Followers

Friday, November 2, 2012

சோதிட அனுபவம்



வணக்கம் நண்பர்களே சோதிட அனுபவம் என்ற தலைப்பில் ஒரு ஜாதகத்தை கொடுத்து அதற்கு பலனை தாருங்கள் என்று கேட்டு இருந்தேன். பல நண்பர்கள் எனக்கு பலனை எழுதி அனுப்பினார்கள் அவர்களுக்கு நன்றி.

இந்த ஜாதகம் ஒரு பிரபலமானவரின் ஜாதகம். பிரபலமானவர்களின் ஜாதகத்தை எழுதுவதில்லை என்று ஏற்கனவே சொல்லிருந்தேன் ஆனால் காலத்தின் தேவை கருதி எழுத வேண்டியதாகிவிட்டது பலனை எழுதியிருக்கிறேன் படித்து பாருங்கள்.

இந்த ஜாதகர் ஒரு ஆண். நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். ராகு சம்பந்தப்பட்டாலே அவர்கள் தன் மதத்தின் மீது பற்றுதல் வைப்பார்கள். நாம் என்ன நினைத்திருப்போம் என்றால் ராகு என்றால் பிறர் மதத்தை தானே குறிக்கும் என்று பார்ப்போம் ஆனால் நட்சத்திராதிபதியாக ராகு வந்தால் அவர்கள் மதத்தின் மீது அளவுகடந்த பற்றுதல் வைப்பார்கள். பல பேரை இப்படி நான் பார்த்திருக்கிறேன்.

லக்கனம் ரிஷபம். ரிஷபம் லக்கனத்தின் அதிபதி சுக்கிரன் அவர் பத்தாவது வீட்டிற்க்கு சென்று அமர்ந்துள்ளார். சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் இருக்கிறார். சதயமும் ராகுவின் நட்சத்திரம் தான். லக்கனத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளது. செவ்வாய் கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கிறது. கார்த்திகை சூரியனின் நட்சத்திரம். ராசியாக மிதுனம் வருகிறது.

நட்சத்திர பலன் 

இவர் மாந்தீரிக விஷயங்கள் மதங்களின் மீது ஈடுபாடு இருக்கும். நல்ல பொறுமை இருக்கும் அதே நேரத்தில் யாருக்கும் பயப்படாத வீரமும் இருக்கும். எதைப்பற்றியாவது கவலை இருந்துக்கொண்டே இருக்கும். முன் ஏற்பாடு இருக்கும் திட்டமிடுதலில் வல்லவர்.

திதி பலன் 

பொதுவாக சோதிடர்கள் இதை சொல்லுவதில்லை. இதை பார்த்தாலும் ஒரளவு பலன் சரியாக வரும். இவர் பிறந்தது நவமி திதி. இந்த திதியில் பிறந்ததால் இவர் பிறரை வசிகரிக்கும் தன்மை உடையவர். சந்தர்ப்ப சூழ்நிலையை தனக்காக பயன்படுத்துபவர். அடுத்தவர்களின் உடைமையை கைப்பற்றுவது போன்ற செயல்களை செய்வார். 

ராசி பலன்

இவர் பிறந்தது மிதுன ராசி இந்த ராசி ஒரு இரட்டை தன்மையுடைய ராசி. இவர் எந்த செயலிலும் இரட்டை தன்மை நிலைபாடு கொண்டவர். எந்த சூழ்நிலையும் தன்னுடையதாக மாற்றிவிடுவார். நரிபோல் வேஷம் போட்டு எதிரியை கலங்கவைப்பார். இவரும் அப்படி தான் செய்தார்.

லக்கன பலன் 

இவரின் லக்கனம் ரிஷபம். இவரின் லக்கினத்தின் குணம் மாடு மாதிரி பிறர்காக உழைப்பது அதுபோல தான் இவர் இருந்தார். தன் இன மக்களுக்காக உழைப்பேன் என்று உழைத்தவர். பெண்கள் வழியில் முன்னேற்றம் காணமுடியும். இவருக்கு பல மனைவிகள் உண்டு அவர்கள் வழியில் இவருக்கு அனைத்தும் அமைந்தது. 

பல தொழில் அதிபர்களின் நட்பு இவருக்கு கிடைக்கும் அது போலவே இவருக்கும் கிடைத்தது. அவர்கள் வழியில் மிகப்பெரிய கட்டமைப்பை இவர் ஏற்படுத்திருந்தார். இவரின் லக்கனாதிபதி பத்தாவது வீட்டில் அமர்ந்துள்ளது அதுவும் கும்ப ராசியாக இருக்கிறது. எதிரிகளை எதிர்க்கும் ஆற்றலை இந்த கும்பராசியில் அமர்நத லக்கினாதிபதி கொடுத்தார். இவர் உலகத்தில் உள்ள மிகப்பெரிய நாடுகளை கூட கண்ணில் விரல்விட்டு ஆட்டினார் என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு அடுத்த நாட்டிற்க்கு குடைச்சல் கொடுக்க வைத்தது கும்பத்தில் அமர்ந்த லக்கானதிபதியால் உருவானது.

லக்கனத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளது லக்கனத்தில் செவ்வாய் இருந்தால் பாதுகாப்பு துறையில் இருக்க வாய்ப்புள்ளது. ஏழில் இருந்து சனி லக்கனத்தை பார்ப்பதால் இவர் போராளியாக மாறினார். இவருக்கு என்று தனி படையே வைத்து இருந்தார்.

செவ்வாய் சனி பார்வை இவரை உலகமே பார்த்து பயப்படும் அளவுக்கு மாற்றியது. இவரின் திட்டங்கள் எல்லாம் அப்பாவி மக்களும் கொல்லப்பட்டார்கள். பல பேரின் உயிரை காவு வாங்கியதற்க்கு இந்த இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டது தான் அப்படி செய்ய செய்தது. பொதுவாக செவ்வாய் சனி கூட்டணி எந்த ஜாதகத்தில் இருந்தாலும் அவர்கள் வில்லங்ககாரர்களாக இருப்பார்கள்.

லக்கனத்தை குருவும் பார்க்கிறது ஆனால் அந்த குரு வக்கிரமாக இருப்பதால் அனைத்து திட்டமும் வக்கிரத்தை வெளிப்படுத்துவதாகவோ இருந்தது.

இரண்டாவது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். அதன் அதிபதி பத்தாவது வீட்டில் அமர்நதுள்ளார். சூரியன் சுக்கிரனோடு அமர்ந்துள்ளார். இவருக்கு பணம் வந்துக்கொண்டே இருந்தது இவருக்கு பல அரசாங்க பணமும் கிடைத்தது அது சூரியனோடு இருப்பதால் அவ்வாறு நடந்தது. அரசாங்கம் வெளியில் தெரியாமல் கொடுத்தற்க்கு காரணம் சனியின் வீட்டில் இரண்டாவது வீட்டு அதிபதி அமர்ந்ததால் அவ்வாறு நடந்திருக்க வேண்டும்.

இரண்டாம் வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ள காரணத்தால் இவருக்கு பல மனைவிகள் அமைந்தது. ஒரு மனைவிக்கு மேல் அமைவது எல்லாம் இரண்டாவது வீட்டின் துணைக்கொண்டு பார்க்க வேண்டும். இவர்க்கு பல மனைவிகள் அமைந்தது.

மூன்றாவது வீட்டு அதிபதி சந்திரன் இரண்டாவது வீட்டில் அமர்ந்தார். இவருக்கு நல்ல தைரியும் இருந்தது. சந்திரனாக இருந் எப்படி தைரியம் என்று நீங்கள் கேட்கலாம் இவரின் தைரியம் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார் ஆனால் அனைத்தும் படு ரகசியமாக செய்வார். இவரின் திட்டம் வெற்றி அடைந்தால் அதில் பல உயிர்கள் கொல்லப்பட்டு இருக்கும்.

நான்காவது வீடாக சிம்மராசி அமைந்துள்ளது. இளமையில் அரண்மணை போல் வாழ்ந்தாலும் பிறகு ஒடி ஒளிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. சுக வீட்டில் மாந்தி அமர்ந்துள்ளது அதை சனி பார்க்கிறது. சனி பார்க்கும் வீடு சிம்மம். சுகம் கெட்டது.

குரு வக்கிரம் அடைந்தாலும் இவருக்கு பல குழந்தைகள் உள்ளன அந்த வீட்டின் அதிபதி நல்ல நிலையில் இருக்கிறார். 

ஆறாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் அமர்ந்துள்ளார். ஆறாவது வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். இவருக்கு வில்லனாக பல அரசாங்கள் வந்ததற்க்கு காரணம் சூரியன் ஆறாவது வீட்டு அதிபதியுடன் சேர்நது அமர்ந்ததால் தான். ஆறில் அமர்ந்த ராகு இவரை பல வழியிலும் காப்பாற்றியது. எவ்வளவு நாட்கள் தான் இவர் காப்பாற்றுவது ஒரு நாள் போட்ட தள்ள வேண்டிய நேரம் வந்தால் கண்டிப்பாக அது நடந்துதான் ஆகா வேண்டும் அவ்வாறே நடந்தது. ஆறாவது வீட்டு அதிபதியால் கிட்னி பிரச்சினை ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

ஏழாவது வீட்டு அதிபதி லக்கனத்தில் அமர்ந்துள்ளதால் தெரிந்தவரை மணந்தார். ஏழில் இருக்கும் சனியால் பல துணையை வைத்திருந்தார். இவரின் தொடர்புகளை காட்டும் இடம் ஏழாவது வீடாக இருப்பதால் இவரிடம் தொடர்பு வைத்திருந்தவர்கள் அனைவரும் வில்லங்கமானவர்கள் தான். 

ஆயுள் ஸ்தானத்தை காட்டும் இடம் எட்டாவது இடம் என்பதால் எட்டாவது வீடாக தனசு ராசி வருகிறது அதன் அதிபதி வக்கிரமாகி ஐந்தில் அமர்ந்துள்ளார். இவர் இப்பொழுது உயிரோடு இல்லை. உடம்பை காட்டும் இடம் லக்கனம் அதில் செவ்வாய் அமர்நது சனியின் பார்வை இருந்ததால் இவர் கொல்லப்பட்டார்.

பாக்கியாதிபதி ஏழில் அமர்ந்துள்ளார். நல்ல பாக்கியம் கிடைத்தும் அதை இவர் அந்த இனமக்களுக்காக பயன்படுத்தினார். மக்களுக்காக போராடுவதை காட்டும் கிரகம் சனி. இவரின் பாக்கியாதிபதி சனி அதனால் தன் காலத்தை மக்களுக்காக போராடினார். 

பத்தாவது வீட்டில் மூன்று கிரகங்கள் அமர்ந்ததால் அதுவும் கும்பராசி என்பதால் அது சனியின் வீடு என்பதால் நன்றாக நல்ல தொழில் செய்யும் அமைப்பு இவருக்கு இருந்தது. தொழிலும் அசுர வளர்ச்சி கண்டது.

லாபஸ்தான அதிபதி குரு ஐந்தில் வக்கிரமாக அமர்நதுள்ளார்  நல்ல லாபத்தை பார்த்தார். கோடிக்கணக்கான பணத்தை லாபமாக பெற்றார். தனது ஆசைகளை பூர்த்தி செய்யும் வீடு என்பதால் அந்த வீட்டின் அதிபதி குரு என்பதால் அதை பூர்த்தி செய்யமுடியவில்லை. வக்கிர குருவால் பூர்த்தி செய்யமுடியவில்லை.

பனிரெண்டில் கேது அமர்ந்துள்ளதால் இவர் தன்னுடைய ஆன்மீகத்திற்க்காக அனைத்தையும் செலவு செய்தார். கேது இருந்தால் மோட்சத்தை கொடுக்கும் என்பார்கள். மோட்சம் கிடைத்திருக்காது ஒருவர் கொலை செய்யப்பட்டால் அவருக்கு மோட்சம் கிடைக்காது.

இவர் கொல்லப்பட்டது புதன் தசாவில் சுயபுத்தியில் கொல்லப்பட்டார். மிதுன ராசியின் அதிபதி புதன் அந்த அதிபதி அவரை கொல்லாது என்று படித்து இருப்போம் ஆனால் இவரை கொன்று இருக்கிறது. புதன் தசாவில் புதன் புத்தி முடியும் தருவாயில் இது நடந்து இருக்கிறது அந்த புத்தி முடிய வெறும் எட்டு நாட்கள் மடடுமே உள்ளது நான் நினைக்கிறேன் கேது புத்தி அப்பொழுதே வந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த ஜாதகத்தை பொருத்தவரை ஜாதகத்தை அடிப்படையாக கொண்டு பலனை சொல்லியுள்ளேன் இதை கணித்து வெறும் ஐந்து சதவீத பலனை சொல்லியுள்ளேன். இவர் யார் என்றும் நான் சொல்லவில்லை விருப்பம் உள்ளவர்கள் போனில் கேட்டுக்கொள்ளலாம். முழுவதும் சொல்லிவிட கூடாது என்பதால் இதை மறைத்துள்ளேன். நான் யார் என்று சொன்னால் அது பல பிரச்சினைகளை உருவாக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

MANI said...

/////மிதுன ராசியின் அதிபதி புதன் அந்த அதிபதி அவரை கொல்லாது என்று படித்து இருப்போம் ஆனால் இவரை கொன்று இருக்கிறது.//////

அதான் ஏன்? எப்படி? என்று சொல்லியிருக்கலாமே ஒரு வேளை ராகு சாரத்தில் புதன் இருந்ததால் ராகு 6ல் உள்ளதால் கொடூரமான மரணத்தை லக்னாதிபதியான புதனே தரும்படி ஆனதோ?

இங்குதான் ராஜேஷ் பல ஜோதிடர்கள் தடுமாறிவிடுகிறார்கள். எந்த கிரகம் தீமையை செய்யாது என்று நினைக்கிறோமோ அது கொன்றுவிடுகிறது.

எது நன்மையை தரும் என்று எதிர்பார்க்கிறோமோ அது அம்போ என்று விட்டுவிடுகிறது.

வரும்.............. ஆனா வராது........ கதைதான் போல :)