Followers

Tuesday, October 16, 2012

மந்திர உச்சாடணம்



வணக்கம் நண்பர்களே இப்பொழுது வளர்பிறை ஆரம்பம் ஆகா போகிறது அதனால் ஒரு தெய்வத்தை உச்சாடணம் செய்வதற்க்கு இது சரியான நேரம். அதனுடன் நவராத்திரி காலமும் இருப்பதால் இது சரியான தருணம் 

நீங்கள் செய்ய வேண்டியது ஏதாவது தேவதையின் மந்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் கீழே விரிப்பின் மேல் அமர்ந்து கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றுங்கள் அதில் நல்லெண்ணெயில் விளக்கு எரிய வேண்டும் ஊதுவத்தி ஏற்றுங்கள் சாம்பிராணியை போட்டு அவல் பொரி ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக வைத்து உங்கள் மந்திரத்தை உரு ஏற்றுங்கள்.108 முறை உரு ஏற்றுங்கள். உரு ஏற்ற ஏதாவது ஒரு ருத்ராட்சா மாலை அல்லது துளசி மாலையை வைத்து  உரு ஏற்றுங்கள்.

உரு ஏற்ற சரியான நேரம் விடியற்காலை 4:30  முதல் 5:30 வரை இதில் தினமும் உங்களால் எழுந்திருக்க முடியவில்லை என்றால் முதல் மூன்று நாட்கள் மட்டும் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு தேவைபட்ட நேரத்தில் செய்யலாம். நீங்கள் செய்வது மூன்று நாட்களுக்கு பிறகு ஒரே நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

காலையில் செய்வது உத்தமம். காலையில் நீங்கள் செய்யும் போது நீங்கள் தண்ணீர் கூட குடிக்க கூடாது. பூஜை செய்த பிறகு தான் நீங்கள் சாப்பிட வேண்டும். 21 நாட்களுக்கு நீங்கள் அசைவம் சாப்பிடகூடாது. 108 நாட்களும் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. திருமணம் ஆனாவர்கள் என்றால் 21 நாட்கள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள கூடாது.

பெண்களாக இருந்தால் மாதவிலக்கு காலங்களில் மூன்று நாட்கள் செய்ய வேண்டாம். அதன் பிறகு செய்யுங்கள்..

எந்த மந்திரத்திற்க்கும் நீங்கள் தீட்சை வாங்கிக்கொண்டு செய்வது நல்லது. உங்கள் ஊரில் நல்ல ஆன்மிகவாதிகள் வயதானவராக இருந்தால் அவரிடம் தீட்சை வாங்கிகொண்டு செய்யுங்கள்.

உங்கள் ஊரில் ஆன்மிகவாதிகள் இருந்தாலும் அவர்கள் சொல்லும் வழியில் செய்தாலும் நல்லதே. 

சிவன், பெருமாளை தவிர்த்து வேறு தெய்வங்களை எடுத்து செய்யுங்கள். உங்களுக்கு குலதெய்வமாக இவர்கள் இருக்கும் பட்சத்தில் இவர்களை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

108 நாட்கள் நீங்கள் செய்தால் கண்டிப்பாக நீங்கள் நல்ல அனுபவத்தை உணரலாம்.மந்திரங்களை நீங்கள் தான் எடுக்க வேண்டும். வழிமுறையை நான் சொல்லி தருகிறேன்.

நல்ல தருணம் தவறவிடவேண்டாம்.

மேலும் தகவலுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

perumal shivan said...

"சிவன், பெருமாளை தவிர்த்து வேறு தெய்வங்களை எடுத்து செய்யுங்கள். உங்களுக்கு குலதெய்வமாக இவர்கள் இருக்கும் பட்சத்தில் இவர்களை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்."
ean? sivan perumalai thavirkka vendum ? enna karanam sollamudiyuma pls!