Followers

Wednesday, December 26, 2012

கோச்சார பலன் சனி பகுதி-3


சனிபகவான் ஏழாமிடத்திற்க்கு வரும்போது கண்டசனியாக வரும் அதனால் உங்களின் உடல்நிலையில் அக்கறை தேவை. உடல்நிலை பிரச்சினை ஏற்படுத்தும். உடல்நிலையில் மெத்தனபோக்கு இருந்தால் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் வழியில் கருத்து வேறுபாடு ஏற்படும். கடன் ஏற்படும் கடனால் துன்பம் ஏற்பட்டு மனக்கவலைக்கொள்ள செய்யும். குடும்பத்தில் சச்சரவு ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. புதிய கூட்டுத்தொழில் ஆரம்பித்தால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்வது நல்லது. தனிநபர் விசயங்களில் தலையிடுவது அவர்களுக்கு கையொழுத்து இடுவது தவறு. 

சனிபகவான் எட்டாமிடத்திற்க்கு வரும்போது அஷ்டமசனியாகிறார் இது கஷ்டகாலம் என்றே சொல்லலாம். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. நீங்கள் அவமானபட நேரிடும் சம்பவங்கள் நடைபெறும். கடன் தொல்லை கழுத்தை நெரிக்கும். அடிக்கடி கடின அலைச்சல் ஏற்படும். நாள் முழுவதும் வேலை செய்தாலும் கடைசியில் கூலி கிடைப்பது என்பது அரிதான காரியம். தொழில் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஏதாவது சொத்து ஆவணங்கள் வைத்திருந்தால் அடுத்தவர்களிடம் கொடுத்துவிடாதீர்கள்.

சனிபகவான் ஒன்பதாவது இடத்திற்க்கு வரும்போது அப்பாட அஷ்டமசனியிருந்து தப்பித்தீர்கள் என்று நினைக்க தோன்றும். நிம்மதி பிறக்கும். தந்தையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். உங்களின் தொழில் உயரும். அந்நிய நாடு செல்ல வாய்ப்பு உருவாகும். அடுத்தவர்களைப்பற்றி பேசக்கூடாது வயதானவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் செய்பவர்கள் மிதமான வளர்ச்சியை காணலாம். கேட்ட கடன் கிடைக்கும். தொழிலை மேம்படுத்தும் வழியில் செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. குலதெய்வம் மற்றும் புண்ணியஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்தில் கெட்டபெயர் ஏற்படலாம். உங்களை ஊர்மக்கள் மதிக்கமாட்டார்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: