Followers

Sunday, November 18, 2012

தசா என்ன செய்யும் ?


வணக்கம் நண்பர்களே !
                                      ஒரு தசா எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதை என் வாழ்வில் நடந்தை வைத்து சொல்லியுள்ளேன் படித்து பாருங்கள்.

நான் என்ன படித்து இருக்கிறேன் என்று உங்களுக்கு எல்லாருக்கும் நன்றாக தெரியும். எனக்கு ராகு தசா ஆரம்பித்த நாட்கள் இருந்து எனக்கு கம்யூட்டர் மீது ஒரு தீராத காதல் என்றே சொல்ல வேண்டும். அந்தளவுக்கு ஒரு வெறிதனமாக அனைத்தையும் கற்க வேண்டும் என்று எண்ணினேன். அதை போல் நானாகவே அதனை கற்றேன்.

எனது நண்பர் ஒருவர் அயல்நாட்டில் இருக்கிறார் அவர் அங்கு மென்பொருள் கம்பெனியை தனியாக நடத்திவந்தார் அவர் என்னை தொடர்பு கொண்டு அங்கு உள்ள மென்பொருளை செய்து தரச்சொல்லி கேட்டார் அதற்காக ஒத்துக்கொண்டு சென்னையில் பல கணிணி நண்பர்களை சேர்த்துக்கொண்டு இங்கு இருந்து செய்து அனுப்பினேன். அத்தனை மென்பொருள்களும் மிக உயர்ந்த கம்பெனிகளுக்கு சப்ளை செய்யப்பட்டது.

இன்றைக்கும் அத்தனை மென்பொருள்களும் அந்த கம்பெனியில் இன்றைக்கும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் இத்தனைக்கும் நான் பள்ளிபடிப்பை முடிக்காதவன். இதனை செய்ய வைத்தது ராகு தசா தான் என்பதை மறக்ககூடாது.

இதில் என்ன சுவராசியமான தகவல் என்றால் சென்னையில் இதனை செய்ய ஆட்களை நான் தேடினேன் அப்பொழுது அவர்கள் எல்லாரும் இங்கு உள்ள கம்பெனியில் வேலை செய்பவர்கள் அவர்களின் ஒய்வு நேரத்தில் செய்து தர ஒப்புக்கொண்டார்கள். அதைப்போல் இதனை செய்தார்கள் ஆனால் குறித்த நேரத்தில் செய்து முடிக்கவில்லை ஏன் என்றால் ஒரு சிலர் வேலை காரணம் என்று சொன்னார்கள் கடைசி நேரத்தில் வேறு ஆட்களை வைத்து இதனை செய்து முடித்து அனுப்பினேன். அதன் பிறகு வரும் மென்பொருள்களின் ஆர்டர்களை மிகசிறந்தவர்களை கம்பெனியில் வேலை செய்யாத ஆட்களை வைத்து தேர்ந்தெடுத்து செய்தேன்.

இதனை நான் செய்ய சொல்லும் போது தான் எனக்கு தெரிந்தது இங்கு வேலை பார்ப்பவர்கள் எல்லாம் 2+2=4 என்று ஒரே குப்பையை அடித்துக்கொண்டு இருப்பவர்கள் என்று தெரிந்தது ஏன் என்றால் ஒரு சாப்ட்வேரை தவிர அடுத்த சாப்ட்வேர் இருக்கிறதா என்ன என்று கூட தெரிந்து வைத்துக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். அடுத்த கொடுமை என்ன என்றால் ஒரு டோமைனை தவிர அடுத்த டோமைனை பற்றி சிறிதும் அறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று அப்பொழுது தான் எனக்கு தெரிந்தது.

நான் முதலில் நாடியது தமிழ் நண்பர்கள் தான் அவர்களை என்ன சொல்லுவது என்றே எனக்கு தோன்றவில்லை எந்த வேலையும் எனக்கு குறித்த நேரத்தில் செய்து தரவில்லை. நம்ம ஆட்களிடம் ஒரு ஆர்டரை கொடுத்தால் அவர்களுக்கு நான் புரிய வைப்பதற்க்குள் என் தலை வெடித்துவிடும். அதன் பிறகு நான் நாடியது ஆந்திராவில் உள்ள நண்பர்களை தான் சும்மா சொல்லகூடாது கையில் காசு வாங்கினால் குறித்த நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பார்கள். எந்த தொந்தரவும் செய்யமாட்டார்கள் எவ்வளவு பிரச்சினையும் எளிதில் முடிப்பவர்கள். சில Embedded Systems ப்ராஜட்டுகளை ஐஐடியில் உள்ளவர்களை வைத்து முடித்து இருக்கிறேன்.

நண்பர்களே உங்களை குறை சொல்லவில்லை நான் தேடியபோது நம்ம ஆட்கள் திறமையானவர்கள் என் கண்ணில் படாமல் இருந்து இருக்கலாம் ஆனால் ஆந்திராவில் இருந்து பல பேர் வெளிநாடுகளில் போய் தனியாக நின்று ஜெயிக்கிறார்கள் அவர்களே கம்பெனியில் நேரடியாக சென்று நான் செய்து தருகிறேன் என்று வாங்கி செய்கிறார்கள் இதனாலேயே பல ப்ராஜ்ட்கள் இந்தியாவிற்க்கு வருவதில்லை.

நீங்கள் நினைக்கலாம் என்ன ப்ராட்ஜ்ட்கள் என்றால் ஐந்தாயிரம் பத்தாயிரத்திற்க்கு எடுத்து செய்து இருப்பார்கள் என்று நினைக்கலாம் பல லட்சங்கள்கொண்ட ப்ராஜட்கள் அவ்வளவு கடினமான சிஸ்டம் என்னால் செய்து முடிக்கப்பட்டது.

இன்றைக்கு பல நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி இது தான் நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று தான் கேட்பார்கள் என்னுடன் சென்னையில் இருப்பவர்களுக்கு தெரியும் அப்பொழுதும் சோதிடம் சைடில் சென்று கொண்டு இருந்தது. ராகு தசா சிறுவயதில் என்னை அந்தளவுக்கு உயர்த்தியது, ராகு தசா முடிந்தது அனைத்து தொடர்புகளும் அறுந்தது. குரு தசா வந்தது  அத்தனையும் சென்றது. குரு தசாவில் உங்களை சந்தித்தேன்.

ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் ஒரு தசா என்ன என்ன செய்யும் என்று உங்களுக்கு புரியவைப்பதற்க்காக தான் மேலை சொன்னது அனைத்தும் உண்மையான தகவல் எனது நண்பர்களை நீங்கள் கேட்டால் உண்மையை சொல்லுவார்கள்.

இன்றைக்கும் அத்தனை அறிவும் என்னிடம் இருக்கிறது ஆனால் அதில் ஈடுபட மனது வரவில்லை. அத்தனை தொடர்புகளும் நானாகவே தொடர்பை துண்டித்தேன் என்று தான் சொல்லவேண்டும்.

என்னிடம் தொடர்புகளில் இருந்தவர்கள் மிகப்பெரிய கம்பெனியில் இருப்பவர்கள். வெளிநாடுகளில் அரசியலில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தொடர்புகள் என்னிடம் இருந்தது ஆனால் இன்று ஒருவரையும் நான் தொடர்புகொள்வதில்லை.

இன்று அனைத்து தொடர்புகளும் ஆன்மீகவாதிகள் தான். ஒரு சில நேரங்களில் பழைய நினைப்பு வரும். ஏன் அப்படி வருகிறது என்றால் சனி ,ராகு, கேது தசா முடிந்த பிறகு அனைவருக்கும் ஒரு ஏக்கம் வரும்.

சோதிடம் வழியாக இன்று மிகப்பெரிய அளவில் தொடர்புகள் இருக்கிறது.நீங்கள் மென்பொருள் துறையில் இருந்தால் உங்கள் அறிவை நன்றாக வளர்த்து கொள்ளுங்கள் சும்மா ஏதோ மாதம் மாதம் சம்பளம் வருகிறது என்று உட்கார்ந்துக்கொண்டு இருக்காமல் அடுத்தது என்ன என்று யோசித்து முன்னேற வழியை பாருங்கள். நீங்கள் நினைக்கலாம் நம்மால் ஆர்டர்களை பெறமுடியாது அது எல்லாம் பெரிய கம்பெனிகள் தான் செய்யமுடியும் என்று உண்மை அது அல்ல நீங்கள் நல்ல தொடர்புகளை வைத்திருந்தால் எளிதில் ஆர்டர்களை பெறமுடியும்  என்ன குறித்த நேரத்தில் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் உடனே கோர்ட்க்கு தான் போவார்கள். நம்ம கோர்ட்டாக இருந்தால் சமாளித்துவிடலாம் அங்கு முடியாது.

நல்ல புதிய கண்டுபிடிப்பு இருந்தால் வெளிநாட்டு அரசாங்கத்திடமே நீங்கள் நேரிடையாக பேசி செய்து கொடுக்க முடியும். பல கோடிகள் லாபத்தை பெறலாம். நான் சொன்னது எல்லாம் உங்களுக்கு தெரியும் இருந்தாலும் என்னிடம் உள்ள அனுபவத்தை உங்களுக்கு தருகிறேன்.

குரு தசா ஆரம்பித்தது இதில் எல்லாம் சுத்தமாக நாட்டம் இல்லாமல் போனது. அதிலும் குரு தசா சுயபுத்தியில் பட்ட கஷ்டம் இருக்கிறதோ இப்ப நினைத்தாலும் வாழ்க்கையே வெறுத்துவிடும். எப்பொழுதுமே சுயபுத்தி கெடுதல் அதிகம் செய்வது நல்லது தான்.

நான் எப்படிபட்ட உயரந்த நிலையில் இருக்கும் போதும் ஒரு சாதாரணமான ஆட்கள் போல் தான் வாழ்ந்தேன். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் எளிமை என்பது எனக்கு பிடித்த ஒன்று. இன்று அனைத்து மனிதர்களையும் ஒரே மாதிரியாகதான் பார்க்கிறேன், அவனிடம் காசு இருக்கிறதா அல்லது காசு இல்லையா அவன் உயர்ந்தவனா அல்லது தாழ்ந்தவன என்று பார்ப்பதில்லை.

இப்பொழுது நான் நினைப்பேன் இது எல்லாம் என்னால் எப்படி செய்யமுடிந்தது என்று நினைத்து பார்ப்பேன். எல்லாம் தசா செய்த லீலைகள்.நான் சொன்னது அனைத்தும் உண்மை.

நன்றி நண்பர்களே அடுத்த பதிவில் பார்க்கலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

R.Srishobana said...

வணக்கம்,
எவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமாக அனைவராலும் எதையும் கற்காமல் செய்ய இயலாது...கணிணி பொறியியல் படித்தவர்களே செய்ய திணறும் இது போன்ற‌ பிராஜக்டை நீங்கள் செய்து முடித்தது உண்மையில் நம்ப இயலவில்லை...தங்களுக்கு அசாத்திய திறமை அதிகம் தான் என்று நினைக்கின்றேன்...அநேகமாக தங்களுக்கு மகரம் கடகத்தில் சர்ப்ப கிரகங்கள் அமந்திருக்கலாமோ என்று நினைக்கின்றேன்...நீங்களே கற்று கொள்ளும் ஆற்றலை பெற்றதால் அவ்வாறு இருக்கலாம் என்று நினைக்கின்றேன்...அதிலும் அது ராகு தசையில் நடந்ததால் அவ்வாறு இருக்கலாம்...என் கணிப்பு சரியா என்று தெரியவில்லை...

நான் இந்த‌ வ‌ள‌ர்பிறை திதியில் இருந்து "திரிபுர‌ சுந்த‌ரி" ம‌ந்திர‌ உச்சாட‌ண‌ம் செய்ய‌ தொட‌ங்க‌லாம் என்று நினைத்திருக்கிறேன்...

ந‌ன்றி...

rajeshsubbu said...

வணக்கம் என் வாழ்க்கையில் நடைபெற்றதை தான் எழுதியுள்ளேன். என்னுடைய ராசி மகரம். பலதுறையிலும் அனுபவத்தை பெறவைத்தது அதுவாக இருக்கலாம். தாங்கள் மந்திர அனுபவங்களை பெறுவதற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

KJ said...

Sir, what is special about magara rasi/lagna.