Followers

Saturday, October 13, 2012

சனிபிரதோஷ தரிசனம்



வணக்கம் நண்பர்களே பிரதோஷ தரிசனம் செய்தீர்களா நான் திருவான்மீயூர் மருந்தீஷ்வரர் ஆலயத்திற்க்கு சென்றேன் தரிசனம் செய்தேன்.  சுமார் 1 1/2 மணி நேரம் நின்று சென்று அந்த நாயகனை தரிசனம் செய்தேன். நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்த போது அந்த தரிசனம்


பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த
காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே
மதி மருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே

அற்புத தரிசனம்


நான் பிரதோஷ வழிபாடு செய்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. இன்று சனிபிரதோஷத்தை விடக்கூடாது என்று நினைத்து கோவில் சென்று தரிசனம் செய்து விட்டேன். 

மருந்தீஷ்வரர் கோவிலுக்கு முன்பு தினமும் செல்வேன் இப்பொழுது கொஞ்சம் வேலை காரணமாக இடைவெளிவிட்டு செல்கிறேன். நீங்கள் சென்னையில் இருந்தால் ஒருமுறை இவரை தரிசனம் செய்துவிடுங்கள். 

இந்த சுகாதாரம் அற்ற உலகத்தில் வசிப்பதால் நமக்கு எவ்வளவோ நோய்கள் வருவதற்க்கு வாய்ப்புகள் இருக்கின்றன இந்த மருந்தீஷ்வரரை தரிசனம் செய்தால் உங்களுக்கு நோய்கள் வராது. இந்த கோவில் பல சிறப்புகளை பெற்றது அதை எழுதவேண்டும் என்றால் நிறைய பதிவுகளில் எழுதவேண்டும். நேரம் வரும்போது எழுதுகிறேன். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



No comments: