Followers

Thursday, November 22, 2012

ஆன்மீக அனுபவங்கள் 26


வணக்கம் நண்பர்களே!
                                        ஆன்மீக விசயமாக வெளியூரில் இருக்கிறேன் இங்கு ஏதோ ஒரு நெட் சென்டரில் இருந்து உங்களை தொடர்புக்கொள்கிறேன். உங்களை இப்பொழுது ஒரு நாள் கூட ஏமாற்றகூடாது என்று நினைக்கிறேன் அதனால் வேலையின் இடையில் தேடி இந்த இணைப்பை பெற்றேன் கூடிய விரைவில் சென்னை வந்துவிடுவேன் அங்கு வந்து பூர்வபுண்ணியத்தைப்பற்றி எழுதுகிறேன் அதுவரை பொறுமை காக்கவேண்டுகிறேன்.

நான் வெளியூரில் இருந்தாலும் தொடர்ந்து போன்கால்கள் வந்து கொண்டு இருக்குகிறது. அவர்களில் மந்திரத்தைப் பற்றி சில பேர் கேட்டார்கள் அதற்காக இந்த அவசர பதிவு நீங்கள் மந்திரங்கள் கற்றுக்கொள்ளுவது தவறு இல்லை ஆனால் நீங்கள் அனைவரிடமும் பாசத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் இதை கற்பதற்க்கு நீங்கள் பல வழிகளிலும் முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறீர்கள் இதில் பேசிய நபர்கள் என்னிடம் சொல்லும் போது அனைத்து நபர்களும் ஏதோ ஒரு பயங்கரசக்தியுள்ள அம்மனை எடுக்கிறேன் என்று சொன்னார்கள் இது தவறான தேர்வு என்று தான் சொல்ல வேண்டும் ஏன் என்றால் நீ்ங்கள் குடும்பவாழ்க்கை வாழ்பவர்கள் இதனை எடுத்துக்கொண்டு உங்களால் குடும்பத்தை நடத்தமுடியாது அதை போல் நீங்கள் சொல்லும் குருக்கள் எல்லாம் எந்தளவுக்கு உங்களுக்கு உதவி செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

என்னை பொருத்தவரை நீங்கள் என்ன தான் திட்டினாலும் எனக்கு கோபம் வராது என்னிடம் அன்பை மட்டும் தான் நீங்கள் பார்க்கலாம் அதனால் என்னிடம் கற்பவர்கள் எத்தனை கோபபட்டாலும் அவர்களை தன் வசம் ஆக்கி அவர்களுக்கு நல்ல வழியை காட்டிவிடுவேன் ஆனால் நீங்கள் சொல்லும் குருக்கள் எந்தளவு அன்பை செலுத்துவார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நீங்கள் அனைவரிடமும் அன்பு செலுத்தமுடியும் என்றால் எங்கு வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள்.

இதனை கற்பதற்க்கு முதல் தகுதி அனைவரிடமும் அன்பு செலுத்தவேண்டும் இந்த ஒன்று மட்டும் அடிப்படை தகுதி உங்களுக்கு இருந்தால் நீங்கள் எந்த தெய்வத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த செயல் அனைத்தும் குருவிடம் தான் இருக்கிறது ஏதாவது காசு வாங்கிக்கொண்டு செய்பவர்கள் கண்டிப்பாக உங்களை காப்பாற்ற மாட்டார்கள் என்பதை இப்பதிவில் வழியாக சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.

நீங்கள் கோபபட்டு குரு அன்பு வடிவமாக இருந்தால் கண்டிப்பாக உங்களை காப்பாற்றுவார். இதைப்பற்றி சென்னை திரும்பியதும் விளக்கமாக பதிவை போடுகிறேன். நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: