஒரு நாளைக்கு 500 பேர் வரும் போது அவ்வாறு செய்யலாம். இப்பொழுது அடிப்படையான விசயத்தை தெரிந்துகொள்ளுங்கள். நான் சோதிட தொழில் செய்கிறவன் களத்தில் இறங்கி வேலை பார்த்தவன் பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கையை பார்த்து இருக்கிறேன். உதாரண ஜாதகங்கள் விளக்கும் போது உங்களுக்கு எளிதில் புரியும். 

கம்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு ஜாதகங்களை பார்ப்பது எளிது. அனைத்து அட்டவணையும் கம்யூட்டர் சொல்லி கொடுத்துவிடும். கிராமங்களில் சோதிடம் பார்க்கும் போது எந்த கம்யூட்டரை வைத்து பார்ப்பது உன்னுடைய அஷ்டவர்க்க அட்டவணையை கொடு இருக்கின்ற அனைத்து அட்டவணையும் கொடுத்தால் தான் சோதிடம் சொல்லுவேன் என்று சொன்னால் ஓங்கி ஒரு அறையை விட்டு நீ சோதிடம் பார்க்க வந்தியா இல்லை ஏதாவது பிராடு செய்து ஏமாற்ற வந்தியா என்று கேட்பார்கள் இருக்கின்ற ராசி அட்டணையை வைத்து சோதிடத்தை துல்லியமாக சொல்ல வேண்டும். அந்த தொழிலை உங்களுக்கு சொல்லி தருகிறேன். அப்பொழுது எளிதில் விளங்கும்.

நமது பிளாக்கை படித்துவிட்டு ஜாதக கதம்பம் என்று பெயர் வைத்து  விட்டு அனைத்தையும் எழுதுகிறீர்களே என்று சொன்னார்கள். ஒரு நாளைக்கு ஒரு பதிவாது சோதிடம் சம்பந்தப்பட்டது வரும் மற்றது ஆன்மீக விசயங்கள் வரும்.

நிறைய பேர் என்னிடம் ஆன்மீகத்தில் நிறைய எழுதுங்கள் என்று கேட்டுள்ளார்கள். அவர்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறேன். என்னிடம் இருப்பதை உங்களிடம் இறக்கி வைத்தால் தான் என் பைத்தியம் தீரும். என்ன தான் டைப் செய்து எழுதினாலும் ஒரு சதவீதம் மட்டுமே உங்களுக்கு தரமுடிகிறது மீதி என் தலையில் அப்படியே இருக்கிறது.  அதை கொட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். முடியவில்லை. மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: