Followers

Thursday, December 27, 2012

ஆன்மீக அனுபவங்கள் 41



வணக்கம் நண்பர்களே !
                                 ஆன்மீக அனுபவத்தில் ஒரு நல்ல கருத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

நமது நண்பர்கள் என்னிடம் வந்து பேசும் போது சொல்வார்கள் சார் எனக்கு அம்மன் தரிசனம் கொடுத்தது சிவன் எனக்கு தரிசனம் கொடுத்தார். பெருமாள் எனக்கு தரிசனம் கொடுத்தார் என்று பல நண்பர்கள் என்னிடம் சொல்லுவார்கள் அப்படியா பரவாயில்லையே நீங்கள் புண்ணியவான் தான் எனக்கு மட்டும் அப்படி தரிசனம் கொடுக்க மாட்டிங்கிறார்கள் எப்படி சாத்தியம் என்று கேட்டேன்.

நானும் என்ன என்னமோ செய்து பார்க்கிறேன் ஒருவர் கூட என்னை வந்து பார்க்க வருவதில்லை எப்படி உங்களை வந்து சந்தித்தார் எப்படி உங்களை ஆசீர்வதித்தார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கேட்பேன். நாங்கள் மனதில் அவரை நினைத்து காலையில் பூஜை செய்வோம். இரவி்ல் எங்கள் கனவில் வந்து எங்களை அவர் ஆசீர்வதிப்பார் என்று சொல்வார்கள். 

இப்பொழுது வெளிஉலகில் என்ன நடக்கிறது என்றால் கற்பழிப்பு சீசன். உள்உலகில் என்ன சீசன் என்றால் சித்தர்கள் தரிசனம் நடக்கிறது. அட நாமும் ஆன்மீக அனுபவங்கள் எல்லாம் எழுதுகிறோம் நாமும் இவர்களை தரிசித்தால் ஏதாவது பதிவுகள் எழுதலாம் என்று பல வழிகளை செய்து பார்த்தேன். ஒன்றும் நடைபெறவில்லை எனக்கு ஒரு சந்தேகம் கிளம்பஆரம்பித்துவிட்டது என்னடா நம்ம அதிகமாக கர்மம் செய்து இருக்கிறோமோ அதனால் நமக்கு கிடைக்கவில்லையோ என்று மனதில் ஒரு கவலை. மோசமான ஆட்களுக்கு கூட தரிசனம் தருவார்கள் என்று சொன்னார்களே அப்ப மோசமானவர்களைவிட நாம மோசமாக இருக்கிறோமா நமக்கு ஏன் தரமாட்டேன்கிறார் என்று மனதில் கவலை கூடியது.

சரி நமக்கு தான் குரு இருக்கிறாரே அவரிடமே இதனை கேட்டுவிடலாம் என்று கேட்டால் அவர் நான் சந்நியாசியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது இதுவரை சித்தர்களை பார்த்ததில்லை என்று சொன்னார்.

என்னடா இது இவருக்கு சித்தரைப் பற்றி தெரியவில்லை நமக்கு தான் நிறைய சாமியார்களை தெரியுமே அவர்களிடம் இதனைப்பற்றி கேட்கலாம் என்று பல சாமியார்களை தொடர்புக்கொண்டு கேட்டேன். அவர்கள் என்னிடம் எங்களுக்கு தெரிவதில்லை அவர்கள் பெயர்களை சொல்லு பார்க்கலாம் என்று கேட்டார்கள் நான் பெயர்களை சொன்னேன் அவர்கள் சொன்னார்கள் அவர்கள் எல்லாம் எங்களுக்கு தெரியமாட்டார்கள் என்று சொன்னார்கள். ஏன் என்று கேட்டேன்.அவர்கள் சொன்னார்கள் எப்படிடா தெரிவார்கள் நாங்கள் வடநாட்டு சாமியார்கள் அவர்கள் தமிழ்நாட்டு சாமியார்கள் இருவருக்குள்ளும் பேசிக்கொள்ளுவது கஷ்டம் மொழி பிரச்சினை. எப்படி எங்களுக்கு தெரிவார்கள் என்று கேட்டார்கள். 

போச்சுடா என்ன செய்வது இருந்த ஒரு நம்பிக்கையும் போய்வி்ட்டது. நான் இருந்தாலும் நம்பிக்கையை மட்டும் விடவில்லை நான் தமிழன் தான். தமிழர்கள் சொல்லுவதை நான் நம்புகிறேன் நமது தேடுதல் தான் சரியில்லை என்று நினைக்கிறேன் அதனால் பல பயிற்சியை இன்றும் செய்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்ன ஒன்று எனக்கு நேரில் வரவேண்டும். சாமியாக இருந்தாலும் சரி சித்தர்களாக இருந்தாலும் சரி பகலில் அல்லது இரவில் நான் விழித்துக்கொண்டு இருக்கும்போது வரவேண்டும் என்று நினைப்பவன் அப்படி இல்லை என்றால் நம்பமாட்டேன்.

கனவில் வருவது நான் நம்புவது கிடையாது. ஏன் என்றால் ஒருவன் எதைப்பற்றி சிந்திக்கிறானோ அந்த உருவம் அவன் கனவில் வரும் என்று மேலைநாட்டில் உள்ள மனோதத்துவ நிபுணர்கள் அறிந்து சொல்லிவிட்டார்கள். 

எப்படி என்றால் நானும் எனது நண்பரும் ஒரே அறையில் தங்கியுள்ளோம் இரவு 1 மணி இருக்கும் எனது நண்பர் சமந்தா வந்துவிட்டுடா என்று சத்தம் போட்டு கதவை திறடா என்று சொன்னான் என்னடா இப்படி சொல்லுகிறானே  ஏதோ பகலில் படம் பார்த்து இருப்பான் போல என்று நினைத்த டேய் படுடா என்று சொன்னேன் மீண்டும் திறடா என்று சத்தம் போட்டான், நான் கதவை திறக்கிறேன் நடிகைக்கு பதில் நாய் தான் நிற்கிறது. பகலில் நீங்கள் ஈடுபடும் செயலில் அதிக கவனம் வைத்தால் அது இரவில் கனவாக வந்துவிடும் அவ்வளவு தான் இது.

இந்த நிகழ்வு போல தான் நீங்கள் சிவனை பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால் கனவில் அவர் வருவது போல் தோன்றும் அதற்க்காக சிவன் உங்கள் வீ்ட்டிற்க்கு வந்தவிட்டார் என்று அர்த்தம் இல்லை. என் நண்பன் சொன்னது போல நடிகை வீட்டிற்க்கு வருவதுபோல கனவு கண்டால் அந்த நடிகை எங்கள் அறைக்கு வந்துவிட்டால் என்று அர்த்தமா?

எந்த நிகழ்வும் நம் கண் எதிரில் நடந்தால் தான் அதற்கு சக்திவாய்ந்தது என்று அர்த்தம். என்ன தான் இருந்தாலும் இனப்பாசம் எனக்கு இருக்கிறது அதனால் தமிழன் சொல்லும் சித்தர்களைப்பற்றி பார்த்துவிடலாம் என்று எனது ஆராய்ச்சி தொடர்கிறது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: