Followers

Monday, November 26, 2012

ஆன்மீக அனுபவங்கள் 28



வணக்கம் நண்பர்களே !
                         என்னுடன் பேசிய நண்பர்கள் ஒரு மந்திரத்தை தவறு என்று சொல்லுகிறீர்கள் நீங்கள் அதனை செய்து பார்த்துவிட்டு தானே நீங்கள் சொல்ல வேண்டும் நீங்கள் அதனை செய்து பார்த்தீர்களா என்று என்னிடம் கேட்டார்கள்.

இவர் கேட்பதில் இருந்து தெரிகிறது. 108 நாட்கள் ஒரு மந்திரத்தை சொல்லுவது அடுத்த 108 நாட்கள் அடுத்த மந்திரத்தை எடுத்து சொல்லுவது இப்படியே போய்கொண்டு இருக்கிறது இவர்களின் மந்திர வாழ்க்கை. நான் சொல்லுவது என்ன என்றால் ஒரு மந்திரத்தை எடுத்துக்கொண்டு 108 நாட்கள் செய்தால் அந்த மந்திரத்தின் துணைக்கொண்டு நீங்கள் செய்ய சொல்லுவதை அது செய்யவேண்டும் அப்பொழுது தான் அது மந்திரபயிற்சி அப்படி இல்லை என்றால்அது பொய். இதனை செய்வதற்க்கு பதிலாக நீங்கள் சும்மா இருக்கலாம்.

நான் என்னுடைய சீடனுக்கு இதனை கற்று தருவதாக இருந்தால் ஒரு மந்திரத்தை மட்டுமே உபதேசம் செய்வேன் அந்த மந்திரசக்தியை வைத்துக்கொண்டு அனைத்து தெய்வத்தையும் எடுக்க முடியும். அந்த தெய்வங்கள் மூலம் வேலையை வாங்கவும் முடியும். சும்மா மந்திரங்கள் என்று சொல்லிக்கொண்டு இருப்பதில்லை. செயலில் இறங்கி அதனை செய்து முடித்தால் தான் மந்திரங்கள் உரு ஏறி இருக்கிறது என்று தெரியவரும். 

நீங்கள் நினைப்பது போல் சும்மா அந்த மந்திரத்தை செய்து பாருங்கள் இந்த மந்திரத்தை செய்து பாருங்கள் என்று சொல்லுவது இதனைப்பற்றி புரியாமல் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒருவருக்கு ஒரு தெய்வத்தை எடுத்தாலே போதுமானது. 

அதனை வைத்துக்கொண்டு அனைத்தையும் நீங்கள் செய்து முடித்துவிடலாம் என்பதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு நல்ல ஆன்மீகவாதியாக இருந்தால் நீங்கள் அவரை பார்க்க சென்றால் நீங்கள் ஆன்மீகத்தில் உயர்ந்தவரா என்று அவர்களால் எளிதில் கண்டுபிடிக்கமுடியும். என்னிடம் வருபவர்கள் ஒரு மந்திரத்தை ஆறு மாதம் காலம் செய்தவர்கள் வருகிறார்கள் அவர்களிடம் அதற்க்கான ஒரு துளி முன்னேற்றம் கூட அவர்களிடம் இல்லை. 

நீங்கள் உங்கள் ஊரில் இருக்கும் ஆன்மீகவாதிகளிடம் சென்று கேட்டுப்பாருங்கள் இது உண்மை என்று தெரியவரும். என்னை நேரில் பார்க்கும் போது உங்களால் ஒன்றும் கண்டுபிடிக்கமுடியாது. என்னை நேரில் பார்ப்பவர்கள் ஆன்மீகத்தில் உள்ளவர்களிடம் இருக்கும் ஒரு அடையாளம் கூட இல்லை என்று தான் சொல்லுவார்கள் இதையே ஆன்மீகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் பார்த்தால் என்னை எளிதி்ல் அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள். 

நான் ஏன் இதனை  சொல்லுகிறேன் என்றால் நீங்கள் மந்திர உரு ஏற்றினால் உங்களிடத்தில் அந்த தெய்வம் இருப்பதை ஆன்மீகத்தில் இருப்பவர் அடையாளம் கண்டுபிடிக்கமுடியும். வருபவன் சாதாரணமான ஆள் கிடையாது என்று தெரியவேண்டும் அப்பொழுது தான் அது மந்திரப்பயிற்சி. இந்த ஆன்மீக அனுபவத்தில் நான் எழுதுவது மந்திர பயிற்சியில் ஒரு சதவீதம் தான் எழுதுகிறேன். சோதிடம் ஒரு கடல் என்றால் மந்திரங்கள் ஒரு கடல்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


2 comments:

sri said...

வணக்கம் ஐயா, இன்று தான் முதன் முதல உங்கள் தளத்தை பார்த்தேன். இத்தனை நாள் என் கண்ணில் இப்படி ஒரு தளம் இருப்பது தெரியாமல் போய் விட்டதே என்று கவலை. இறைவன் இன்றாவது காட்டியதில் மிகவும் சந்தோஷம். விரைவில் முழு ஆக்கங்களும் படித்து முடிப்பேன். எல்லாமே அற்புதம்

rajeshsubbu said...

sri
வணக்கம் நண்பரே தங்கள் வருகைக்கு நன்றி உங்கள் நண்பர்களுக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்