Followers

Saturday, December 22, 2012

கோச்சாரபலன் சனி பகுதி-1


சனிபகவான் ஜன்மராசியில் வரும்போது உடல் நிலை கெடும். வறுமை அளவுக்கு மீறி போகும். குடும்பத்தில் துக்கரமான சம்பவங்கள் நிகழும். இது ஏழரை சனியின் உச்சகட்டம் என்று தான் சொல்லுவார்கள் அந்தளவுக்கு உங்களை உடலாலும் மனதாலும் வாட்டிவிடும். தற்கொலை செய்துக்கொள்ளும் அளவுக்கு உங்களை கொண்டு வந்து விட்டுவிடும் இருந்தாலும் மரணத்தை அந்தளவுக்கு ஏழரை சனி நடக்கும்போது கொடுத்துவிடமாட்டார். 

குடும்பத்தில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்களின் துணைவரால் ஒரளவுக்கு நிம்மதி பிறக்கும். பயணங்கள் செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செல்லுவது நல்லது இல்லையென்றால் விபத்தை சந்திக்க வேண்டிவரும். 

நீங்கள் ஏதாவது தொழில் செய்துக்கொண்டு இருந்தால் அந்த தொழிலில் பிரச்சினை ஏற்படும் நீங்கள் செய்கின்ற தொழில் ஒரளவுக்கு வருமானம் தரும். நீங்கள் வேலையில் இருந்தீர்கள் என்றால் உங்களின் உடல்நிலை அந்த வேலைக்கு ஒத்துக்கொடுக்காது அதனால் உங்களின் மேல் அதிகாரிகளின் கோபத்திற்க்கு ஆளாகலாம்.எதிரிகளின் கை ஓங்கும் அவர்களால் சண்டை சச்சரவு ஏற்பட்டு கைகலப்பு வரை கொண்டுவந்து விட்டுவிடும்.

சனி பகவான் இரண்டாமிடத்திற்க்கு வரும்போது ஏழரைசனியின் தாக்கம் பெரும்மளவு குறையும் என்று எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் உள்ள நபர்களிடம் விட்டுக்கொடுத்துச்செல்வது நல்லது. சிறு வாதங்கள் கூட பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடும். 

இரண்டாவது வீட்டிற்க்கு சனி வந்தவுடன் ஏதாவது ஒரு சுபநிகழ்ச்சியாது செய்துவிடுவது நல்லது அப்படி இல்லை என்றால் ஏதாவது இறப்பு நிகழ்ந்து விடும் ஏன் என்றால் வீட்டில் கூட்டம் கூட்ட வேண்டும் என்பதால் அப்படி செய்துவிடும். ஒரு சிலருக்கு எதிர்பாராத வகையில் சொத்து சேர்ப்பும் பொருள்வரவும் வரும். எதிர்களின் செயல் சிரமம் தந்தாலும் கடுமையான விளைவுகளை தந்துவிடாது. 

நண்பர்களின் உதவி ஒரளவு உங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அடுத்தவர்களுக்கு பணம் கொடுத்தால் திரும்பிவராது. அதனை கேட்கும் போது வீணான சிரமங்களுக்கு ஆட்படுவீர்கள் அதனால் அடுத்தவர்களுக்கு பணத்தை கொடுக்காதீர்கள். தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணவிஷயத்தில் அக்கறையுடன் கையாளுவது மேலும் நன்மைபயக்கும்.

சனிபகவான் மூன்றாமிடத்திற்க்கு வரும்போது அப்பாடா ஏழரை சனி போய்விட்டதுடா என்று நிமிர்ந்து உட்காருவீர்கள். உங்களின் எதிரிகள் அழிவார்கள்.  கடந்த காலத்தில் இருந்த துன்பம் குறைந்து நல்ல நிலையை பெறுவீர்கள். 

உங்களின் குடும்பத்திற்க்க தேவையான பொருளாதார வசதி பெருமளவு கிடைக்கும். புதிய சொத்துக்கள் மற்றும் வீடுகள் வாங்குவீர்கள். மேற்படிப்புக்கு உதவி கிடைக்கும். பங்கு சந்தை வழியாக பணம் வருவதற்க்க வாய்ப்பு இருக்கிறது. 

உங்களின் தொழிலி்ல் அதிக கவனம் செலுத்தி உங்களின் தொழில் சிறக்கும். உங்களின் தொழிலால் வாழ்க்கையில் புதிய திருப்பம் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் நல்ல நிலைமை காணப்படும். உங்களின் சேமிப்பு உயர்வதால் உங்களுக்கு தன்னம்பிக்கை உயரும்.நீங்கள் செய்யும் வேலையில் கவனம் செலுத்தி உங்களின் மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். பதவி உயர்வுக்கு வழி உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

No comments: