Followers

Tuesday, November 20, 2012

ஆன்மீக அனுபவங்கள் 25



வணக்கம் நண்பர்களே !
                         
சோதிடம் வழியாக இப்பதிவில் ஆன்மீக அனுபவங்களை பார்க்கலாம்.

பொதுவாக எந்த ஒரு ஜாதகத்திற்க்கும் லக்கனாதிபதி என்பவர் முக்கியமாகபடுகிறார் அவர் நல்ல நிலையில் இருக்கும் போது அனைத்தும் கிடைத்து விடும் அப்படி அவர் நல்ல நிலையில் இல்லை என்றால் அவர்கள் போராட்டமான வாழ்க்கை வாழவேண்டிவரும்.

நாம் பார்க்கபோவது லக்கனாதிபதி எட்டில் இருந்தால் ஆன்மீக வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்க போகிறோம். சாதாரண வாழ்க்கைக்கு லக்கனாதிபதி நல்ல இருக்க வேண்டும் ஆனால் ஆன்மீக வாழ்க்கைக்கு லக்கனாதிபதி கெட்டு இருக்க வேண்டும். லக்கனாதிபதி எட்டில் இருப்பவர்கள் ஆன்மீக வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்திற்க்கு செல்வார்கள்.

நான் பல சந்தியாசிகள் மற்றும் மகான்களின் ஜாதங்களை ஆராய்ந்து பார்க்கும் போது அனைவருக்கும் லக்கனாதிபதி எட்டாவது வீட்டில் அமர்ந்து இருப்பதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். 

எட்டாவது வீடு என்பது நமக்கு வரும் மரணத்தை சுட்டிக்காட்டும் இடம் என்பதால் அதில் லக்கானதிபதி அமரும்போது அவர்கள் மரணத்தை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அதனால் அவர்கள் இந்த வழியில் சென்று மிக உயர்நத நிலையை அடைக்கிறார்கள். 

எட்டாவது வீடு என்பது மறைப்பொருளைப்பற்றி தெரிவிக்கும் இடம் என்பதால் அவ்வாறு நிகழ காரணமாக இருக்கிறது. யாருக்கும் தெரியாததைப்பற்றி இவர்கள் தன் ஆராட்சியால் கண்டுக்கொள்கிறார்கள்.

இவர்கள் சொல்லும் ஆன்மீக வழி 100 சதவீதம் உண்மையாக இருக்கும் நான் கூட பல சந்சியாசிகளின் ஜாதகங்களை பார்த்து இருக்கிறேன். ஓஷோவின் ஜாதகத்தில் கூட லக்கினாதிபதி எட்டில் அமர்நது இருக்கிறார்.

சில சாதுக்கள் சுடுகாட்டில் நின்று கொண்டு தவம் செய்வார்கள் அவர்களின் ஜாதங்களிலும் லக்கனாதிபதி எட்டில் சம்பந்தபட்டு உள்ளது. இதை நான் பல பேர்களி்ன் ஜாதங்களை கேட்டு அறிந்துக்கொண்டேன்.

லக்கனாதிபதி எட்டில் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு சுடுகாடு சம்பந்தம் இருக்கும். என்ன லக்கனாதிபதி எட்டில் இருப்பவர்களுக்கு அவர்களின் முகத்தில் பொழிவு இருக்காது ஏதோ சோகத்தில் இருப்பவர்கள் போல் இருப்பார்கள் அவர்கள் ஆன்மீகவாழ்க்கைக்கு வந்த பிறகு அப்படி ஒரு கடவுள் தன்மையை அவர்களின் முகத்தில் நீங்கள் பார்க்கலாம்.

நண்பர்களே லக்கனாதிபதி எட்டில் இருப்பவர்கள் வாழ்க்கையில் சிறு கஷ்டம் ஏற்பட்டாலும் அவர்கள் ஆன்மீகத்தில் சொர்க்கத்தை அனுபவிக்க பிறந்தவர்கள். உங்களின் வாழ்க்கையை எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.

நீங்களே நான் சொன்னதை ஆராய்ச்சி செய்து பார்த்தால் தெரியும். லக்கனாதிபதி எட்டில் இருப்பவர்கள் அடுத்தவருக்கு ஆனந்தத்தை தருவதற்க்கு படைக்கப்பட்டவர்கள். இவ்வளவு ஏன் லக்கனாதிபதி எட்டில் இருப்பவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள். ஏன் சொல்லுகிறேன் தெரியுமா உண்மையான ஆன்மீகம் என்ன என்று இவர்களுக்கு தான் தெரியும்.

நன்றி நண்பர்களே


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



No comments: