Followers

Wednesday, December 26, 2012

ஆன்மீக அனுபவங்கள் 40



வணக்கம் நண்பர்களே !

பிராணாயாமம் மற்றும் மந்திரங்களை சொல்லும் போது நமது கர்மா தடைசெய்கிறது அதற்கு வழி சொல்லுங்கள் என்று நமது நண்பர் ஒருவர் திருச்சியில் இருந்து கேட்டுருந்தார்.

நாம் நமது மூலத்தை தொடும் எந்த செயல் செய்தாலும் அதனை செய்கின்ற செயல் அனைத்திற்க்கும் தடங்கல் வருவது இயற்கை. நீங்கள் பிராணாயாமமோ அல்லது மந்திரங்கள் சொல்லும்போது பிரச்சினை ஏற்பட்டால் அதாவது தடங்கல் ஏற்பட்டால் அதற்கு ஒரு மந்திரம் இருக்கிறது அதனை சொல்லிவிட்டு மீண்டும் செய்தால் தடங்கல் ஏற்படாது. இதனை சொல்லுவதும் 108 முறை சொல்லவேண்டும் அப்படி சொல்லிவிட்டு மீண்டும் நீங்கள் ஆரம்பித்தால் தடையின்றி செய்யலாம். மந்திரம் இது தான்

ஓம் ஹ்ரீம் கபாலீனி
குல குண்டலியை
சித்திம் தேஹி பாக்யம்
தேஹிதேஹி ஸ்வாஹா

என்று 108 முறை சொல்லிவிட்டு செய்தால் உங்களின் பிராணாயாமம் மற்றும் மந்திரசித்தி கிடைக்கும்.

என்ன நண்பர்களே கர்மதடங்கல் நீங்க வழி சொல்லிவிட்டேன் செய்வீர்களா?


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: