Followers

Wednesday, December 26, 2012

ஆன்மீக அனுபவங்கள் 38


வணக்கம் நண்பர்களே! 
                              ஆன்மீக அனுபவங்களை படித்துவிட்டு அதில் ஈடுபடவேண்டும் என்று பல நண்பர்கள் ஆர்வத்துடன் தொடர்பு கொண்டு வருகிறார்கள். அதனைப்பற்றி சொல்லுவதற்கே இப்பதிவு.

இந்த காலக்கட்டத்தில் இளைஞர்கள் இதில் ஈடுபட நினைப்பது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. அதிலும் கணிணி துறையில் இருப்பவர்கள் அதிக பேர் தொடர்பு கொள்கிறார்கள். இதில் பெண்களும் அதிகமாக தொடர்புக்கொள்கிறார்கள். 

நான் முதலில் இது ஆண்களுக்கு மட்டும் கற்று தரவேண்டும் என்று நினைத்திருந்தேன் பிறகு பெண்களும் பல பேர் என்னை தொடர்பு கொண்டதால் நேற்று இரவு எனது குரு நாதரிடம் இதனைப்பற்றி பேசி ஒரு முடிவு எடுத்து பெண்களுக்கும் கற்று தர முடிவு எடுத்தேன். பெண்களை ஒதுக்குவது தவறு அல்லவா அதனால் இந்த மாற்றம். எனது இமெயில் முழுவதும் இப்பொழுது மந்திர பயிற்சி பெறுவதற்க்கு உள்ள மெயிலாகதான் இருக்கிறது.

இது எனக்கே ஆச்சர்யமாக உள்ளது தெருவுக்கு ஒரு சாமியார்கள் மடத்தை கட்டிக்கொண்டு யாரும் வருவார்களா என்று பார்த்துக்கொண்டு இருக்கின்ற காலத்தில் நம்மை தேடி இத்தனை பேர்கள் வருகிறார்களே என்று நினைக்க தோன்றுகிறது.

நம்ம பிளாக்கை படிப்பவர்கள் அனைவரும் என்னிடம் நன்றாக பேசக்கூடியவர்களா இருக்கிறார்கள் இதில் யாரை தேர்ந்தேடுப்பது யாரை விடுவது என்பது எனக்கு மிகப்பெரிய பிரச்சினையாகிவிட்டது. ஒருத்தரை விட்டாலும் எனக்கு பிரச்சினை தான். முடிந்தளவுக்கு அனைவருக்கும் ஏற்பாடு செய்கிறேன். 

உங்களுக்கு முதல் தகுதி நீங்கள் அனைத்துவித ஆன்மீக பயிற்சியிலும் ஈடுபட்டு இருக்கவேண்டும். ஏன் என்றால் அதில் எல்லாம் ஒன்றும் நடைபெறவில்லை என்றால் கடைசியில் மட்டுமே இதனை நீங்கள் எடுக்கவேண்டும். இதனை செய்துக்கொண்டு நான் வேறு ஆன்மீக பயிற்சி செய்கிறேன் என்று சொன்னால் அனுமதி கிடையாது. அதனால் அனைத்தும் முடித்துவிட்டு வாருங்கள்.

பல சாமியார்கள் இந்தியா நேபாளம் போன்ற நாடுகளில் நடந்தே அனைத்து புனித ஸ்தலங்களுக்கும் சென்று தரிசித்துவிட்டு புனித நதிகளில் குளித்துவிட்டு பல காடுகளிலும் தவம் இருந்து ஒரு உண்மையான விஷயத்தை எடுத்து கொடுத்து இருக்கிறார்கள் அதனை உங்களுக்கு தரபோகிறேன். அவர்களின் ஆத்மா புனித ஆத்மா அவர்கள் தரும் விஷயத்தை தவறாக பயன்படுத்தகூடாது. அபபடி பயன்படுத்தினால் உங்களின் கர்மாவை தொலைக்கமுடியாது.

நீங்கள் சென்னையில் இருப்பது நல்லது. ஏன் என்றால் நான் சென்னையில் தான் இருக்கிறேன். இதனை நீங்கள் செய்யும்போது உங்களின் உடலில் பல மாற்றங்களை நடைபெறும் அதனை நான் கவனிக்கவேண்டும். வெளியூரில் இருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்கிறேன்.  

நீங்கள் இதனை செய்வதற்க்கு பல கர்மாக்கள் உங்களை தடுக்கின்றன அதனால் நீங்கள் முதலில் என்னை வந்து நேரில் பார்த்துவிடுங்கள் அதன் பிறகு ஒரு நாள் நான் ஒரு சாமியாரிடம் கூட்டிக்கொண்டு அவரிடம் ஆசிவாங்க செய்கிறேன் அப்படி செய்தால் உங்களின் கர்மா குறைய வாய்ப்பு இருக்கிறது. அவரிடம் கூட்டமாக செல்லவேண்டாம் இரண்டு பேர் அல்லது ஒருவர் என்று போய் பார்த்துவிட்டு வரலாம்.

நீங்கள் முதலில் என்னை பார்க்கவருவதற்க்கே பல தடங்கள்களை சந்திக்கவேண்டியிருக்கும் ஏன் என்றால் பிறவி கர்மா உங்களை கடுமையாக தடுக்கும். அதனை மீறி நீங்கள் வந்துவிடுங்கள்.

ஒரு பெண் அறிவிப்பு வெளிவந்த அன்று சென்னையில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசினார், நான் பல தவறுகள் செய்து இருக்கிறேன் என்னால் இதனை செய்யமுடியுமா என்று கேட்டார். ஒரு உண்மை என்ன என்றால் நீங்கள் செய்யும் தவறு இந்தபிறவியில் உங்களை தாக்காது அது சேவிங் அக்கோண்டில் வைத்து அடுத்த பிறவியில் உங்களை தாக்கும் என்பதே உண்மை. நீங்கள் செய்தது தவறு என்று உங்களுக்கு தெரிந்துவிட்டது கவலையை விடுங்கள் நீங்கள் தாராளமாக செய்யலாம். 

நீங்கள் எப்படிபட்ட மனிதர்களாகவும் இருந்து இருக்கலாம் அதனைப்பற்றி கவலையில்லை இதனை செய்தபிறகு நீங்கள் நல்லவராக மாறிவிடுவீர்கள் என்பதே உண்மை.

நீங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பீர்கள். இதனை செய்து பாருங்கள் உங்களின் பொருளாதார தேவை அனைத்தும் தீர்ந்துவிடும் ஏன் சொல்லுகிறேன் என்றால் நான் முதலில் செய்ய சொல்லுவதே குபேரனை பார்த்து தான் செய்யசொல்லுவேன். இதனை ஒழங்காக செய்துவிட்டால் லட்சுமி தேவி உங்களின் வீட்டில் நிரந்தரமாக தங்கிவிடுவாள். உங்களால் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களும் பயனடைய முடியும்.

செல்வத்தை முதலில் கொடுத்துவிட்டால் உங்களின் முக்கால்வாசி ஏக்கம் தீர்ந்துவிடும் என்பதே உண்மை. 

முதலில் புண்ணிய ஆத்மாவின் தரிசனத்தை உங்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன் அதன் பிறகு பயிற்சியில் ஈடுபடுவதை முடிவு செய்யலாம்.

அடுத்த பதிவில் விரிவாக தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  


No comments: