Followers

Saturday, November 3, 2012

சுவேதாஸ்வதர உபநிஷதம்



வணக்கம் நண்பரகளே சுவேதாஸ்வதர உபநிஷதம் இந்த உபநிஷதம் யஜீர் வேதத்தை சார்ந்த ஒன்று. எனது வேறுபதிவில் இருந்து உபநிஷதம் பகுதியை தருகிறேன் என்னடா உபநிஷதம் என்று உயிரை வாங்குகிறானே என்று நினைக்க வேண்டாம் ஒரு சிலர் இதை கேட்டதால் அவர்களுக்காக இந்த பதிவில் தருகிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் இதை படிக்கலாம் இல்லை என்றால் விட்டுவிடலாம்.

இந்த உபநிஷதம் ஆத்மா தாகம் உள்ள மாணவர்கள் முனிவர்களை நாடி தங்களின் சந்தேகங்களை தீர்ப்பது போல் அமைத்து இருக்கிறார்கள். 

இப்பொழுது உள்ள மாணவர்கள் தங்கள் பாடங்களின் சந்தேகங்களை கூட ஆசிரியர்களிடம் கேட்பதில்லை அப்பொழுது பாடங்கள் இந்த மாதிரி இருந்திருக்க வேண்டும். இந்த பாடங்களை தன்னுடைய நன்மாணவர்களுக்கும் தன் மகனுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும் என்று சுவேதாஸ்வரர் சொல்லியுள்ளார். நான் அதில் உள்ள சில கருத்துக்களை உங்களுக்கு தருகிறேன்.

இப்பொழுது எல்லாம் இந்த மாதிரி உபநிஷதம் இருக்கின்றது கூட யாருக்கும் தெரியவாய்ப்பு இல்லை யாராவது இதைப்பற்றி படித்தவர்களுக்கு நினைவுக்கு வரலாம். இந்த மாதிரி உபநிஷதம் எல்லாம் நமது மதத்தோடு ஒன்றியவை அந்த வேதங்களை கூட நம்ம ஆளுங்க படித்திருக்க வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

நம்ம ஆளுங்க யாராவது அயல்நாட்டுக்காரன் புக் எழுதினால் அதை வாங்க புக் கடை வாசலில் கியூவில் நிற்பான் இங்கு உள்ள திருக்குறளை படித்து இருக்கமாட்டான் என்ன செய்வது சரி விசயத்திற்க்கு வருகிறேன்.

இறைவன் தன் படைப்பில் மறைத்து வைக்கப்பட்ட தெய்வ சக்தியை தன்னுடைய ஞானத்தால் முனிவர்கள் கண்டார்கள்.

காலம் உள்பட மனிதனின் உயிர்வரைக்கும் ஆள்வது ஒருவனே மிகப்பெரிய மாயையினால் ஒரே வட்டமாக செய்யப்பட்ட அவனது சக்தியின் சக்கரத்தை அவர்கள் கண்டார்கள் உயிர்கள் அனைத்தும் வாழ்ந்து மறைகின்ற இந்த மிகப் பெரிய படைப்பு சக்கரத்தில் ஓய்வேயில்லாது பறந்து கொண்டிருக்கும் ஒர் அன்னத்தை போல மனித ஆத்மா உயிர் சுழன்று சுழன்று அலைகின்றது

இறைவன் மிகத்தொலைவில் இருப்பதாகவே அது நினைக்கிறது ஆனால் எப்பொழுது இறைவனின் அன்பு அதன் மேல் இறங்கி வருகிறதோ அத்தருணம் தன் சொந்த வாழ்க்கை எது என்று அது அறிந்துகொள்கிறது என்று சொல்லுகிறார்.

பயங்கரம் நிறைந்த ஆறுகளைப் பாய்ந்து கடக்கும் ஓடம் போல் அதி பயங்கரமான பிறவிப் பெருங்கடலைக் கடக்க "ஓம்" எனும் பிரம்ம மந்திரம் உதவுகின்றது. 

அந்த ஓங்கார ஒலியில் நாம் அமிழ அமிழ நாம் பிரம்மத்தையடைந்தோமா பிரம்மமே நம்மை வந்தடைந்ததா என்று சரியாகப் புரியாத ஒரு நிலை ஏற்படும் அதுவே ஒவ்வொருவரும் அடைய வேண்டிய பெருநிலை என்று சொல்கிறார்.

இந்த நிலையை அடைந்தால் நீங்கள் மரணத்தை வெல்லலாம் என்றும் சொல்லுகிறார். இந்த காலத்தில் யார் மரணத்தை வெல்ல நினைக்கிறார்கள் நினைப்பவர்களுக்கு இவர் சொல்லுவது புரியும்.

உண்மையில் அனைவருக்கும் தாகம் இருக்கும் அந்த தாகத்திற்க்கு சரியான தண்ணீர் தருவதற்க்கு ஆட்கள் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அப்படி தண்ணீர் தருகிறேன் என்று சொல்லி தண்ணீரை தருபவர்கள் அசுத்த நீரை தான் மக்களுக்கு தருகிறார்கள். இதை ஆராய்சி செய்து தருகிறேன் என்று சொல்லுகிறார்கள். காலத்திற்க்கு ஏற்றார் போல் கருத்தை தரலாம் அதற்க்காக மூலத்தை மாற்றினால் முட்டாளாகதான் மக்கள் திரிவார்கள்.

ஓம் என்ற வார்ததை வைத்து நீங்கள் பிறவிக்கடலை தாண்டலாம் என்று உபநிஷதம் சொல்லியுள்ளது. அந்த ஓம் என்ற வார்த்தையை ஒழுங்காக பயன்படுத்தினால் மட்டுமே பிறவிக்கடலை தாண்டமுடியும் உங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றி போட்டு மந்திரத்தை பல்லாங்குழி விளையாட முடியாது.

உங்களுக்கு இந்த உபநிஷதம் வழியில் சொல்லுவது என்ன என்றால் நல்ல மந்திரங்களை எடுத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உங்களின் பிறவிக்கடலை தாண்ட சுவேதாஸ்வதர உபநிஷதம் மூலம் வழிகாட்டப்படுகிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: