Followers

Thursday, October 11, 2012

ஒரு கேள்வி




வணக்கம் நண்பர்களே எத்தனையோ பதிவுகளில் மந்திரங்கள், மாந்திரீகம் பயிற்சி என்று எழுதுகிறார்கள் நம்ம பதிவை அவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது மலைக்கும் மடுகுக்கும் உள்ள வித்தியாசம் நம்ம பதிவுகளில் ஒன்றுமே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

நான் மந்திரஅனுபங்கள் எழுதிய பிறகு வந்த போன்கால்கள் எல்லைற்றவை எந்த போனை எடுத்தாலும் எனக்கு கற்றுதாருங்கள் அல்லது இதைப்பற்றி சொல்லுங்கள் இது பரவாயில்லை தொலைக்காட்சியில் பணிபுரிபவர்கள் வந்து நீங்கள் பார்த்த சித்தர்களைப்பற்றி சொல்லுங்கள் என்று அவர்கள் வியாபாரம் செய்ய பல தொல்லைகளை அனுபவித்தேன் இப்பொழுது சரியாகிவிட்டது.

உண்மையில் நானே இன்னும் இதனை வைத்து சம்பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்குள் என்னை வைத்து சம்பாதிக்க நினைக்கிறார்கள் இதில் இருப்பவர்கள் அனைவரும் பெயர் எடுக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கமாட்டார்கள் அவர்கள் அனைவரும் இந்த உலகத்தில் இருந்தாலும் உலகம் அவர்களை பாதிக்கசெய்யாது. விளம்பரங்களை விரும்பமாட்டார்கள்.

பெரிய விசயம் என்ன என்றால் மாந்திரீகம் செய்பவர்கள் எல்லாம் வந்து பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். நாங்கள் அதனை நிறைவேற்றி வைக்கிறோம் என்று சொன்னார்கள்.

நான் பணத்தை விரும்பமாட்டேன் என்று தெரிந்துக்கொண்டு நான் ஆன்மிகவாதி மக்களுக்கு சேவை செய்கிறேன் என்னால் மக்களை காப்பாற்றமுடியும். என்னை நீங்கள் உங்கள் மாணவராக ஏற்றுக்கொண்டு எனக்கு சொல்லி கொடுத்தால் நான் சேவை செய்வேன் என்று கேட்டார்கள் மந்திரங்கள் மூலம் என்ன சேவை செய்யபோகிறார்கள் என்று தெரியவில்லை. 

எனக்கு இப்பொழுது பணதேவைகள் இருக்கிறது. எனக்கும் பணம் தேவைதான் ஆனால் இதனை வைத்து பணம் சம்பாதிக்க நான் விரும்பவில்லை.எனக்கு சித்தர்கள் தொடர்பு எல்லாம் கிடையாது. சித்தர்கள் இருந்தால் நீங்கள் எனக்கும் காட்டுங்கள். எனக்கு ஒரு குரு இருக்கிறார் அவர் தான் என்னுடைய உலகம் அவர் சித்தர் கிடையாது அவரிடம் கற்றதை உங்களுக்கு சொல்லிக்கொடுத்து கொண்டு இருக்கிறேன்.

ஆதிசங்கரரிடம் ஒருவர் வந்து இதுதான் மோட்சத்திற்க்கு போகும் மந்திரம் இதை சொன்னால் நீ மோட்சத்திற்க்கு செல்லலாம் ஆனால் இதனை யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி அந்த மந்திரத்தை சொன்னாராம். 

விடியற்காலையில் ஆதிசங்கரர் ஸ்ரீரங்கம் கோவிலின் கோபுரத்தில் மீது ஏறி அந்த மந்திரத்தை உறக்க சொல்லி மக்களே இது தான் மோட்சத்திற்க்கு செல்லும் மந்திரம் எல்லாரும் இதனை சொல்லுங்கள் என்றாராம் மந்திரத்தை சொல்லி கொடுத்தவர் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டாராம் அதற்கு ஆதிசங்கரர் மக்களுக்கு பயன்படாதது அனைத்தும் வீண் தான் மக்களுக்கு பயன்பட்டால் தான் அது உண்மையானது. அடுத்தவருக்கு சொல்லிகொடுக்கலாம் ஆனால் அன்று இருந்த மக்கள் வேறு இன்று இருக்கும் மக்களின் மனநிலை வேறு. 

நல்ல உள்ளங்கள் தொடர்ந்து என்னை கேட்டுக்கொண்டே இருப்பதால் இதை எழுதலாம் என்று நினைக்கிறேன். எனது பல பதிவுகளில் படிப்பவர்கள் என்னை நேரில் சந்தித்து என்னுடன் நண்பராக இருப்பவர்கள் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். 

நீங்கள் என்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் மந்திர அனுபவங்களை எழுதுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: